உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை

முன்னுரை
முன்னுரை
1. கிறிஸ்து ஆண்டவர் தம் உடலையும் இரத்தத்தையும் பலியாக நிறுவிய பாஸ்கா இருவிருந்தைச் சீடர்களுடன் கொண்டாடத் தேவையான வசதிகள் அமைந்த ஒரு பெரிய உணவு அறையை ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார் (லூக் 2 2:12), இக்கட்டளை தனக்கும் தரப்பட்டதாகத் திரு அவை என்றுமே கருதி வந்துள்ளது, எனவேதான் திரு அவை தாய்மைமிகு நற்கருணைக் கொண்டாட்டத்துக்கு ஏற்ற மக்களின் உளப்பாங்கு, இடங்கள், சடங்குகள், பாடங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்துத் தந்திருக்கின்றது. இன்று இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் விருப்பத்துக்கு இணங்க விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றின்படி உரோமை வழிபாட்டு முறைத் திரு அவை திருப்பலிக் கொண்டாட்டத்துக்கு இனி புதிய திருப்பலி நூலைப் பயன்படுத்த வேண்டும். இது திரு அவையின் அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் சான்று பகர்கின்றது; நற்கருணை என்னும் ஒப்பற்ற மறைநிகழ்வின் மீது திரு அவை கொண்டுள்ள நம்பிக்கையையும் மாறாத அன்பையும் வெளிப்படுத்துகின்றது; மேலும் புதியன சில புகுத்தப் பெற்றிருப்பினும், திரு அவையில் தொடர்ந்து ஒருங்கிணைந்துவரும் மரபை உறுதிப்படுத்துகின்றது.
மாறாத நம்பிக்கைக்குச் சான்று
2. திருப்பலியின் பலி இயல்பைத் திரெந்துச் சங்கம் முறைப்படி அறுதியிட்டுக் கூறியது;” இப்போதனை அனைத்துத் திரு அவையின் மரபுக்கும் ஒத்திருந்தது; இதே போதனையைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்கமும் அறிக்கையிட்டுள்ளது. திருப்பலி பற்றி இச்சங்கம் மிகுந்த பொருள் ஆழத்துடன் கூறுவதாவது: “நம் மீட்பர் தமது இறுதி இரவு விருந்துப் பந்தியில் தம் உடல், இரத்தம் ஆகியவற்றாலான நற்கருணைப் பலியை ஏற்படுத்தினார்; தாம் மீண்டும் வருமளவும் எல்லாக் காலங்களிலும் தமது சிலுவைப் பலியை நிலைபெறச் செய்தார். தம் அன்பு மண மகளாம் திரு அவையிடம் தமது இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லவும் இப்பலியை ஏற்படுத்தினார்.”
இவ்வாறு சங்கம் போதிப்பதைத்தான் திருப்பலியின் பாடங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. புனித லியோவின் திருப்பலி மன்றாட்டு நூலில் உள்ள “இந்நினைவுப் பலியைக் கொண்டாடும்போதெல்லாம் நமது மீட்புப் பணி நிறைவேற்றப்படுகின்றது” என்னும் கூற்று தெளிவாகக் குறிப்பிடும் போதனை, நற்கருணை மன்றாட்டுகளில் பொருத்தமாகவும் திருத்தமாகவும் விளக்கம் பெற்றுள்ளது. எவ்வாறெனில், இம்மன்றாட்டுகளில் மீட்பின் மறைநிகழ்வை நினைவுகூரும்போது, மக்கள் அனைவரின் பெயராலும் அருள்பணியாளர் கடவுளை நோக்கி நன்றி செலுத்துகின்றார்; உயிருள்ள பலியை ஒப்புக்கொடுக்கின்றார். இப்பலியினால் கடவுள் உளம் கனியத் திருவுளமானார். மேலும், கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் விண்ணகத் தந்தைக்கு உகந்ததும் அனைத்து உலகுக்கும் மீட்பு அளிப்பதுமான பலியாகிடுமாறு அருள்பணியாளர் மன்றாடுகின்றார்.”
எனவே புதிய திருப்பலி நூலில் திரு அவையின் இறைவேண்டலின் விதிமுறை (lex orandi), நிலையான நம்பிக்கையின் விதிமுறைக்கு (lex credendi) ஏற்றவாறு அமைந்துள்ளது. இது நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால்: ஒப்புக்கொடுக்கின்ற முறையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, சிலுவைப் பலியும் அதனைத் திருப்பலியில் அருளடையாள முறைப்படி புதுப்பித்தலும் ஒன்றே; இதைக் கிறிஸ்து ஆண்டவர் தமது திருவிருந்தின்போது ஏற்படுத்தி, தம் நினைவாக நிறைவேற்றுமாறு திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டார். எனவே புகழ்ச்சிப் பலியாகவும் நன்றிப் பலியாகவும் ஒப்புரவுப் பலியாகவும் பரிகாரப் பலியாகவும் திருப்பலி அமைந்துள்ளது.
- 1 திரெந்துச் சங்: அமர்வு XXII, 1562, செப். 17: DS 1738-1759,
- 2 திருவழிபாடு, 47; காண். திருச்சபை, 3, 28; திருப்பணியாளர்கள், 2,4,5.
- 3 காண். Sacramentarium Veronense, ed. L.C. Mohlberg, எண். 93.
- 4 காண். நற்கருணை மன்றாட்டு III.
- 5 காண். நற்கருணை மன்றாட்டு IV.
- ============== ↑ பக்கம் 17
3. மேலும் நற்கருணை வடிவங்களுக்குள் ஆண்டவர் உண்மையாகவே உடனிருக்கின்றார் என்னும் வியப்புக்கு உரிய மறைநிகழ்வை நம்பும்படி, திரெந்துச் சங்கம் எடுத்துக்கூறியதை அதே பொருளிலும் கருத்திலும் இரண்டாம் வத்திக்கான் சங்கமும்? திரு அவை ஆசிரியத்தின் மற்ற ஏடுகளும் உறுதிப்படுத்துகின்றன. அப்போதனையே திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது கிறிஸ்துவைக் கருப்பொருள் மாற்றத்தால் உடனிருக்கச் செய்யும் அதே அர்ச்சிப்பு வாய்பாட்டாலும் நற்கருணை வழிபாட்டின்போது உணர்ந்து காட்டப்படும் மாண்புயர் மரியாதைக்கு உரிய வணக்கத்தாலும் அறிக்கையிடப்படுகின்றது. இவ்வாறே பெரிய வியாழன் அன்றும் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத்தின் பெருவிழா அன்றும் இவ்வியப்புக்கு உரிய அருளடையாளத்தைச் சிறப்பாக வணங்கி வழிபடு மாறு கிறிஸ்தவ மக்கள் தூண்டப்பெறுகின்றார்கள்.
4 கிறிஸ்துவுக்குப் பதிலாளாகப் பலி ஒப்புக்கொடுப்பதிலும் புனித மக்களின் வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை வகிப்பதிலும் ஆயருக்கும் அருள்பணியாளருக்கும் உரிய பணிக் குருத்துவத்தின் இயல்பு அடங்கி இருக்கின்றது. இப்பணிக் குருத்துவம் திருப்பலிச் சடங்குமுறை அமைப்பிலேயே, அதாவது அங்கு அருள்பணியாளருக்குத் தரப்பட்டுள்ள மிகச் சிறப்பான இடம், பணி ஆகியவற்றால் விளங்குகின்றது. குருத்துவம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் பெரிய வியாழன் அன்று நடைபெறும் கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலித் தொடக்கவுரையில் பணிக் குருத்துவத்தின் பண்புகள் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்படுகின்றன. மேலும் தலைமீது கைகளை வைத்து அளிக்கப்பட்ட குருத்துவ அதிகாரம் இத்தொடக்கவுரையில் விளக்கப்படுகின்றது; இந்த அதிகாரம் புதிய ஏற்பாட்டின் தலைமைக் குருவாம் கிறிஸ்துவின் அதிகாரத்தினுடைய தொடர்ச்சி ஆகும். திருப்பணிகள் ஒவ்வொன்றையும் பட்டியலிடும்போது இது விளக்கப்படுகின்றது.
5. மேலும், பணிக் குருத்துவத்தின் இயல்பினால் முக்கியமாகக் கருதப்பட வேண்டிய மற்றொன்றும் விளக்கம் பெறுகின்றது; அது நம்பிக்கையாளரின் அரச குருத்துவம்; அவர்களுடைய தூய உயிருள்ள பலி. ஆயர், அருள்பணியாளர்களின் திருப்பணி வழியாக, ஒரே இணைப்பாளரான கிறிஸ்துவின் பலியோடு ஒன்றிணைந்து நிறைவு பெறுகின்றது; ஏனெனில் நற்கருணைக் கொண்டாட்டம் என்பது உலகளாவிய திரு அவையின் செயல் ஆகும். இச்செயலில் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளர் கூட்டத்தில் தமக்குள்ள நிலைக்கு ஏற்பத் தமக்கு உரியதை மட்டும், ஆனால் அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதன் விளைவாக, திருப்பலிக் கொண்டாட்டத்தில் காலப்போக்கில் அவ்வப்போது கவனக் குறைவுக்கு உள்ளான சில கூறுகளை அதிகமாகக் கவனிக்க வேண்டியதாகிறது. ஏனெனில் இம்மக்கள் இறைவனின் மக்கள்; கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் மீட்கப்பட்டு, ஆண்டவரால் ஒன்று சேர்க்கப்பெற்று, அவருடைய வாக்கினால் ஊட்டம் பெறும் மக்கள்; மானிடக் குடும்பத்தின் வேண்டல்களை இறைவனிடம் எடுத்துச் செல்ல அழைக்கப்பட்ட மக்கள்; மீட்பின் மறைநிகழ்வுக்காகக் கிறிஸ்துவின் பலியை ஒப்புக்கொடுத்து, அவரில் நன்றி செலுத்தும் மக்கள்; இறுதியாக, கிறிஸ்துவின் திரு உடலிலும் திரு இரத்தத்திலும் பங்குகொள்வதால் ஒன்றாக இணைக்கப்படும் இம்மக்கள் தாங்கள் தொடக்கம் முதலே புனிதர்களாய் இருந்தாலும் நற்கருணைக் கொண்டாட்டத்தில் அறிவால் உணர்ந்து செயல்முறையிலும் பயனுள்ள விதத்திலும் பங்கெடுப்பதால் இன்னும் புனிதத்தில் தொடர்ந்து வளர்ச்சியுறுகின்றார்கள்.10 தொடர்ந்துவரும் மரபு அறிக்கையிடப்படுகின்றது
6. இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருப்பலி அமைப்புமுறையைத் திருத்தி அமைப்பதற்கான விதிகளைத் தொகுத்தபொழுது, திரெந்துச் சங்கத் திருப்பலி நூலை 1570-ஆம் ஆண்டு 200 primum என்ற திருத்தூது அமைப்பு விதிமுறைகளை
- 6 காண். திரெந்துச் சங்: அமர்வு XIII, 1551, அக். 11: DS 1635-1661.
- 7 திருவழிபாடு, 7, 47; திருப்பணியாளர்கள், 5, 18.
- 8. காண். 12-ஆம் பயஸ்: Humani generis: A.A.S. 42 (1950) பக். 570-571; ஆறாம் பால்: Mysterium Fidel: A.A.S. 57 (1965) பக். 762-769; சிறப்பான நம்பிக்கை அறிக்கை , 30-6-1968, எண் 24-26; A.A.S. 60 (1968) பக். 442443; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-5-1967, எண் 3f. 9: A.A.S. 59 (1967) பக். 543, 547.
- 9 காண். திருப்பணியாளர்கள், 2. 10 காண். திருவழிபாடு, 11.
- ============== ↑ பக்கம் 18
வெளியிட்டபோது திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் கூறிய “புனிதத் தந்தையரின் பண்டைய விதியைப் பின்பற்றி”11 என்ற அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி, திருப்பலியின் ஒரு சில சடங்குமுறைகள் அதன்படி மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று பணித்துள்ளது. இவ்வாறு அதே சொற்களைப் பயன்படுத்தியதிலிருந்து, நான்கு நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தபோதிலும் இவ்விரண்டு திருப்பலி நூல்களும் ஒரே மரபைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகின்றது. இத்தகைய மரபின் உள்கூறுகளை மதிப்பீடு செய்தால், முன்னையதைப் பின்னைய உரோமைத் திருப்பலி நூல் சிறப்பாகவும் பயனுள்ள விதத்திலும் நிறைவு செய்கின்றது.
7. திரெந்துச் சங்கக் காலம் மிக இக்கட்டான காலம். திருப்பலியின் பலித்தன்மை, பணிக் குருத்துவம், நற்கருணை வடிவங்களுக்குள் கிறிஸ்துவின் உண்மையான, நீடித்த உடனிருப்பு ஆகியவை பற்றிய ஐயப்பாடுகள் எழுந்த காலம். அச்சமயம் காரணம் இன்றித் தாக்கப்பட்ட மரபைக் காப்பாற்றுவதே புனித ஐந்தாம் பயஸின் முதல் நோக்கமாய் இருந்தது; எனவே, திருச்சடங்குகளில் சிறிய மாற்றங்களே இருந்தன. திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட் காலத்துத் திருப்பலி நூலின் உண்மையான மறு பதிப்பாக 1474-ஆம் ஆண்டு வெளிவந்த முதலாவது திருப்பலி நூலின் மாதிரிப் படிவத்திலிருந்து 1570-ஆம் ஆண்டு வெளிவந்த திருப்பலி நூல் சிறிதளவே வேறுபட்டது. மேலும் வத்திக்கான் நூலகத்தில் உள்ள கையெழுத்துப்படிகளில் ஒரு சில சொல் திருத்தங்கள் இருந்தபோதிலும் முன்னைய, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் எழுதியவை ஆராயப்பட்டபோது, இடைக்காலத்துத் திருவழிபாட்டு விளக்கவுரைகளை மட்டும் எடுத்துக்கொள்ள அவை இடம் அளித்தன.
