இறைவனை நம் அருகில் கொண்டு நம் அனைத்து ஏமாற்றங்களையும் வெற்றிகண்டு, ஒவ்வொரு நொடியையும் நாம் மீண்டும் துவக்குவதற்கான வாய்ப்பாக நோக்கமுடியும் என சனவரி 31, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார்.
நம் அனைத்து ஏமாற்றங்களையும், மீண்டும் எழும்பிவருவதற்கான வாய்ப்பாக இறைவனின் துணையுடன் மாற்ற முடியும் என அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிக மோசமான நேரங்களிலும் நாம் நமக்குள்ளேயே முடங்கிவிடவேண்டாம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார். நாம் நமக்குள்ளேயே முடங்கிவிடாமல், நம் துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் பகிர்ந்து ஒருவருக்கொருவர் அவைகளைத் தாங்கிக்கொள்ள உதவுவோம் என மேலும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில்