Tag: #tamilchristians

விசாகப்பட்டினம் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயராக உடுமலா பால சௌரி ரெட்டி- திருத்தந்தை நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் உடுமலா பால சௌரிரெட்டி (70) அவர்களை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார். ஏப்ரல் 13, 2013 அன்று வாரங்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு,…

புனித ஜோசப்பின் பகிதா

மனித கடத்தலுக்கு ஆளான புனித ஜோசப்பின் பகிதா அவர்களின் வாழ்க்கை வரலாறானது, இறைவனின் அருளால் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறவும், தேவையில் இருப்பவர்களுக்கு எதிர்நோக்கின் தூதுவர்களாக மாறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது என்று குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை…

கடவுள் மற்றும் இயற்கையின் கொடைகள் நாம் – திருத்தந்தை பிரான்சிஸ்

நாம் அனைவரும் கடவுள் நமக்குக் கொடுத்த அருள் மற்றும் இயற்கையின் கொடைகள் என்றும், கடவுளது நமக்காக வைத்திருக்கும் திருவுளம், மறைபொருளுக்குள் அச்சமின்றி நுழைந்து நம்மையே முழுவதும் இறைத்திருவுளத்திற்காக அர்ப்பணிப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார் . பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை முதல்…

நாம் ஒவ்வொருவரும் நிறைந்த அன்பின் சாட்சிகளாக இருக்க வேண்டும்

கடவுளையும் அயலாரையும் நோக்கிச் செல்லும் இவ்வுலகப் பயணத்திற்கு வழித்துணையாகவும், புகழ்ச்சி நிறைந்த செபமாகவும் மாநாடுகள் இருக்க வேண்டும் என்றும், நிறைந்த அன்பின் சாட்சிகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்வலியுறுத்தினார் . இஸ்பெயினிலுள்ள Seville நகரில் சிறப்பிக்கப்பட்ட ‘சகோதரத்துவம்…

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர…

ஜெனின் நகர மக்கள் அச்சத்திலேயே வாழ்வதாக அப்பகுதி அருள்பணியாளர்

வெஸ்ட் பேங்க் பகுதியின் ஜெனின் என்ற பாலஸ்தீனிய நகரை இஸ்ராயேல் இராணுவம் 17 நாட்களாக ஆக்ரமித்துவரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு வாழ்வதாகவும், உணவு வாங்கக்கூட வெளியில் செல்ல அஞ்சுவதாகவும் ஜெனின் பங்குகுரு Amer Jubran கவலையை வெளியிட்டார் .…

நைஜீரிய தலைநகரில் அருள்பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவிலுள்ள வெரித்தாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர் பிப்ரவரி 6ஆம் தேதி, வியாழக்கிழமையன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளார். இந்த அருள்பணியாளர் சார்ந்திருக்கும் Shendam மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அருள்பணி Cornellus Manzak Damulak என்பவர் சுமா என்ற…

அடிமை நிலைகளை அகற்ற உழைக்கும் ‘தலித்தா கும்’ அமைப்பு

மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் செபத்திற்கான உலக நாள் ஏற்பாட்டாளர்களான ‘தலித்தா கும்’ என்ற கத்தோலிக்க அமைப்பின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பின் சேவைக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார். மனிதர்களை வியாபாரப் பொருட்களாக…

இரக்கம்நிறை அரசியலுக்கு இலங்கை கர்தினால் இரஞ்சித் அழைப்பு!

இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மக்களை ஒடுக்குவதை விடுத்து, இரக்கம், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் மீதான அன்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. பிப்ரவரி 1, சனிக்கிழமையன்று,…

2024-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சயத் விருது!

2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் ‘உலக மத்திய சமையலறை’ (World Central Kitchen) என்ற உணவு உதவி அமைப்புக்கு…