8. மாறாக, புனித ஐந்தாம் பயஸின் திருப்பலி நூலைத் திருத்தியமைத்தவர்கள் பின் பற்றிய “புனிதத் தந்தையரின் விதி” எண்ணற்ற அறிஞர்களின் நூல்களால் வளமாக்கப்பெற்றுள்ளது. ஏனெனில் கிரகோரியின் திருப்பலி மன்றாட்டு நூல் முதன்முதலாக 1571-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் பழைய உரோமைத் திருப்பலி மன்றாட்டு நூல்களும் அம்புரோசின் திருப்பலி மன்றாட்டு நூல்களும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அவ்வாறே ஸ்பானிய, கல்லிக்கன் திருவழிபாட்டுப் பழஞ்சுவடிகள் வெளிவந்தன. இவை அதுவரை அறியப்படாத ஆன்ம வள மிக்க இறைவேண்டல்களைக் கொண்டிருந்தன.
அதுபோல மேலை, கீழை வழிபாட்டு முறைகள் என்று பிரிவதற்கு முன்னைய திருவழிபாட்டு ஏடுகள் மிகுதியாகக் கண்டு பிடிக்கப்பட்டதால், தொடக்கக் கால மரபுகள் இப்போது நன்றாக அறியப்படுகின்றன.
மேலும் புனிதத் தந்தையரின் போதனைகளைப் பற்றிய ஆய்வுகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் இவை புனித இரனேயுஸ், புனித அம்புரோஸ், எருசலேம் நகர்ப் புனித சிரில், புனித ஜான் கிறிசோஸ்தோம் முதலிய கிறிஸ்தவத் தொடக்கக் காலத் தந்தையரின் போதனை ஒளியில், நற்கருணை மறைநிகழ்வு பற்றிய இறையியலைப் பரவச் செய்துள்ளன.
9. எனவே”புனிதத் தந்தையரின் விதி” அண்மைக் கால முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுகளைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவதோடு, பல்வேறு மனிதச் சமூகப் பண்பாட்டுச் சூழல்களில், சிறப்பாக எபிரேய, கிரேக்க, இலத்தீன் நிலப்பகுதிகளில் வெளிப்படுத்தப்பட்ட திரு அவையின் ஒரே நம்பிக்கையின் பல்வேறு விதங்களைக் கண்டறியவும் ஆழமாகப் புரிந்து கொள்ளவும் வலியுறுத்துகின்றது. மேற்கண்டவாறு திரு அவையில் பல்வேறு மன்றாட்டுகளும் வழிபாட்டு முறைகளும் வேறுபட்டாலும் மாறா நம்பிக்கைக் கருவூலத்தைப் பேணிக் காப்பதில் தூய ஆவியார் இறைமக்களுக்கு வியப்புக்கு உரிய பற்றுறுதியைத் தந்து உதவுகின்றார் என்பதை இந்தப் பரந்த நோக்கு நமக்கு உணர்த்துகின்றது. புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தழுவியமைத்தல்
10. எனவே புதிய திருப்பலி நூல் உரோமைத் திரு அவையின் இறைவேண்டலின் விதிமுறைக்குச் சான்று பகர்ந்து, அண்மைக் காலத்துச் சங்கங்களால் வழங்கப்பட்ட நம்பிக்கைக் கருவூலத்தைப் பேணிக் காக்கின்றது. மேலும் அது திருவழிபாட்டு மரபில் சிறந்த ஒரு வளர்ச்சியைக் குறித்துக் காட்டுகின்றது.
11 மேற்படி, 50.
============== ↑ பக்கம் 19
ஏனெனில் இரண்டாம் வத்திக்கான் சங்கத் தந்தையர் திரெந்துச் சங்கம் கோட்பாடுகளையே வலியுறுத்தினாலும் அவற்றை உலக வரலாற்றின் வேறுபட்ட காலம் சூழலில் கூறியுள்ளார்கள். இதனால் நானூறு ஆண்டுகளுக்குமுன் எண்ணிப் பார்க்க முடியாத அருள்பணி சார்ந்த குறிக்கோளையும் அறிவுரைகளையும் அவர்கள் தர முடிந்தது.
11. திருப்பலிக் கொண்டாட்டத்தில் பொதிந்துள்ள மிகப் பெரும் மறைக்கல்வியின் பயனை அந்நாளிலே திரெந்துச் சங்கம் அறிந்திருந்தது. ஆயினும் அதன் அனைத்து விளைவுகளையும் வாழ்வுக்குப் பயனுள்ள முறையில் தொகுத்துத் தர அச்சங்கத்தால் இயலவில்லை. உண்மையில், பலர் அக்காலத்தில் திருப்பலியைக் கொண்டாடுவதில் தாய்மொழியைப் பயன்படுத்த அனுமதி வேண்டினர். வழிவழியாக வந்துள்ள திரு அவையின் கோட்பாட்டை அழுத்தம் திருத்தமாக மீண்டும் போதிப்பது தன் கடமை என்று கருதிய திரெந்துச் சங்கம் அக்காலக் கட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அந்த வேண்டுகோளுக்கு பின்வரும் பதிலைத் தந்தது. நற்கருணைப் பலி எல்லாவற்றுக்கும் மேலாகக் கிறிஸ்துவின் செயலாய் இருப்பதால் அதில் நம்பிக்கையாளர் பங்கெடுக்கும் முறையால் அதன் பயன் பாதிக்கப்படுவதில்லை என்ற கோட்பாட்டை நிலைநிறுத்த அச்சங்கம் உறுதியாகவும் தெளிவாகவும் பின்வருமாறு வரையறுத்தது: “திருப்பலி மக்களுக்குப் பெரும் படிப்பினையைத் தந்தாலும் திருப்பலியை மக்களின் தாய்மொழியில் ஒழுங்குமுறை இன்றிக் கொண்டாடுவது சங்கத் தந்தையருக்கு ஏற்புடையதாய் இல்லை.”12 “உரோமை வழிபாட்டு முறைப்படி நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியையோ அர்ச்சிப்பு வாய்பாட்டையோ அமைந்த குரலில் சொல்ல வேண்டும் என்றும் திருப்பலி தாய்மொழியில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்றும் கருதுபவர்கள் கண்டனத்துக்கு உரியவர்கள்” என்று இச்சங்கம் அறிக்கையிட்டது.13 எனினும், திருப்பலியில் மக்களின் தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தடுத்தாலும் மறுபுறம் ஆன்ம மேய்ப்பர்கள் தகுந்த மறைக்கல்வி அளிக்கச் சங்கம் பணித்தது: “கிறிஸ்துவின் மந்தை பசியால் வாடாதபடி மேய்ப்பர்களும் ஆன்ம நலம் பேணும் அனைவரும் அடிக்கடி, சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநாள்களிலும் திருப்பலியின்போது வாசிக்கப்படும் வாசகங்கள் பற்றியும் திருப்பலியின் சடங்குகளுள் ஏதாவது ஒரு மறைநிகழ்வைப் பற்றியும் தாங்களோ பிறரைக் கொண்டோ விளக்கம் தர வேண்டும்” என்று புனிதச் சங்கம் கட்டளையிடுகின்றது.14
12. திருத்தூதுப் பணியின் தேவைகளுக்கு ஏற்ப இக்காலத்தில் திரு அவையைத் தழுவியமைக்குமாறு கூட்டப்பெற்ற இரண்டாம் வத்திக்கான் சங்கம் திரெந்துச் சங்கம் செய்தது போல, திருவழிபாட்டின் கற்பிக்கும் தன்மையையும் அருள்பணித் தன்மையையும் ஆழ்ந்து சிந்தித்தது.15 இலத்தீன் மொழியில் நடைபெற்று வரும் திருச்சடங்கு, முறையானதும் பயனுடையதும் ஆனது என்பதைக் கத்தோலிக்கர் எவரும் மறுப்பதற்கு இல்லை; எனினும் “அந்தந்த இடத்து மொழிகளைக் கையாளுதல் மக்களுக்குப் பொதுவாகப் பெரும் பயன் தரக்கூடும்” என்பதால் அவற்றைப் பயன்படுத்த இரண்டாம் வத்திக்கான் சங்கம் அதிகாரம் அளித்தது.16 இதை ஏற்றுக் கொண்ட இடங்களில் விளங்கிய ஆர்வத்தின் விளைவாக, மக்கள் பங்கெடுக்கும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும், ஆயர்களும் திரு அவையின் தலைமைப் பீடமும் வழிகாட்ட, அந்தந்த இடத்து மக்களின் மொழியிலேயே நடைபெற வகை செய்யப்பட்டது. இவ்வாறு, தாங்கள் கொண்டாடும் மறைநிகழ்வை மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
13. திருவழிபாட்டில் அடங்கியுள்ள மறைபொருள் பற்றிய மறைக்கல்வியைத் தெளிவாக எடுத்துரைக்கத் தாய்மொழி மிக இன்றியமையாத கருவி ஆகும். திரெந்துச் சங்கம் தந்த, ஆனால் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படாத, ஒருசில விதிகளை நடைமுறைப் படுத்து மாறு இரண்டாம் வத்திக்கான் சங்கம் கட்டளையிட்டது. இதன்படி ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநாள்களிலும் மறையுரை வழங்கப்பட வேண்டும்;” திருச்சடங்குகளிடையே சில விளக்கவுரைகள் வழங்க அனுமதி உண்டு.18
- 12 திரெந்துச் சங்: அமர்வு XXII, Cap. 8: DS 1749.
- 13 மேற்படி, Cap. 9: DS 1759.
- 14 மேற்படி, Cap. 8: _DS 1749,
- 15 காண். திருவழிபாடு, 33.
- 16 மேற்படி, 36.
- 17 மேற்படி, 5 2.
- 18 மேற்படி, 35, 3.
- ============== ↑ பக்கம் 20
எல்லாவற்றுக்கும் மேலாக, “அருள்பணியாளர் நற்கருணை அருந்தியபின் நம்பிக்கையாளரும் அதே பந்தியிலிருந்து ஆண்டவரின் திரு உடலை உண்டு திருப்பலியில் மழுமையாகப் பங்குபெறுவதைத் 19 தூண்டுகின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம். “தாங்கள் கலந்துகொள்ளும் ஒவ்வொரு திருப்பலியிலும் நம்பிக்கையாளர் நற்கருணை அருந்த விரும்புவதோடு மட்டுமல்லாமல், அருளடையாள முறையிலும் அதை அருந்துவார்களாக ” என்று உரைத்த திரெந்துத் தந்தையரின் விருப்பத்தையும் இவ்வாறு வத்திக்கான் சங்கம் நடைமுறைப்படுத்தி மக்கள் நற்கருணைப் பந்தியில் நிறைவாகப் பங்கெடுக்க வகை செய்துள்ளது.
14 அதே மனப்பான்மையாலும் மந்தையைப் பேணும் அக்கறையாலும் உந்தப்பட்டு ரெண்டாம் வத்திக்கான் சங்கம் இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்ளுதல் பற்றிய திரெந்துச் சங்கப் படிப்பினையைப் புதிய கண்ணோட்டத்துடன் ஆய்ந்தது. அப்ப வடிவில் மட்டும் நற்கருணை உட்கொள்ளும்போது நற்கருணை உட்கொள்வதன் முழுப் பயனும் உள்ளது என்னும் படிப்பினையைப்பற்றி இன்று ஐயமில்லை என்பதால், இரண்டாம் வத்திக்கான் சங்கம் அவ்வப்போது இரு வடிவங்களிலும் நற்கருணை உட்கொள்வதை அனுமதிக்கின்றது. ஏனெனில் இரு வடிவங்களிலும் நற்கருணை உட்கொள்வது நம்பிக்கையாளர் அருளடையாள அமைப்பையும் தாங்கள் பங்குகொள்ளும் மறைநிகழ்வையும் இன்னும் ஆழ்ந்து புரிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பினை அளிக்கின்றது. 1
15. இவ்வாறு திரு அவை “பழையவற்றை” – அதாவது, மரபுக் கருவூலத்தைப் பேணிக் காக்கும் தன் கடமையில் பற்றுறுதியாய் நிலைத்திருக்கும் அதே வேளையில், “புதியவற்றையும்” சீர்தூக்கிப் பார்த்து அவற்றை விவேகத்துடன் நிறைவேற்றுகின்றது (காண். மத் 13:52).
புதிய திருப்பலி நூலின் ஒரு பகுதி இக்காலத் தேவைகளுக்கெனத் திரு அவையின் இறைவேண்டல்களை மேலும் தெளிவாக ஒழுங்குபடுத்துகின்றது; இப்பகுதியின் மிகச் சிறப்பான கூறுகள் திருச்சடங்குகளுக்கான திருப்பலிகளும் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் ஆகும். இத்திருப்பலிகளில் மரபும் புது முறைகளும் தமக்குள் பொருத்தமாக இணைந்துள்ளன. எனவே திரு அவையின் பழங்கால மரபுகளிலிருந்து வந்துள்ள சொல் வழக்குகள் உரோமைத் திருப்பலி நூலில் காணப்படுவது போல மாற்றம் இன்றி நீடிக்கின்றன; பல மன்றாட்டுகள் இக்காலத் தேவைகளையும் சூழ்நிலைகளையும் தழுவி அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, திரு அவை, பொது நிலையினர், மனிதரின் உழைப்பைப் புனிதப்படுத்துதல், எல்லா இனத்தவரின் ஒன்றிப்பு, இக்காலத்தின் தனிப்பட்ட தேவைகள் ஆகியவற்றுக்கு உரிய மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. சங்கத்தின் அண்மைக் கால ஏடுகளில் உள்ள சிந்தனைகள், சொல்முறைகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மன்றாட்டுகள் முழுமையாக உருவாக்கப்பட்டன.
மேலும் இன்றைய உலகின் நிலையைக் கருத்தில் கொண்டு பழைய மரபுப் பாடங்களைப் பயன்படுத்தும்போது ஒரு சில வாக்கியங்களை மாற்றியமைப்பதால் மதிப்புக்கு உரிய நம்பிக்கைக் கருவூலத்துக்கு எவ்வித ஊறும் நேராது எனத் தோன்றியது. இப்பாடங்கள் இன்றைய இறையியல் சொல்லாட்சிக்கும் திரு அவை ஒழுங்குமுறையின் இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும். ஆகவே இவ்வுலக நலன்களின் மதிப்பையும் பயனையும் குறிக்கும் சில மொழிநடைகள் மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறே திரு அவையில் முற்காலங்களுக்கு ஏற்றவையாய் இருந்த சில வெளித் தவ முயற்சிகளைக் குறிக்கும் மொழிநடைகளும் மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு திரெந்துச் சங்கம் தந்த திருவழிபாட்டு விதிகளை இரண்டாம் வத்திக்கான் சங்க விதிகள் பெரும்பாலும் முழுமையாக்கி நிறைவு செய்துள்ளன. இங்ஙனம் இறைமக்களைத் திருவழிபாட்டுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வர, கடந்த நான்கு நூற்றாண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலத்தில் புனித பத்தாம் பயசும் அவரின் வழித்தோன்றல்களும் வழிபாடு சார்ந்தவற்றில் மேற்கொண்ட முயற்சிகளை இரண்டாம் வத்திக்கான் சங்கம் செயல்படுத்தியுள்ளது.
19 மேற்படி, 55.
20 திரெந்துச் சங். XXII Cap. 6: DS 1747.
21 காண். திருவழிபாடு, 55.
============== ↑ பக்கம் 21
================================

இயல் 1
நற்கருணைக் கொண்டாட்டத்தின் முதன்மையும் மாண்பும்
நற்கருணைக் கொண்டாட்டத்தின் முதன்மையும் மாண்பும்
16. திருப்பலிக் கொண்டாட்டம் கிறிஸ்துவும் திரு ஆட்சிமுறைப்படி அமைந்த இறைமக்களம் சேர்ந்து ஆற்றும் செயல் ஆகும். எனவே அது அனைத்துலகத் திரு அவையினுடையவும் தலக் திரு அவையினுடையவும் நம்பிக்கையாளர் ஒவ்வொருவருடையவும் முழுமையான கிறிஸ்தவ வாழ்வின் மையம் ஆகும்.22 ஏனெனில் திருப்பலிக் கொண்டாட்டத்தில்தான் கடவுள் கிறிஸ்துவில் உலகைப் புனிதப்படுத்தும் செயலின் சிகரம் அமைந்துள்ளது; இதில்தான் மக்கள் கிறிஸ்து வழியாகத் தூய ஆவியாரில் தந்தைக்குச் செலுத்தும் வழிபாடு வெளிப்படுகின்றது.23 மேலும் இதில் மீட்பின் மறைநிகழ்வு ஆண்டின் கால வட்டத்தில் நினைவுகூரப்பட்டு, ஒரு வகையில் உடனிருக்கச் செய்யப்படுகின்றது.24 எல்லாப் புனிதச் செயல்களும் கிறிஸ்தவ வாழ்வின் எல்லாச் செயல்பாடுகளும் திருப்பலியோடு இணைந்து, அதிலிருந்து தொடங்கி, அதை நோக்கியே நாடி நிற்கின்றன.25
17. எனவே திருப்பலி, அதாவது ஆண்டவரின் இரவு விருந்துக் கொண்டாட்டம் முறைப்படுத்தப்படுவதால், திருப்பணியாளர்களும் நம்பிக்கையாளரும் தத்தம் நிலைகளுக்கு ஏற்பத் திருப்பலியில் பங்கேற்று, அதன் பயன்களை நிறைவாகப் பெறுவது மிக இன்றியமையாதது;26 இவற்றை அடைவதற்காக ஆண்டவராகிய கிறிஸ்து தம் உடலாலும் இரத்தத்தாலுமான நற்கருணைப் பலியை நிறுவி, அதைத் தம் பாடுகள், உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவுச் சின்னமாகத் தம் அன்பு மணமகளாம் திரு அவையிடம் ஒப்படைத்தார்.27
18. இந்நோக்கம் நிறைவேற ஒவ்வொரு திருவழிபாட்டுக் குழுமத்தின் தன்மைக்கும் இதரச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு திருப்பலிக் கொண்டாட்டம் அமைய வேண்டும்; இதன் பயனாக, நம்பிக்கையாளர் பொருள் உணர்ந்தும் செயல்முறையிலும் முழுமையாகவும் பங்குகொள்வதற்குத் தூண்டப்பட வேண்டும். அதாவது அவர்கள் ஆர்வமிக்க நம்பிக்கையுடனும் எதிர்நோக்குடனும் அன்புடனும் உள்ளத்தாலும் உடலாலும் செயல்முறையிலும் முழுமையாகவும் இக்கொண்டாட்டத்தில் பங்குகொள்வதைத் திரு அவை மிகவே விரும்புகின்றது; இது கொண்டாட்டத்தின் இயல்புக்கே இன்றியமையாதது. இது திருமுழுக்கினால் கிறிஸ்தவ மக்களின் உரிமையும் கடமையும் ஆகின்றது.38
19. நம்பிக்கையாளரின் உடனிருப்பும் செயல்முறைப் பங்கேற்பும் கொண்டாட்டத்தின் திரு அவைப் பண்பைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன;39 இத்தகைய பங்கேற்பு இயலாதபோதும் திருப்பலிக் கொண்டாட்டம் எப்போதும் தன் ஆற்றலையும் மாண்பையும் கொண்டுள்ளது; ஏனெனில் அது கிறிஸ்துவினுடையவும் திரு அவையினுடையவும் செயல் ஆகும்; இக்கொண்டாட்டத்தில் அருள்பணியாளர் தமது முக்கிய கடமையை நிறைவேற்றி, மக்களின் மீட்புக்காக எப்பொழுதும் செயல்படுகின்றார்.
எனவே கூடுமானவரை ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என அருள்பணியாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது.30
20. எல்லாத் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளைப் போலவே திருப்பலிக் கொண்டாட்டமும் புலப்படும் அடையாளங்களால் நிகழ்த்தப்படுகின்றது; இதனால் நம்பிக்கை பேணி வளர்க்கப்படுகின்றது, உறுதிப்படுத்தப்படுகின்றது, வெளிப்படுத்தப்படுகின்றது.31 எனவே
22 காண். திருவழிபாடு, 41; திருச்சபை, 11; திருப்பணியாளர்கள், 2, 5, 6; ஆயர்கள், 30; கிறிஸ்தவ ஒன்றிப்பு, 15; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-5-1967: எண், 38, 6: A.A.S. 59 (1967) பக். 542, 544-545.
23 காண். திருவழிபாடு, 10.
24 காண். மேற்படி, 10 2.
25 காண். திருவழிபாடு, 10; திருப்பணியாளர்கள், 5,
26 காண். திருவழிபாடு, 14, 19, 26, 28, 30.
27 காண். மேற்படி, 47.
28 காண். மேற்படி, 14.
29 காண். மேற்படி, 41
30 காண். திருப்பணியாளர்கள், 13; திருச்சபைச் சட்டத் தொகுப்பு (இனி திச), 904.
============== ↑ பக்கம் 22
திருப்பலியில் பங்குகொள்ளும் மக்களுடையவும் இடத்தினுடையவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, திரு அவையால் தரப்பட்டுள்ள அமைப்புகளையும் கூறுகளையும் தேர்ந்துகொள்ளக் கவனம் செலுத்த வேண்டும். இவை செயல்முறையான, முழுமையான பங்கேற்பை வளர்க்கட்டும்; இவை நம்பிக்கையாளரின் ஆன்ம பயனுக்கு ஏற்றவை ஆகும்.
21 ஆகவே நற்கருணைக் கொண்டாட்டத்தைத் தக்கவாறு முறைப்படுத்தும் பொது விதிகளை வகுப்பதும் அதன் கொண்டாட்டச் சடங்குமுறைகளை விளக்கிக் கூறுவதும் இப்பொதுப் படிப்பினையின் நோக்கம் ஆகும்”.32
22. திருப்பலிக் கொண்டாட்டம் தலத் திரு அவையில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
ஏனெனில் கடவுளின் மறைபொருள்களுக்கு முதன்மையான கடமை உடையவர் மறைமாவட்ட ஆயர்; அவரது பொறுப்பில் தலத் திரு அவை ஒப்படைக்கப்பட்டுள்ளது; அவர் அனைத்துத் திருவழிபாட்டு வாழ்க்கை முறைக்கும் நெறியாளரும் ஊக்குவிப்பவரும் கண்காணிப்பாளரும் ஆவார்.” ஆயர் தலைமை ஏற்று நடத்தும் கொண்டாட்டங்களில், குறிப்பாக அருள்பணியாளர்களும் திருத்தொண்டர்களும் மக்களும் பங்கேற்கும் திருப்பலிக் கொண்டாட்டத்தில் திரு அவையின் மறைபொருள் வெளிப்படுகின்றது. இதனால் இத்தகைய சிறப்புத் திருப்பலிக் கொண்டாட்டங்கள் மறைமாவட்டம் முழுவதற்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
திருவழிபாட்டின் சடங்கு முறைகள், பாடங்கள் இவற்றின் உண்மைப் பொருளை உணர்ந்து அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், பொது நிலையினர் ஆகியோர் திருப்பலிக் கொண்டாட்டத்தில் செயல்முறையிலும் பயனுள்ள வகையிலும் பங்கேற்க ஆயர் வழிவகுக்க வேண்டும். இந்நோக்குடன் இக்கொண்டாட்டங்களின் மதிப்பு உயரும் வண்ணம் ஆயர் கவனமுடன் செயல்பட வேண்டும்; புனித இடம், இசை, கலை ஆகியவற்றின் அழகு இக்கொண்டாட்டத்தின் மாண்பை உயர்த்தப் பெருமளவு பங்களிக்க வேண்டும்.
23. மேலும் இக்கொண்டாட்டம் திருவழிபாட்டின் விதிமுறைகளுக்கும் உட்பொருளுக்கும் ஏற்ப அமையவும் அருள்பணி நலன் பெருகவும் இப்பொதுப் படிப்பினையிலும் திருப்பலியின் சடங்குமுறையிலும் ஒரு சில விரும்பத்தக்க மாற்றங்களும் தழுவியமைத்தலும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
24 இத்தகைய தழுவியமைத்தல் ஒரு சில சடங்கு முறைகளையும் பாடங்களையும் தெரிவு செய்து கொள்வதில் அடங்கும். அதாவது பங்கேற்கும் மக்களின் தேவைகள், தயாரிப்பு, இயல்பான பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றபடி பாடல்கள், வாசகங்கள், மன்றாட்டுகள், அறிவுரைகள், சைகைகள் அமையட்டும்; இவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு திருச்சடங்குகளை நிறைவேற்றும் அருள்பணியாளருக்குத் தரப்பட்டுள்ளது. எனினும் அருள்பணியாளர் திருவழிபாட்டின் ஊழியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் திருப்பலி நிறைவேற்றும்போது தன்னிச்சையாக எதையும் சேர்க்கவோ நீக்கவோ மாற்றவோ அனுமதி இல்லை .34
25. மேலும் திருவழிபாட்டுக் கொள்கை விளக்கத்துக்கு ஏற்பத் திருப்பலி நூலில் உரிய இடத்தில் ஒரு சில தழுவியமைத்தல்களைச் செய்து கொள்ள மறைமாவட்ட ஆயருக்கோ ஆயர் பேரவைக்கோ அதிகாரம் உண்டு 35 (காண். கீழே எண். 387, 388-393).
26. மக்களின் மரபுக்கும் பண்பாட்டுக்கும் நிலப்பகுதிகளுக்கும் ஏற்பச் செய்யப்படும் மாற்றங்களும் தழுவியமைத்தல்களும் “திருவழிபாடு” எனும் கொள்கை விளக்கம் எண் 40-இன்படி அமைய வேண்டும். மக்களின் தேவைகளையும் நலனையும் கருத்தில் கொண்டு “உரோமைத் திருவழிபாடும் பண்பாட்டு மயமாக்கலும்” என்ற ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி அவை செயல்படுத்தப்பட வேண்டும்36 (கீழே எண். 395-399).
31 காண். திருவழிபாடு, 59.
32 தனிக் குழுக்களுக்கான திருப்பலி: திருவழிபாட்டுத் திருப்பேராயம், Actio pastoralis. 15-5-1969: A.A.S. 61 (1969) பக். 806-811; சிறுவரோடு திருப்பலி: 1-11-1973: A.A.S. 66 (1974) பக். 30-46; திருப்பலியோடு திருப்புகழ்மாலையை இணைப்பது : திருப்புகழ்மாலை, பொதுப் படிப்பினை, 1971 பதிப்பு, எண். 93-98; உரோமைத் திருச்சடங்கு, ஆசியுரைகளும் புனிதப்படுத்தலும் – முன்னுரை, 1984, எண் 28; புனித கன்னி மரியாவின் திரு உருவத்துக்கு முடிசூட்டும் அமைப்புமுறை, 1981, எண். 10, 14.
