நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவிலுள்ள வெரித்தாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர் பிப்ரவரி 6ஆம் தேதி, வியாழக்கிழமையன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
இந்த அருள்பணியாளர் சார்ந்திருக்கும் Shendam மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அருள்பணி Cornellus Manzak Damulak என்பவர் சுமா என்ற இடத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார்.
அருள்பணி Cornellus அவர்கள் கடத்தப்பட்ட Bwari பகுதி ஏற்கனவே பலர் கடத்தப்பட்ட ஓர் இடமாகும். இங்கிருந்து பல விவசாயிகள் கடத்தப்பட்டு பெரிய அளவில் மீட்புத்தொகை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.