33 காண். ஆயர்கள், 15; காண். திருவழிபாடு, 41.
34 காண். திருவழிபாடு, 22
35 காண். மேற்படி, 38, 40
36 திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம், Varietates legitimae, 25.01.1994: A.A.S. 87 (1995) பக். 288-314.
============== ↑ பக்கம் 23

இயல் 2
திருப்பலியின் அமைப்பும் அதன் கூறுகளும் பகுதிகளும்
திருப்பலியின் அமைப்பும் அதன் கூறுகளும் பகுதிகளும்
1. திருப்பலியின் பொது அமைப்பு
27. ஆண்டவரின் இரவு விருந்தாகிய திருப்பலியில் கிறிஸ்துவின் பதிலாளாக அருள்பணியாளர் தலைமை வகிக்க, ஆண்டவரின் நினைவாகிய நற்கருணைப் பலியைக் கொண்டாடுவதற்காக இறைமக்கள் ஒன்றுசேர அழைக்கப்படுகின்றார்கள்.37 ஆகவே புனிதத் திரு அவை இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடுவது “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” (மத் 18:20) என்ற கிறிஸ்துவின் வாக்குறுதிக்குப் பொருத்தமாக உள்ளது; ஏனெனில் சிலுவைப் பலியை நிலைத்திருக்கச் செய்யும் திருப்பலிக் கொண்டாட்டத்தில், 38 கிறிஸ்து தம் பெயரால் ஒன்றுசேர்க்கப்பட்ட திருக்கூட்டத்திலும் திருப்பணியாளரிடத்திலும் தம் அருள்வாக்கிலும் இறுதியாகப் பொருள் தன்மையில், இடையறாது நற்கருணை வடிவங்களிலும் உண்மையாகவே உடனிருக்கின்றார்.39
28. திருப்பலி இறைவாக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் ஒரே வழிபாட்டுச் செயலின் கூறுகளாகத் தம்முள் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன;40 ஏனெனில் இறைவாக்காலும் கிறிஸ்துவின் உடலாலு மான திருப்பலித் திருப்பந்தியிலிருந்து நம்பிக்கையாளர் படிப்பினையும் ஊட்டமும் பெறுகின்றனர்.41 சில சடங்குகள் திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தொடக்கமாகவும் முடிவாகவும் அமைந்துள்ளன.
II. திருப்பலியின் பல்வேறு கூறுகள் இறைவார்த்தை வாசகமும் அதன் விளக்கமும்
29. திரு அவையில் வாசிக்கப்படும் திருமறைநூல் வழியாகக் கடவுளே தம் மக்களோடு பேசுகின்றார். கிறிஸ்துவும் தமது வார்த்தையில் உடனிருந்து நற்செய்தியை அறிவிக்கின்றார்.
ஆகவே இறைவார்த்தை வாசகங்கள் திருவழிபாட்டின் கூறுகளில் மிக இன்றியமையாத இடம் வகிக்கின்றன. எனவே அவற்றை எல்லாரும் வணக்கத்துடன் கேட்க வேண்டும். திருநூல் வாசகங்கள் அந்தந்தக் காலத்து மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இருந்தாலும் வழிபாட்டுச் செயலின் ஒரு பகுதியும் இறைவார்த்தையின் உயிருள்ள விளக்கவுரையுமாகிய மறையுரை இறைவார்த்தையின் முழுமையான புரிதலையும் செயல்படுத்தும் ஆற்றலையும் வளர்க்கின்றது. 42
37 காண். திருப்பணியாளர்கள், 5; திருவழிபாடு, 33.
38 காண். திரெந்துச் சங்: அமர்வு XXII, Cap, 1: DS 1740; ஆறாம் பால்: சிறப்பு நம்பிக்கை அறிக்கை , 30-06-1968, எண் 24: A.A.S. 60 (1968) பக். 442.
39 காண். திருவழிபாடு, 7; ஆறாம் பால்: Mysterium Fidei, 03-09-1965: A.A.S. 57 (1965) பக். 764; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 9: A.A.S. 59 (1967) பக். 547.
40 காண். திருவழிபாடு, 56; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium 25-05-1967, எண் 3: A.A.S. 59 (1967) பக். 542.
41 காண். திருவழிபாடு, 48, 51; இறைவெளிப்பாடு, 21; திருப்பணியாளர்கள், 4.
42 காண். திருவழிபாடு, 7, 33, 5 2.
============== ↑ பக்கம் 24
அருள்பணியாளருக்கு உரிய மன்றாட்டுகளும் மற்றப் பகுதிகளும்
30. அருள்பணியாளருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுள் முதலிடம் பெறுவது நற்கருணை மன்றாட்டு ஆகும். இது கொண்டாட்டம் முழுவதற்கும் சிகரமாய் விளங்குகின்றது. அடுத்துத் திருக்குழும மன்றாட்டு, காணிக்கைமீது மன்றாட்டு, திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு ஆகியவை இடம் பெறுகின்றன. கிறிஸ்துவுக்குப் பதிலாளாக மக்கள் குழுவுக்குத் தலைமை வகிக்கும் அருள்பணியாளர், புனித மக்கள் திருக்கூட்டம் முழுவதன் பெயராலும் சூழ்ந்து நிற்கும் அனைவர் பெயராலும் கடவுளை நோக்கி மேற்சொன்ன மன்றாட்டுகளை எழுப்புவார். 48 ஆகவே இவை “வழிபாட்டுத் தலைவரின் மன்றாட்டுகள்” எனப் பொருத்தமாக அழைக்கப்படுகின்றன.
31, மேலும் கூடியுள்ள திருக்கூட்டத்தின் தலைவர் எனும் முறையில், அருள்பணியாளர் சடங்குமுறையில் அடங்கியுள்ள அறிவுரைகளை எடுத்துரைப்பார். எங்கெல்லாம் சடங்கு ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனவோ அங்கெல்லாம் மக்களுடைய புரிந்துகொள்ளும் ஆற்றலுக்கு ஏற்றவாறு ஓரளவு தழுவியமைக்கத் தலைவருக்கு அனுமதி உண்டு. திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் பொருளை என்றும் பின்பற்றிச் சுருக்கமாக அருள்பணியாளர் எடுத்துரைக்கலாம். இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை முறைப்படுத்துவதும் இறுதி ஆசி வழங்குவதும் தலைமை தாங்கும் அருள்பணியாளருக்கு உரியது. அன்றைய நாள் திருப்பலியின் முன்னுரையிலும் (தொடக்க வாழ்த்துரை, பாவத்துயர்ச் செயல் இவற்றுக்கு இடையில்) இறைவார்த்தை வழிபாட்டில் வாசகங்களுக்கு முன்பும், நற்கருணை மன்றாட்டின் தொடக்கவுரைக்கு முன்பும் மிகச் சுருக்கமான முன்னுரையை வழங்கலாம். ஆனால் நற்கருணை மன்றாட்டுக்கு இடையில் ஒருபோதும் அவ்வாறு செய்யக் கூடாது. பிரியாவிடைக்குமுன் முழுக் கொண்டாட்டத்துக்கும் முடிவுரை கொடுக்கலாம்.
32. இயல்பாகவே வழிபாட்டுத் தலைவருக்கு உரிய பகுதிகள் மக்கள் அனைவரையும் ஈர்க்கக்கூடிய விதத்தில் தெளிவாகவும் உரத்தக் குரலிலும் சொல்லப்பட வேண்டியது அவசியம். மக்களும் இவற்றைக் கவனத்துடன் கேட்க வேண்டும்.44 ஆகவே அருள்பணியாளர் இவற்றை எடுத்துரைக்கும்போது வேறு எந்த மன்றாட்டுக்கும் பாடலுக்கும் இடமிருக்கக் கூடாது; ஆர்மோனியத்தையும் மற்ற இசைக் கருவிகளையும் மீட்டக் கூடாது.
33. அருள்பணியாளர் வழிபாட்டுத் தலைவர் என்னும் முறையில் திரு அவை மற்றும் கூடியுள்ள மக்கள் பெயரால் வேண்டல்களை எழுப்புவார். தம் பணியை மிகக் கவனத்தோடும் இறைப்பற்றோடும் நிறைவேற்றுமாறு சில வேளைகளில் தம் பெயரால் வேண்டுவார். இத்தகைய வேண்டல்கள் நற்செய்தி வாசிக்கும் முன்பும் காணிக்கைப் பொருள்களைத் தயார் செய்யும்பொழுதும் நற்கருணை அருந்துவதற்கு முன்னும் பின்னும் அமைந்த குரலில் சொல்லப்படும்.
திருப்பலிக் கொண்டாட்டத்தில் வரும் மற்றப் பாடங்கள்
34. திருப்பலிக் கொண்டாட்டம் இயல்பாகவே “சமூக”ப் பண்பைக் கொண்டிருப்பதால், 45 திருப்பலியில் அருள்பணியாளருக்கும் திருக்கூட்டத்துக்கும் இடையே நிகழும் உரையாடல்களும் ஆர்ப்பரிப்புகளும் மிகுந்த பொருள் செறிந்தவையாக உள்ளன.46 அவை சமூகக் கொண்டாட்டத்தின் வெளியடையாளங்கள் மட்டும் அல்ல, அருள்பணியாளருக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள ஒன்றிப்பை அவை வளர்த்துச் செயல்படுத்துகின்றன.
43 காண். மேற்படி, 33. ** காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam sacram, 05-03-1967, எண் 14: A.A.S. 59 (1967) பக். 304.
* காண். திருவழிபாடு, 26-27; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 3d: A.A.S. 59 (1967) பக். 542.
46 காண். திருவழிபாடு, 30.
============== ↑ பக்கம் 25
35. அருள்பணியாளருடைய வாழ்த்துரைகளுக்கும் மன்றாட்டுகளுக்கும் நம்பிக்கையாளர் எழுப்பும் ஆர்ப்பரிப்புகளும் பதிலுரைகளும் அவர்களுடைய செயல்முறை ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன. இது எல்லா வகையான திருப்பலியிலும் கூடியிருக்கும் மக்களால் வெளிப்படுத்தப்பட வேண்டும். இது திருக்கூட்டம் முழுவதன் பொதுச் செயல்பாடு என்பது இதனால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.”
36. நம்பிக்கையாளர் செயல்முறையில் பங்குகொள்வதை வெளிப்படுத்தி வளர்ப்பதற்கு மிகப் பயனுள்ள வேறு சில பகுதிகளும் உள்ளன; அவை திருக்கூட்டம் அனைத்துக்கும் உரியவை. அவற்றுள் பாவத்துயர்ச் செயல், நம்பிக்கை அறிக்கை, பொது மன்றாட்டு, ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டல் ஆகியவை சிறப்பானவை.
37. இறுதியாக மற்றப் பாடங்களில்:
அ. ஒரு சில தனித்து நிற்கும் சடங்குகளோ செயலோ ஆகும். அவை: “உன்னதங்களிலே” பதிலுரைத் திருப்பாடல், “அல்லேலூயா”, நற்செய்திக்குமுன் வசனம், “தூயவர்”, நினைவு ஆர்ப்பரிப்பு, திருவிருந்துப் பல்லவி ஆகியன.
ஆ. வேறு சில குறிப்பிட்டதொரு சடங்குடன் இணைந்து வருவன. அவை: வருகைப் பாடல், காணிக்கைப் பாடல், அப்பம் பிடுதலின்போது “உலகின் பாவங்களைப் போக்கும்” என்னும் பாடல், திருவிருந்துப் பாடல் ஆகியன.
பல்வேறு பாடங்களை எடுத்துரைக்கும் முறைகள்
38. அருள்பணியாளர், திருத்தொண்டர், வாசகர், மக்கள் அனைவரும் முறையே வாசகம், மன்றாட்டு, அறிவுரை, ஆர்ப்பரிப்பு உரை, பாடல் ஆகியவற்றைத் தெளிவாக உரத்தக் குரலில் சொல்லும்போது அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு தொனி அமைந்திருக்க வேண்டும். நடைபெறும் கொண்டாட்டத்தின் வகைக்கும் சிறப்புக்கும் ஏற்றவாறு இது அமைய வேண்டும். மேலும் பல்வேறு மொழிகளின் இயல்பையும் மக்களின் பண்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே கீழே தரப்படும் சடங்கு ஒழுங்குமுறைகளிலும் விதிகளிலும் காணப்படும் “சொல்லுதல்” அல்லது “அறிக்கையிடுதல்” என்னும் வார்த்தை, மேற்சொன்னவற்றின் அடிப்படையில் பாடுவதையோ உரைப்பதையோ குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.
இசையின் முதன்மை
39. தங்கள் ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருக்கும் மக்களாக ஒன்றாய்க் கூடிவரும் நம்பிக்கையாளர் திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் சேர்ந்து பாடுமாறு தூண்டுகிறார் திருத்தூதர் (காண். கொலோ 3:16). ஏனெனில் பாடுவது இதய மகிழ்ச்சியின் அடையாளம் (காண். திப 2:46). எனவே ‘பாடுவது அன்பு செய்பவரின் இயல்பு’ என்று புனித அகுஸ்தின் பொருத்தமாகச் சொல்கின்றார்; மேலும் பழமொழி. ‘இனிது பாடுகிறவர் இருமுறை வேண்டுகின்றார்’ என்னும் வாக்கு தொன்று தொட்டு வரும்
40. ஆகவே மக்களின் பண்புக்கும் அந்தந்த வழிபாட்டுக் கூட்டத்தின் திறமைகளுக்கும் ஏற்பத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் பாடல்கள் இடம் பெற வேண்டும். பாட வேண்டிய எல்லாப் பகுதிகளையும் எப்பொழுதும் பாடத்தான் வேண்டும் எனும் கட்டாயம் இல்லை; (எ.கா. வாரநாள் திருப்பலி), எனினும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் நடைபெறும் திருப்பலிக் கொண்டாட்டங்களில் பாடல் குழுவும் மக்களும் பாடிப் பங்கேற்பதை நிறுத்தி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
47 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicum sacram, 05.03.1967, எண் 16a: A.A.S. 59 (1967) பக். “
48 புனித அகுஸ்தின் மறையுரை, 336, I: PL 38, 1472.
============== ↑ பக்கம் 26
பாடுவதற்கெனத் தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். குறிப்பாக அருள்பணியாளர், திருத்தொண்டர், வாசகர், பதிலுரைக்கும் மக்கள், அருள்பணியாளரும் மக்களும் சேர்ந்து பாடும் பகுதிகள் பாடப்பட வேண்டும்.49
41. எல்லா இசை வகைகளும் சமமாகக் கருதப்பட்டாலும் கிரகோரியின் இசை உரோமை வழிபாட்டுக்கு உரியது என்பதால் அது முதலிடம் பெறுகின்றது. திரு இசையின் ஏனைய வகைகள், சிறப்பாகப் பல்லிசை திருவழிபாட்டு நிகழ்ச்சியின் உள்ளுணர்வுக்கு இயைந்தவையாகவும் நம்பிக்கையாளர் அனைவரின் பங்கேற்பை வளர்ப்பவையாகவும் இருப்பின், அவற்றை எவ்வகையிலும் விட்டுவிடக் கூடாது.”
பல்வேறு நாடுகளிலிருந்து நம்பிக்கையாளர் ஒன்றுகூடி வருவது தற்போது அதிகமாவதால், திருப்பலியின் அமைப்புமுறையில் ஒரு சிலவற்றையாவது, குறிப்பாக, நம்பிக்கை அறிக்கை, ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டல் ஆகியவற்றையாவது அவர்கள் எளிய இசையில் இலத்தீன் மொழியில் ஒன்றுசேர்ந்து பாடத் தெரிந்திருப்பது நலம்.
சைகைகளும் உடலின் நிலைகளும்
42. அருள்பணியாளர், திருத்தொண்டர், ஏனைய பணியாளர்கள், மக்கள் ஆகியோரின் சைகைகளும் உடலின் நிலைகளும் கொண்டாட்டம் முழுவதற்கும் அழகும் மேன்மையும் எளிமையும் சேர்க்கும் வண்ணம் அமையட்டும். இதனால் கொண்டாட்டத்தின் பல்வேறு பகுதிகளின் உண்மையான, முழுமையான பொருள் தெளிவாகும்படி மக்கள் அனைவரின் பங்கேற்பும் ஊக்குவிக்கப்படும்.53 எனவே பொதுப் படிப்பினை மரபு வழி வரும் “உரோமை வழிபாட்டு முறை” வரையறுத்துள்ள படி தனிப்பட்ட விருப்பங்களையும் தன்னிச்சையான போக்கையும் தவிர்த்து, இறைமக்களின் பொதுவான ஆன்மீக நலனுக்கு உதவும் வகையில் கவனம் செலுத்த வேண்டும்.
திருவழிபாட்டில் பங்கு கொள்வோர் அனைவரும் கடைப்பிடிக்கின்ற பொதுவான உடலின் நிலை, திருவழிபாட்டுக்குக் கூடியுள்ள கிறிஸ்தவக் குழும உறுப்பினர்களின் ஒன்றிப்புக்கு அடையாளம். அது பங்கெடுப்போரின் மனதையும் உள் உணர்வுகளையும் வெளிப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும்.
43. வருகைப் பாடலின் தொடக்கம் அல்லது அருள்பணியாளர் பீடத்தை அணுகுதல்முதல் திருக்குழும மன்றாட்டு முடியும்வரை நம்பிக்கையாளர் நிற்க வேண்டும். நற்செய்திக்குமுன் வரும் “அல்லேலூயா” பாடல், நற்செய்தி அறிவித்தல், நம்பிக்கை அறிக்கை, பொது மன்றாட்டு இவற்றின்போதும் அவர்கள் நிற்க வேண்டும். மேலும் காணிக்கைமீது மன்றாட்டுக்குமுன் சொல்லப்படும் “சகோதர சகோதரிகளே,” தொடங்கிக் கீழே குறிப்பிடப்படும் பகுதிகளைத் தவிர்த்து, திருப்பலி முடியும்வரை நிற்க வேண்டும்.
நற்செய்தி வாசகத்துக்குமுன் வரும் வாசகங்களின்போதும் பதிலுரைத் திருப்பாடல், மறையுரை, காணிக்கைப் பொருள்களைத் தயார் செய்தல் ஆகிய நேரங்களிலும் மக்கள் அமர்ந்திருக்கலாம். திருவிருந்துக்குப்பின் அமைதி காக்கும்போது, சூழ்நிலைக்கு ஏற்ப அமரலாம்.
49 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam Sacram, 05.03.1967, எண் 7.16:A.A.S. 59 (1967) பக். 302, 305; திருப்பலி நூல், பாடல் திருப்பலி முறை, முன்னறிய வேண்டிவை.
50 காண். திருவழிபாடு, 116, 30.
51 காண். திருவழிபாடு, 54; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter Decumenici, 26-09-1964, எண் 59: A.A.S. 1964) பக். 891; திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam Sacram, 05-03-1967, எண் 47: A.A.S. 59 (1967) பக். 314.
52 காண். திருவழிபாடு, 30, 34, 21.
============== ↑ பக்கம் 27
அர்ச்சிப்பு நேரத்தில் உடல் நலம், இட நெருக்கடி, பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை மிகுதி அல்லது வேறு தகுந்த காரணங்கள் தடையாக இருந்தால் தவிர நம்பிக்கையாளர் முழங்காலிடு வர். அர்ச்சிப்புக்குப்பின் அருள்பணியாளர் முழங்காலிடும்போது, முழங்காலிட முடியாத மக்கள் தாழ்ந்து பணிந்து வணங்க வேண்டும்.
எனினும் திருப்பலிச் சடங்குமுறையில் விவரிக்கப்பட்டுள்ள சைகைகள், உடலின் நிலைகள் இவற்றுக்கான ஒழுங்குமுறைகளை ஆயர் குழுக்கள் தங்கள் மக்களின் தனித் திறமைக்கும் ஏற்புடைய மரபுக்கும் தகுந்தாற்போல் தழுவியமைக்கலாம். அவ்வாறு தழுவியமைக்கும்போது கொண்டாட்டத்தின் பகுதி ஒவ்வொன்றின் பொருளுக்கும் பண்புக்கும் ஏற்றவாறு அவை இருக்கும்படி கவனிக்க வேண்டும். “தூயவர்” ஆர்ப்பரிப்பின் முடிவிலிருந்து நற்கருணை மன்றாட்டு முடியும்வரையிலும், மேலும் திருவிருந்துக்குமுன் அருள்பணியாளர் “இதோ, இறைவனின் செம்மறி” எனச் சொல்லும் வரையிலும் மக்கள் முழங்காலிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது போற்றுதற்கு உரியது.
ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் சைகைகளும் உடலின் நிலைகளும் ஒரே சீராக இருக்கும் பொருட்டு, திருத்தொண்டரோ பொது நிலைப் பணியாளரோ அருள்பணியாளரோ திருப்பலி நூலில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்தையும் பின்பற்ற அறிவுறுத்தும்போது, மக்கள் அவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
44 அருள்பணியாளர் திருத்தொண்டரோடும் பணியாளர்களோடும் பீடத்தை நோக்கி வருதல், திருத்தொண்டர் நற்செய்தி அறிவிக்கும் முன்னர் வாசக மேடைக்கு நற்செய்தி வாசக நூலை எடுத்து வருதல், நம்பிக்கையாளர் காணிக்கைப் பொருள்களைக் கொண்டு வருதல், திருவிருந்தை உட்கொள்ளப் பவனியாக வருதல் ஆகிய செயல்களும் பவனிகளும் சைகைகளில் அடங்கும். இத்தகைய செயல்களும் பவனிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைப்படி அவற்றுக்கு உரிய பாடலுடன் அழகுற நடைபெறுவது விரும்பத்தக்கது.
அமைதி
45, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்ட நேரத்தில் திரு அமைதி காக்கப்பட வேண்டும்.54 திரு அமைதியின் தன்மை ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் அதனைக் கடைப்பிடிக்கும் நேரத்தைப் பொறுத்தது. பாவத்துயர்ச் செயலிலும் மன்றாடுவோமாக என்னும் அழைப்புக்குப் பின்னும் ஒவ்வொருவரும் தம்மைப் பற்றிச் சிந்திப்பர். வாசகமும் மறையுரையும் முடிந்தபின் தாங்கள் கேட்டவற்றைச் சிறிது நேரம் தியானிப்பர். திருவிருந்துக்குப்பின் தம் உள்ளத்தில் இறைவனைப் புகழ்ந்து வேண்டுவர்.
கொண்டாட்டத்துக்கு முன்னரே கோவிலிலும் திருப்பொருள் அறையிலும் திருத்துகில் அணியும் அறையிலும் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி காத்தல் போற்றுதற்கு உரியது. இவ்வாறு எல்லாரும் திரு நிகழ்ச்சிகளை இறைப்பற்றுடனும் தகுந்த முறையிலும் நிறைவேற்றத் தங்களையே தயாராக்கிக் கொள்வர்.
53 காண். திருவழிபாடு, 40; திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம்: Varietates legitimae, 25-01-1994, எண் 41: A.A.S. 87 (1995) பக். 304.
54 காண். திருவழிபாடு, 30; திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam sacram, 05-03-1967, எண 1” A.A.S. 59 (1967) பக். 305.
============== ↑ பக்கம் 28
III. திருப்பலியின் பல்வேறு பகுதிகள்
அ) தொடக்கச் சடங்குகள்
6. இறைவார்த்தை வழிபாட்டுக்கு முன்வரும் சடங்குகளான, அதாவது வருகைப் பாடல், வாழ்த்துரை, பாவத்துயர்ச் செயல், “ஆண்டவரே, இரக்கமாயிரும்”, “உன்னதங்களிலே”, இருக்குழும மன்றாட்டு முதலியன, தொடங்குதல், முன்னுரைத்தல், தயாரித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டவை.
ஒன்றுகூடி வரும் நம்பிக்கையாளர் ஒரு குழுமமாகத் தங்களை உருவாக்கவும் இறைவார்த்தையை நன்முறையில் கேட்பதற்கும் நற்கருணையை மாண்புடன் கொண்டாடுவதற்கும் தங்களையே தயாரித்துக் கொள்வதே இவற்றின் நோக்கம்.
திருப்பலியோடு இணைந்திருக்கும் சில கொண்டாட்டங்களில் திருவழிபாட்டு நூல்களின் விதிமுறைகளுக்கு ஏற்றபடி தொடக்கச் சடங்குகள் விட்டு விடப்படுகின்றன அல்லது தனிப்பட்ட வகையில் நிகழ்த்தப்படுகின்றன.
வருகை
அருள்பணியாளர் திருத்தொண்டரோடும் 47. மக்கள் ஒன்றுகூடியபின் பணியாளர்களோடும் வரும்போது வருகைப் பாடல் தொடங்கப்படும். கொண்டாட்டத்தைத் தொடங்கவும் திருக்கூட்டத்தின் ஒன்றிப்பை வளர்க்கவும் வழிபாட்டுக் காலத்தின் அல்லது திருநாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும் அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனி இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாடலின் நோக்கம் ஆகும்.
48. பாடகர் குழுவும் மக்களும் வருகைப் பாடலை மாறி மாறிப் பாடலாம் அல்லது பாடகர் ஒருவரும் மக்களும் அவ்வாறே பாடலாம் அல்லது அனைத்து மக்களும் அல்லது பாடகர் குழு மட்டும் பாடலாம். உரோமைப் படிக்கீத நூலில் அல்லது சாதாரணப் படிக்கீத நூலில் உள்ள பல்லவியையும் அதன் திருப்பாடலையும் வருகைப் பாடலாகப் பயன்படுத்தலாம் அல்லது குறிப்பிட்ட கொண்டாட்டத்துக்கும் நாள், காலம் ஆகியவற்றின் தன்மைக்கும் பொருத்தமான, ஆயர் குழுவின் அனுமதியைப் பெற்ற வேறு பாடலைப் பயன்படுத்தலாம்.55
வருகைப் பாடலைப் பாடவில்லை என்றால், நம்பிக்கையாளர் அல்லது அவர்களுள் ஒரு சிலர் திருப்பலி நூலில் கண்டுள்ள வருகைப் பல்லவியை வாசிப்பர் அல்லது வாசகர் வாசிப்பார்; இல்லை எனில் அருள்பணியாளரே அதைத் தொடக்க அறிவுரை போன்று தழுவியமைப்பார்.
பலிப்பீட வணக்கமும் குழுமியுள்ள மக்களுக்கு வாழ்த்தும்
49 அருள்பணியாளர், திருத்தொண்டர், பணியாளர்கள் ஆகியோர் திருப்பீட முற்றத்துக்கு வந்ததும் பீடத்துக்குத் தாழ்ந்து பணிந்து வணக்கம் செலுத்துவர்.
இவ்வணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அருள் பணியாளரும் உருத்தொண்டரும் பீடத்தை முத்தமிடுவர்; சூழ்நிலைக்கு ஏற்ப, அருள் பணியாளர் சிலுவைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டுவார்.
55 காண். இரண்டாம் ஜான் பால், Dies Domini, 31-05-1998, 50: A.A.S. 90 (1998) பக். 745
,
============== ↑ பக்கம் 29
50, வருகைப் பாடல் முடிந்ததும் அருள்பணியாளர் தமது இருக்கைமுன் நி.. திருக்கூட்டத்தினரோடு இணைந்து தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வ: பின்பு அவர் ஆண்டவரின் உடனிருப்பை வாழ்த்துரை வழியாகத் திருக்கூட்டக்க உணர்த்துவார். இவ்வாறு அவர் வாழ்த்துவதிலும் அதற்கு மக்கள் பதில் அளிப்பதிலும் கூடியுள்ள திரு அவையின் மறைபொருள் வெளிப்படுகின்றது.
மக்களை வாழ்த்திய பின் அருள்பணியாளர், திருத்தொண்டர் அல்லது பொது நிலைப் பணியாளர் மிகச் சுருக்கமாக முன்னுரை வழங்கி அந்நாளின் திருப்பலிக்கு நம்பிக்கையாளரை இட்டுச் செல்லலாம்.
பாவத்துயர்ச் செயல்
51. அதன்பின் அருள்பணியாளர் பாவத்துயர்ச் செயலுக்கு அழைப்பார். சிறிது நேரம் அமைதி காத்தபின் திருக்கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து பொதுப் பாவ மன்னிப்பு வாய்பாட்டைச் சொல்வர். அருள்பணியாளர் சொல்லும் பாவ மன்னிப்பு மன்றாட்டோடு இச்செயல் முடிவுறும். எனினும் இதற்கு ஒப்புரவு அருளடையாளத்தின் ஆற்றல் கிடையாது.
ஞாயிற்றுக்கிழமைகளில், குறிப்பாக பாஸ்கா காலத்தில் வழக்கமாக நடைபெறும் பாவத்துயர்ச் செயலுக்குப் பதிலாக முடிந்தவரையில் திருமுழுக்கை நினைவுபடுத்தும் விதமாகத் தண்ணீரைப் புனிதப்படுத்தித் தெளிக்கலாம். 56
ஆண்டவரே, இரக்கமாயிரும்
52. பாவத்துயர்ச் செயலிலேயே இடம் பெற்றிருந்தாலொழிய பாவத்துயர்ச் செயலுக்குப்பின் எப்பொழுதும் “ஆண்டவரே, இரக்கமாயிரும்” என்பது தொடங்கப்படும். இப்பாடல் இறைவனைப் புகழ்வதாகவும் அவருடைய இரக்கத்தை இறைஞ்சி மன்றாடுவதாகவும் இருப்பதால், இது வழக்கமாக எல்லாராலும் பாடப்படும். அந்தப் பகுதியை மக்களுடன் பாடகர் குழுவோ பாடகர் ஒருவரோ பாடலாம்.
ஆர்ப்பரிப்பு வழக்கமாக இரு முறை சொல்லப்படும்; எனினும் மொழி, இசை, சூழ்நிலை முதலியவற்றின் தன்மைக்கு ஏற்ப அதைப் பல முறை சொல்லலாம். பாவத்துயர்ச் செயலின் ஒரு பகுதியாகிய “ஆண்டவரே, இரக்கமாயிரும்” பாடப்படும்பொழுது, ஒவ்வொரு ஆர்ப்பரிப்புக்கு முன்னும் சிறு வசனத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
உன்னதங்களிலே
53. “உன்னதங்களிலே” எனும் பாடல் மிகப் பழமையானதும் வணக்கத்துக்கு உரியதும் ஆகும். தூய ஆவியாரால் ஒன்றுகூட்டப்பெற்ற திரு அவை இப்பாடலில் இறைத் தந்தையையும் திருச் செம்மறியையும் மாட்சிப்படுத்தி இறைஞ்சி மன்றாடுகின்றது. இந்தப் பாடலின் பாடத்துக்குப் பதிலாக வேறு எந்தப் பாடத்தையும் பயன்படுத்தக்கூடாது. இப்பாடல் அருள்பணியாளரால் தொடங்கப்படும்; பொருத்தமானால் பாடகர் ஒருவரோ பாடகர் குழுவோ தொடங்கலாம். இப்பாடலை நம்பிக்கையாளர் எல்லாரும் சேர்ந்து பாடுவர்; அல்லது மக்களும் பாடகர் குழுவும் மாறி மாறிப் பாடுவர்; அல்லது பாடகர் குழு மட்டும் பாடும். இதனைப் பாடவில்லை என்றால் அனைவரும் சேர்ந்தோ மாறிச் சொல்வர்.
திருவருகைக் காலம், தவக் காலம் தவிர்த்து ஞாயிற்றுக்கிழமைகள், பெருவிழாக்கள், சொல்லப்படும். விழாக்களிலும் இன்னும் சில சிறப்புக் கொண்டாட்டங்களிலும் இது பாடப்படும் அல்லது சொல்லப்படும்.
56 காண். பிற்சேர்க்கை , பக். 1263 – 1266.
============== ↑ பக்கம் 30
திருக்குழும மன்றாட்டு
54. அடுத்து அருள்பணியாளர் மக்களை இறைவேண்டல் செய்ய அழைப்பார். அனைவரும் அருள்பணியாளரோடு சேர்ந்து இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணரவும் தங்கள் கருத்துகளை மனத்தில் நினைவுகூரவும் சிறிது நேரம் அமைதியாய் நெப்பர். பின் அருள்பணியாளர் மன்றாட்டைச் சொல்வார். இது வழக்கமாக “திருக்கும் மன்றாட்டு” என அழைக்கப்படுகின்றது. இதன் வழியாகக் கொண்டாட்டத்தின் பண்பு வெளிப்படுத்தப்படுகின்றது. திரு அவையின் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி இறைத் தந்தையை நோக்கிக் கிறிஸ்து வழியாக தூய ஆவியாரின் ஒன்றிப்பில் வழக்கமாகச் சொல்லப்படும் இம்மன்றாட்டு மூவொரு கடவுளைக் குறிப்பிடும் நீண்ட முடிவுரையைக் கொண்டிருக்கும். அவை பின்வருமாறு:
– அதாவது இம்மன்றாட்டு தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டால், “உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்” என முடிவுறும்;
– தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால், “உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம் என முடிவுறும்;
– திருமகனை நோக்கிச் சொல்லப்பட்டால், “தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம் என முடிவுறும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, “ஆமென்” எனும் ஆர்ப்பரிப்பு வழியாக அதைத் தமதாக்கிக் கொள்வர்.
திருப்பலியில் எப்பொழுதும் ஒரே ஒரு “திருக்குழும மன்றாட்டு” சொல்லப்படும்.
ஆ) வார்த்தை வழிபாடு
55. வார்த்தை வழிபாட்டின் சிறப்பான பகுதி திருநூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகங்களும் அவற்றிற்கு இடையில் வரும் திருப்பாடலும் ஆகும். மறையுரை, நம்பிக்கை அறிக்கை, பொது மன்றாட்டு அல்லது நம்பிக்கையாளர் மன்றாட்டு ஆகியவை இவ்வார்த்தை வழிபாட்டை வளர்த்து, நிறைவுக்குக் கொண்டு வருகின்றன. எவ்வாறெனில் மறையுரை விளக்கும் வாசகங்களில் கடவுள் தம் மக்களுடன் பேசுகின்றார்;58 அவர்களுக்கு மீட்பு-ஈடேற்றம் பற்றிய மறைபொருள் நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆன்ம ஊட்டம் அளிக்கின்றார்; கிறிஸ்து தம் வாக்கினால் நம்பிக்கையாளர் நடுவில் உடனிருக்கின்றார்.59 இந்த இறைவார்த்தையை மக்கள் தம் அமைதியினாலும் பாடல்களாலும் தமதாக்கிக் கொள்கின்றார்கள்; நம்பிக்கை அறிக்கை வழியாக அதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இவ்வாறு வளம் பெற்று, பொது மன்றாட்டு வழியாகத் திரு அவை முழுவதன் தேவைகளுக்காகவும் அனைத்துலகின் மீட்புக்காகவும் மன்றாடுகின்றார்கள்.
57 காண். தெர்த்தூலியன், Adversus Marcionem, IV, 9: CCSL 1, பக். 560; ஒரிஜன், Disputatio cum Heracleida, 1 67, பக். 62; Statuta Concili Hipponensis Breviata, 21: CCSL 149, பக். 39.
58 காண். திருவழிபாடு, 33. 59 காண். மேற்படி, 7.
============== ↑ பக்கம் 31
அமைதி
56. தியானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் வார்த்தை வழிபாடு கொண்டாடப்பு, வேண்டும். ஆகவே எவ்விதத்திலும் விரைவாகச் செயல்படுதல் தியானத்துக்குத் தடையால், இருந்தால் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒன்றுகூட்டப்பட்ட மக்களுக்கு ஏற்றவாறும் தூய ஆவியாரால் தூண்டப்பெற்று இறைவார்த்தையை மனதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் மன்றாட்டின் வழியாகப் பதிலை அளிக்கக் தயாராகும்படியாகவும் சிறிது நேரம் அமைதி காப்பது நன்று. வார்த்தை வழிபாடு தொடங்கும்முன், முதலாம் இரண்டாம் வாசகங்களுக்குப்பின், மறையுரைக்குப்பின் ஆகிய நேரங்களில் அமைதி காப்பது பொருத்தமானது.60
விவிலிய வாசகங்கள்
57. வாசகங்கள் வாயிலாக நம்பிக்கையாளருக்கு இறைவாக்கு விருந்து படைக்கப்படுகின்றது. விவிலியத்தின் கருவூலங்கள் அவர்களுக்குத் திறக்கப்படு கின்றன.61 விவிலிய வாசகங்களில் உள்ள அமைப்பு முறையைப் பின்பற்றுவது பெரிதும் விரும்பத்தக்கது. ஏனெனில் அது இரு ஏற்பாடுகளின் ஒன்றிணைப்பையும் மீட்பின் வரலாற்றையும் தெளிவுபடுத்துகின்றது. வாசகங்களும் பதிலுரைத் திருப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றுக்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது.62
58. மக்களோடு கொண்டாடப்படும் திருப்பலியில் வாசகங்களை எப்பொழுதும் வாசக மேடையிலிருந்து வாசிக்க வேண்டும்.
59. மரபுப்படி வாசகங்களை அறிக்கையிடும் பணி திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின் தலைவரை அல்ல, திருப்பணியாளரையே சார்ந்தது ஆகும். எனவே வாசகர் வாசகங்களை வாசிப்பார்; திருத்தொண்டர் நற்செய்தியைப் பறைசாற்றுவார். அவர் இல்லை எனில் மற்றோர் அருள்பணியாளர் பறைசாற்றுவார். திருத்தொண்டரோ வேறொரு அருள்பணியாளரோ இல்லை எனில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரே நற்செய்தியைப் பறைசாற்றுவார். தகுதியான வாசகரும் இல்லை எனில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரே மற்ற வாசகங்களையும் வாசிப்பார்.
ஒவ்வொரு வாசகத்துக்குப் பின்னரும் வாசகர் ஆர்ப்பரிப்பை முழக்கமிடுவார். கூடியுள்ள மக்கள் அதற்குப் பதில் கூறும் விதத்தில் நம்பிக்கையும் நன்றியுணர்வும் நிறைந்த உள்ளத்தோடு தாங்கள் பெற்றுக்கொண்ட இறைவார்த்தைக்கு மதிப்பு அளிப்பர்.
60. நற்செய்தியைப் பறைசாற்றுவதே வார்த்தை வழிபாட்டின் உச்சக்கட்டம் ஆகும். மிகச் சிறப்பான வணக்கம் இதற்கு வழங்கப்பட வேண்டும் என்று திருவழிபாடே போதிக்கின்றது. ஏனைய வாசகங்களைவிட நற்செய்தியைப் பறைசாற்றுதல் தனி மதிப்பு உடையது என்பதால், அதற்கு மிகச் சிறப்பான வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்று திருவழிபாடு கற்பிக்கின்றது. நற்செய்தியைப் பறைசாற்றக் குறிப்பிடப்பட்ட திருப்பணியாளர் தேவை; தம் பணியை ஆற்றும் முன், அவர் ஆசி பெற்று அல்லது மன்றாடித் தம்மைத் தயாரித்துக் கொள்வார்; நம்பிக்கையாளரோ, தங்கள் ஆர்ப்பரிப்பு களால் கிறிஸ்து தங்களோடு உடனிருப்பதையும் பேசுவதையும் ஏற்று அறிக்கை இடுவார்கள்; நற்செய்தியை அவர்கள் நின்றுகொண்டு கேட்பார்கள்; மேலும் நற்செய்தி வாசக நூலுக்கு வழங்கப்படும் வணக்கத்துக்கு உரிய அடையாளங்களிலும் இது விளங்கும்.
60 காண். உரோமைத் திருப்பலி நூல், திருப்பலி வாசக அமைப்புமுறை, 1981, 28.
61 காண். திருவழிபாடு, 51.
62 காண். இரண்டாம் ஜான் பால், Vicesimus quintus annus, 04-12-1988, 13: A.A.S. 81 (1989) பக்.”
============== ↑ பக்கம் 32
பதிலுரைத் திருப்பாடல்
61. முதல் வாசகத்துக்குப் பின்னர் பதிலுரைத் திருப்பாடல் தொடரும்; இது இறைவார்த்தை பொட்டின் முழுமையான பகுதி ஆகும்; இது இறைவார்த்தையைத் தியானிக்க உதவுவதால், – திருவழிபாட்டிலும் அருள்பணியிலும் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது.
பதிலுரைத் திருப்பாடல் ஒவ்வொரு வாசகத்துக்கும் பொருத்தமாக அமைகின்றது. க. பொதுவாக வாசக நூலிலிருந்து எடுக்கப்படுகின்றது.
பதிலுரைத் திருப்பாடலைப் பாடுவது மிக நன்று; அதில் மக்களின் பதிலுரையாவது பாடப்பட வேண்டும். எனவே திருப்பாடல் நேரடியாகப் பாடப்படும் நேரம் தவிர, அதாவது எந்தவிதப் பதிலுரையும் இல்லாமல், திருக்கூட்டம் முழுவதும் அமர்ந்தவாறே கேட்டு, வழக்கமாகப் பதிலுரைத்துப் பங்கு கொள்ளும்போது, திருப்பாடல் முதல்வர் அல்லது திருப்பாடல் பாடகர், திருப்பாடல் வரிகளை வாசக மேடையிலிருந்தோ தகுந்த மற்றோர் இடத்திலிருந்தோ பாடுவார். மக்களும் பதிலுரைத் திருப்பாடலை எளிதாகப் பாடும் வண்ணம் பதிலுரைத் திருப்பாடலின் பாடங்கள் அல்லது திருப்பாடல்கள் திருவழிபாட்டு ஆண்டின் பல காலங்களுக்கும் அல்லது பல்வகைப்பட்ட புனிதர்களுக்கும் ஏற்றவாறு தெரிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பாடலைப் பாடுவதெனில் வாசகத்துக்கு ஏற்பப் பாடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருப்பாடலைப் பாட முடியாவிடில், இறைவார்த்தையைத் தியானிப்பதற்கு ஏற்ற வகையில் அதை வாசிக்க வேண்டும்.
வாசக நூலில் குறிக்கப்பட்டுள்ள திருப்பாடலுக்குப் பதிலாக, உரோமைப் படிக்கீத நூலிலிருந்து படிக்கீதம், சாதாரண படிக்கீத நூலிலிருந்து பதிலுரைத் திருப்பாடல் அல்லது அல்லேலூயாவுடன் கூடிய திருப்பாடல் ஆகியவற்றை இந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பாடலாம்.
நற்செய்தி வாசகத்துக்கு முன் ஆர்ப்பரிப்பு
63. நற்செய்திக்கு முன்வரும் வாசகத்தை வாசித்தபின் “அல்லேலூயா” அல்லது வேறொரு பாடல், சடங்குமுறை நூலில் உள்ளபடியும் திருவழிபாட்டுக் காலத்தில் குறிப்பிட்டபடியும் பாடப்படும். இவ்வகை ஆர்ப்பரிப்பு தன்னிலே ஒரு சடங்கு அல்லது செயல் ஆகும். இதன் வழியாக நம்பிக்கையாளரின் திருக்கூட்டம் நற்செய்தியில் தங்களோடு பேசவிருக்கும் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்கின்றது; பாடல் வழியாகத் தங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றது. பாடகர் குழுவினர் அல்லது பாடகர் ஒருவர் தொடங்கிப் பாட, எல்லாரும் நின்றுகொண்டு பாடுவர்; தேவைக்கு ஏற்பத் திரும்பப் பாடலாம். பல்லவியைப் பாடகர் குழுவினரோ பாடகர் ஒருவரோ பாடுவர்.
அ) தவக் காலம் தவிர எல்லாக் காலங்களிலும் “அல்லேலூயா” பாடப்படும். பல்லவி வாசக நூலிலிருந்து அல்லது படிக்கீத நூலிலிருந்து எடுக்கப்படும்;
ஆ) தவக் காலத்தில் “அல்லேலூயா’வுக்குப் பதிலாக வாசக நூலில் குறிப்பிட்டுள்ளபடி நற்செய்திக்குமுன் வசனம் பாடப்படும். எனினும் படிக்கீத நூலில் -ள்ளபடி மற்றொரு திருப்பாடலையோ தொடர்பாடலையோ பாடலாம்.
3 நற்செய்திக்குமுன் ஒரு வாசகம் மட்டும் இருக்கும்போது:
அ) “அல்லேலூயா’ சொல்ல வேண்டிய காலத்தில் அல்லேலூயா பாடலைப் பயன்படுத்தலாம் அல்லது பதிலுரைத் திருப்பாடலுடன் தொடரும் “அல்லேலூயா” பாடலை தனுடைய வசனத்தோடு சேர்த்துப் பயன்படுத்தலாம்.
============== ↑ பக்கம் 33
ஆ) ‘அல்லேலூயா” சொல்லப்படாத காலத்தில் திருப்பாடலையும் நற்செய்தி வரும் வசனத்தையும் சொல்லலாம் அல்லது திருப்பாடலை மட்டும் சொல்லலாம்,
இ) ‘அல்லேலூயா” அல்லது நற்செய்திக்குமுன் வரும் வசனம் பாடப்படவி எனில், அவற்றை விட்டுவிடலாம்.
64 பாஸ்கா பெருவிழா, தூய ஆவியார் பெருவிழா தவிர, பிற நாள்களில் தொடர்பாடல்களை விரும்பினால் ”அல்லேலூயா”வுக்குமுன் பாடலாம்,
மறையுரை
65, மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி ஆகும்; அது மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெனில் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊட்டம் அளிக்க அது தேவை. திருவிவிலிய வாசகங்களிலிருந்தோ திருப்பலியின் பொதுப் பகுதி அல்லது சிறப்புப் பகுதியிலிருந்தோ தெரிவு செய்யப்பட்ட ஒரு பாடத்தின் சில கூறுகளை விளக்குவதாக மறையுரை அமைய வேண்டும்; கொண்டாடப்பெறும் மறையுண்மையையும் கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ள வேண்டும். 64
66, திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார்; அவர் தம்மோடு சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் ஒருவரிடமோ அவ்வப்போது சூழ்நிலைகளுக்கு ஏற்பத் திருத்தொண்டரிடம்கூட இப்பணியை ஒப்படைக்கலாம். ஆனால் பொதுநிலையினரிடம் இதனை ஒருபோதும் ஒப்படைக்கக்கூடாது.” சிறப்பான நிகழ்வுகளில் தக்க காரணத்துக்காக, கூட்டுத்திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது ஒர் அருள்பணியாளர் மறையுரை நிகழ்த்தலாம்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள் பங்கேற்கும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்துவது கட்டாயம் ஆகும்; தகுந்த காரணம் இருந்தாலன்றி, இதை விட்டுவிடக்கூடாது. பிற நாள்களில் குறிப்பாகத் திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும் நிகழ்ச்சிகளிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகின்றது.”
மறையுரைக்குப் பின் சிறிது நேரம் அமைதி காப்பது பொருத்தம் ஆகும்.
நம்பிக்கை அறிக்கை
67. திருவிவிலியத்திலிருந்து எடுக்கப்பட்ட வாசகங்களில் பறைசாற்றப்பட்டதும் மறையுரையில் விளக்கப்பட்டதுமான இறைவார்த்தைக்கு, கூடியுள்ள மக்கள் எல்லாரும் பதிலுரைப்பதும் திருவழிபாட்டுப் பயன்பாட்டுக்காக ஒப்புதல் பெற்ற வாய்பாட்டில் நம்பிக்கை அடிப்படை விதிகளை வெளிப்படுத்துவதன் வழியாக நம்பிக்கையின் மாபெரும் மறையுண்மைகளை மதிப்பதும் அறிக்கையிடுவதும் நம்பிக்கை அறிக்கையின் நோக்கம் ஆகும். நற்கருணை வழிபாடு தொடங்குவதற்கு முன்பு இதனை அவர்கள் செய்கின்றனர்.
68. ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் அருள் பணியாளரும் மக்களும் சேர்ந்து நம்பிக்கை அறிக்கையைப் பாட வேண்டும் அல்லது சொல்ல வேண்டும். தனிப்பட்ட சிறப்புக் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை அறிக்கையைச் சொல்லலாம்.
63 காண். திருவழிபாடு, 52; திச 76781
64 காண், திருச்சடங்குத் திருப்பேராயம், Inter (ecumenici, 26.09.1964, எண் 54; A.A.S. 56 (1964) ப”
65 காண். திச 76781: A.A.S, 79 (1987) பக்., 1249; Ecclesiac de mysterin, 15.08.1997, art. 3: A.A.S, 89 (17)
66 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ccumenici, 26.09.1964. எண் 53: A.A.S. 56 (19)
============== ↑ பக்கம் 34
இதைப் பாடி அறிக்கையிட்டால் அருள்பணியாளரோ சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு பாடகரோ பாடகர் குழுவினரோ தொடங்குவர். இதைப் பாடினால், எல்லாரும் சேர்ந்து பாடுவர் அல்லது மக்களும் பாடகர் குழுவினரும் மாறி மாறிப் பாடுவர்.
இதைப் பாடவில்லை எனில், எல்லாரும் சேர்ந்தோ மக்கள் இருபகுதியாகப் பிரிந்தோ மாறி மாறிச் சொல்ல வேண்டும்.
பொது மன்றாட்டு
69. பொது மன்றாட்டில் அல்லது நம்பிக்கையாளரின் மன்றாட்டில் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்ட இறைவார்த்தைக்கு ஒரு வகையில் பதில் அளிக்கின்றார்கள். திருமுழுக்கில் தாங்கள் பெற்ற பொதுக் குருத்துவத் திருப்பணியை நிறைவேற்றி எல்லாருடைய மீட்புக்காகவும் இறைவனுக்கு மன்றாட்டுகளை ஒப்புக்கொடுக்கின்றனர். மக்களோடு சேர்ந்து நிகழ்த்தும் திருப்பலிகளின்போது இத்தகைய மன்றாட்டு இடம் பெறுவது விரும்பத்தக்கது. இம்மன்றாட்டுகள் புனிதத் திரு அவைக்காகவும் நம்மை ஆளும் அதிகாரிகளுக்காகவும் பற்பல தேவைகளில் உழல்வோருக்காகவும் மக்கள் எல்லாருக்காகவும் உலக முழுவதன் மீட்புக்காகவும் அமைந்திருக்க வேண்டும்.”
70. வழக்கமாகக் கீழ்வரும் வரிசையில் கருத்துக்கள் அமைய வேண்டும்.
அ. திரு அவையின் தேவைகளுக்காக;
ஆ. நாட்டு அதிகாரிகளுக்காகவும் அனைத்துலக மீட்புக்காகவும்;
இ. எல்லாவகையான இன்னல்களிலும் உழல்வோருக்காக;
ஈ. கூடியுள்ள குழுமத்துக்காக.
எனினும் உறுதிப்பூசுதல், திருமணம், அடக்கச் சடங்கு முதலான கொண்டாட்டங்களின்போது மன்றாட்டுகளின் வரிசை குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமையலாம். 71. திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் தம் இருக்கையிலிருந்து இம்மன்றாட்டுகளை வழிநடத்துவார். அவரே சுருக்கமான முன்னுரை கூறி நம்பிக்கையாளரை மன்றாட அழைப்பார். அவரே இறுதியில் ஒரு மன்றாட்டுடன் முடிப்பார். கருத்துக்கள் ஆழ்ந்தமைந்த மனதோடும் முன் மதியுள்ள சுதந்திரத்தோடும் சுருக்கமான சொற்களோடும் குழுமம் முழுவதன் வேண்டலை வெளிப்படுத்தும் தன்மையோடும் அமைந்திருக்க வேண்டும்.
திருத்தொண்டர், பாடகர், வாசகர் அல்லது பொது நிலையினருள் ஒருவர் வாசக மேடையிலிருந்து அல்லது வேறொரு வசதியான இடத்திலிருந்து கருத்துக்களை அறிவிப்பார்.
மக்கள் எல்லாரும் நின்றுகொண்டு ஒவ்வொரு கருத்துக்குப்பின்னும் சேர்ந்து, பதில் மொழியாலோ அமைதியாக மன்றாடியோ தங்கள் வேண்டலை வெளிப்படுத்துவர்.
இ) நற்கருணை வழிபாடு
72. கிறிஸ்து இறுதி இரவு விருந்தின்போது தமது பாஸ்கா பலியையும் விருந்தையும் ஏற்படுத்தினார். இதன் வழியாகச் சிலுவைப் பலி திரு அவையில் தொடர்ந்து நிகழ்வாக்கப்படுகின்றது. ஆண்டவர் தாமே நிறைவேற்றியதோடு தம் நினைவாகச் செய்ய வேண்டும் என்று தம்முடைய சீடர்களுக்கு விட்டுச் சென்ற அதே பலியை அருள்பணியாளர் ஆண்டவர் கிறிஸ்துவின் பதிலாளாயிருந்து நிறைவேற்றுவார்.”
67 காண். திருவழிபாடு, 53.
68 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter Decumenici, 26.09.1964, எண் 56: A.A.S. 56 (1964) பக். 890.
69 காண். திருவழிபாடு, 47; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 3a, b: A.A.S. 59 (1967) பக். 540-541.
============== ↑ பக்கம் 35
கிறிஸ்து அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்து, நன்றி செலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்துக் கூறியதாவது : “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், உண்மை பருகுங்கள்; இது என் உடல், இது என் இரத்தத்தின் கிண்ணம். இதை என் நினைவா செய்யுங்கள். எனவே திரு அவை கிறிஸ்துவின் இச்சொற்களுக்கும் செயல்களுக்கும் எம். பகுதிகளை அமைத்து, நற்கருணை வழிபாடு அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளது. எவ்வாறெனில்:
அ. காணிக்கைப் பொருள்களைத் தயாரிக்கும்போது, அப்பமும் இரசாயம் தண்ணீரும் பீடத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன; கிறிஸ்துவும் இதே பொருள்களைத் தம் கைகளில் ஏற்றார்.
ஆ. நற்கருணை மன்றாட்டில் மீட்புச் செயல் முழுவதற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்தப்படுகின்றது ; காணிக்கைப் பொருள்கள் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன.
இ. அப்பத்தைப் பிடுவதிலும் நற்கருணையை உட்கொள்வதிலும் நம்பிக்கையாளர் பலராயினும் திருத்தூதர்கள் கிறிஸ்துவின் கைகளிலிருந்து பெற்றுக்கொண்டதைப் போல ஒரே அப்பத்திலிருந்து ஆண்டவரின் உடலையும் ஒரே கிண்ணத்திலிருந்து ஆண்டவரின் இரத்தத்தையும் பெற்றுக்கொள்கின்றனர்.
காணிக்கைகளின் தயாரிப்பு
73. நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில், கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறப்போகும் காணிக்கைகள் பலிப்பீடத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன.
ஏற்கெனவே பலிப்பீடத்தின் அருகேயுள்ள திரு மேசையில் தயாரிக்கப்படாமல் இருந்தால் திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருப்பலி நூல், திருக்கிண்ணம் ஆகியவை நற்கருணை வழிபாடு அனைத்துக்கும் மையமாக இருக்கும் பலிப்பீடத்தின் மீது” வைக்கப்படும்பொழுது முதன்முதலாக அப்பீடம் தயாரிக்கப்படுகின்றது.
பின் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன; நம்பிக்கையாளர் அப்பத்தையும் இரசத்தையும் காணிக்கையாகக் கொடுப்பது பாராட்டுக்கு உரியது; அருள்பணியாளரோ திருத்தொண்டரோ வசதியான இடத்தில் நின்றவாறு, இக்காணிக்கைப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, பீடத்துக்குக் கொண்டு வர வேண்டும். முற்காலத்தில் நடந்தது போல, இன்று நம்பிக்கையாளர் தங்கள் உடைமைகளிலிருந்து திருவழிபாட்டுக்காக அப்ப, இரசத்தைக் கொண்டுவருவதில்லை என்றாலும் காணிக்கைப் பொருள்களைக் கொண்டுவரும் சடங்கு இன்றும் ஆன்மீக ஆற்றலும் பொருளும் கொண்டுள்ளது.
மேலும் ஏழைகளுக்காகவும் திரு அவைக்காகவும் நம்பிக்கையாளர் கொண்டுவந்த அல்லது கோவிலில் காணிக்கையாக எடுக்கப்பட்ட பணத்தையும் மற்றக் கொடைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்; இவற்றைப் பலிப்பீடத்துக்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்க வேண்டும்.
74. காணிக்கைப் பொருள்களைக் கொண்டு வருவதற்காக அமையும் பவனியின்போது காணிக்கைப் பாடல் பாடப்படுகின்றது (காண் எண் 37b). இக்காணிக்கைப் பொருள்கள் பீடத்தின் மீது வைக்கப்படுகின்றவரையிலாவது பாடல் தொடர்கின்றது. இப்பாடலைப் பற்றிய விதிமுறைகள், வருகைப் பாடலைப் பாடுவதற்கு உரிய விதிமுறைகளைப் போன்றவை (காண் எண் 48). காணிக்கைகளைப் பவனியாகக் கொண்டு வரவில்லை என்றாலும் காணிக்கைப் பொருள்களை ஒப்புக்கொடுக்கும் சடங்கின்போது காணிக்கைப் பாடல் எப்போதும் இடம்பெறும்.
70 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter ecumenici, 26-09.1964, எண் 91: A.A.S.” பக். 898; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 24: A.A. பக். 554.
============== ↑ பக்கம் 36
75. குறிக்கப்பட்ட மன்றாட்டோடு அருள் பணியாளர் அப்பத்தையும் இரசத்தையும் பீடத்தின் மீது வைப்பார். அருள் பணியாளர் பீடத்தின் மீது வைக்கப்பட்ட காணிக்கைகளுக்குத் தூபம் காட்டுவார்; பின்னர் சிலு வைக்கும் பீடத்துக்கும் அவ்வாறே செய்வார். இது கடவுளின் திருமுன் திரு அவையின் காணிக்கையும் இறைவேண்டலும் தூபம் போல மேலெழும்புவதைக் குறிக்கும். பின்னர் திருத்தொண்டரோ பணியாளர் ஒருவரோ புனிதப் பணியின் பொருட்டு அருள்பணியாளருக்கும் திருமுழுக்கினால் வரும் மாண்பின் பொருட்டு மக்களுக்கும் தூபம் காட்டலாம்.
76. பின்னர் அருள்பணியாளர் பீடத்தின் அருகில் தம் கைகளைக் கழுவுவார்; இச்சடங்கு அகத்தூய்மை பெற அருள்பணியாளர் கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்துகின்றது.
காணிக்கைப் பொருள்கள்மீது மன்றாட்டு
77. காணிக்கைப் பொருள்களைப் பீடத்தின் மீது வைத்து அதற்கான சடங்குகளை நிறைவேற்றிய பின், அருள்பணியாளர் தம்மோடு சேர்ந்து மன்றாட மக்களை அழைப்பார்; அதன் பின் காணிக்கைப் பொருள்கள் மீது மன்றாட்டைச் சொல்வதன் வழியாகக் காணிக்கைப் பொருள்களைத் தயார்செய்தல் முற்றுப் பெறுகின்றது. இதன் பின் நற்கருணை மன்றாட்டுக்குத் தயாரிப்பு தொடங்குகின்றது.
திருப்பலியில் ஒரே ஒரு “காணிக்கைமீது மன்றாட்டு” சொல்லப்படும். அது “எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம் எனும் குறுகிய முடிவுரையைக் கொண்டிருக்கும். இம்மன்றாட்டின் முடிவில் “திருமகன்” குறிப்பிடப்பட்டால் “என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம் என்றிருக்கும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி “ஆமென் எனும் ஆர்ப்பரிப்பு வழியாக அதைத் தமதாக்கிக் கொள்வர்.
நற்கருணை மன்றாட்டு
78. திருப்பலிக் கொண்டாட்டம் முழுவதற்கும் மையமும் சிகரமுமாய் உள்ள நற்கருணை மன்றாட்டு இப்பொழுது தொடங்கும். இது நன்றி மன்றாட்டாகவும் புனிதப்படுத்தும் மன்றாட்டாகவும் உள்ளது. மக்கள் தங்கள் உள்ளங்களை இறைவேண்டலுடனும் நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி அருள்பணியாளர் அழைப்பார். அவர்களைத் தம்முடன் இறைவேண்டலில் இணைத்து, திருக்கூட்டம் முழுவதன் பெயரால் இறைத் தந்தையை நோக்கி இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மன்றாடுவார். நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்தினர் எல்லாரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து கடவுளின் மாபெரும் செயல்களை அறிக்கையிடுவதிலும் பலி ஒப்புக்கொடுப்பதிலும் இந்த மன்றாட்டின் பொருள் அடங்கியுள்ளது. நற்கருணை மன்றாட்டைத் திருக்கூட்டத்தினர் எல்லாரும் வணக்கத்துடனும் அமைதியுடனும் செவிமடுக்க வேண்டும் என அது வலியுறுத்துகின்றது.
79. நற்கருணை மன்றாட்டு சிறப்பான அடிப்படைக் கூறுகளால் ஆனது. அவற்றைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம்:
அ) நன்றி கூறுதல் (இது குறிப்பாகத் தொடக்கவுரையில் தெளிவாக்கப்படுகின்றது): இதில் அருள்பணியாளர் திருக்கூட்டத்தினர் எல்லாருடைய பெயராலும் இறைத்தந்தையை மாட்சிப்படுத்துவார்; திருவழிபாட்டின் பல்வேறு நாள்கள், விழாக்கள், காலங்கள் இவற்றுக்கு ஏற்றவாறு மீட்பின் செயல் முழுவதற்காகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் அருள்பணியாளர் இறைத் தந்தைக்கு நன்றி செலுத்துவார்.
============== ↑ பக்கம் 37
ஆ) ஆர்ப்பரித்தல்: திருக்கூட்டம் முழுவதும் வான்படைகளோடு சேர்ந்து “தாய, எனும் பாடலைப் பாடுகின்றது. நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியாக அமையும் .. ஆர்ப்பரிப்பு அருள்பணியாளரோடு சேர்ந்து மக்கள் எல்லாராலும் எழுப்பப்படுகின்றது.
இ) தூய ஆவியாரின் வருகைக்காக மன்றாடுதல்: மக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டு, காணிக்கைகள் அர்ச்சிக்கப்பெறவும் அல்லது கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவும் திருவிருந்தில் பெறப்படும் மாசற்ற அப்பம் அதில் பங்கு பெறுவோருக்கு மீட்பு அளிக்கவும் திரு அவை தனிப்பட்ட மன்றாட்டுகள் வழியாகத் தூய ஆவியாரின் ஆற்றலுக்காக இறைஞ்சி மன்றாடுகின்றது.
ஈ) நற்கருணை நிறுவுதல் பற்றிய விவரிப்பும் அர்ச்சிப்பும்: வார்த்தைகளாலும் செயல்களாலும் கிறிஸ்துவின் பலி நிகழ்த்தப்படுகின்றது. இப்பலியைக் கிறிஸ்துவே இறுதி இரவு விருந்தின்போது நிறுவினார்; அப்போது தம் உடலையும் இரத்தத்தையும் அப்ப, இரச வடிவங்கள் வழியாக ஒப்புக்கொடுத்தார்; அதை உண்பதற்கும் பருகுவதற்கும் திருத்தூதர்களுக்குக் கொடுத்தார்; இந்த மறைநிகழ்வு என்றென்றும் நீடிக்க அவர்களுக்குக் கட்டளை கொடுத்தார்.
உ) நினைவு ஆர்ப்பரிப்பு: இதில் திருத்தூதர்கள் வாயிலாகக் கிறிஸ்து ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றி, திரு அவை குறிப்பாக கிறிஸ்துவின் புனிதப் பாடுகளையும் மாட்சிக்கு உரிய உயிர்த்தெழுதலையும் விண்ணேற்றத்தையும் நினைவுபடுத்திக் கிறிஸ்துவின் நினைவைக் கொண்டாடுகின்றது.
ஊ) ஒப்புக்கொடுத்தல்: இதன் வழியாக, இத்தகைய நினைவில், திரு அவை, குறிப்பாக இங்கே இப்போது கூடியுள்ள திருக்கூட்டம், தூய ஆவியாரில் தந்தைக்கு மாசற்ற பலிப்பொருளை ஒப்புக்கொடுக்கின்றது. மாசற்ற அப்பத்தை ஒப்புக்கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், தங்களையே கையளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும்71 இவ்வாறு கடவுளே எல்லாருக்கும் எல்லாமாய் இருக்கக் கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டு, கடவுளோடும் தங்களுக்குள்ளும் ஒருமைப்பாட்டை நாளுக்கு நாள் வளர்த்து நிறைவு செய்ய வேண்டும் என்பதும் திரு அவையின் நோக்கம்.”
எ) வேண்டல்கள்: விண்ணக, மண்ணகத் திரு அவை முழுவதும் ஒன்றிணைந்து நற்கருணையைக் கொண்டாடுகின்றது என்பதையும் கிறிஸ்துவின் உடலாலும் இரத்தத்தாலும் கிடைத்த ஈடேற்றத்திலும் மீட்பிலும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பெற்ற திரு அவைக்காகவும் அதன் உறுப்பினராக வாழ்வோர், இறந்தோர் எல்லாருக்காகவும் பலியை ஒப்புக்கொடுக்கின்றது என்பதையும் இவ்வேண்டல்கள் வெளிப்படுத்துகின்றன.
ஏ) இறுதி இறைப்புகழுரை: இறைவனைப் போற்றி மாட்சிப்படுத்தும் இப்புகழுரை மக்களின் “ஆமென்” என்ற ஆர்ப்பரிப்பால் உறுதி செய்யப்பட்டு நிறைவுறுகின்றது.
திருவிருந்துச் சடங்கு
80. நற்கருணைக் கொண்டாட்டம் பாஸ்கா விருந்து ஆகும். எனவே ஆண்டவரின் கட்டளைப்படி தக்க முறையில் தங்களைத் தயாரித்த நம்பிக்கையாளர் அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாகப் பெற்றுக்கொள்வது அவசியம். அப்பம் பிடுதலும் நம்பிக்கையாளரை நற்கருணைப் பந்திக்கு நேரடியாக அழைத்துச் செல்கின்ற ஏனைய தயாரிப்புச் சடங்குகளும் இதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
11 திருவழிபாடு, 48; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25-05-1967, எண் 12 A.A.S. 59 (1967) பக். 548-549.
72 காண். திருவழிபாடு, 48; திருப்பணியாளர்கள், 5; திருச்சடங்குத் திருப்பேரா ” ” Eucharisticum mysterium, 25.05.1967, எண் 12: A.A.S. 59 (1967) பக். 548-549.
============== ↑ பக்கம் 38
ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டல்
81. ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலில் அன்றாட உணவுக்காக மன்றாடுகின்றோம்; அது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக நற்கருணை உணவைக் குறிக்கும். மேலும் இவ்வேண்டலில் பாவத்திலிருந்து தூய்மை பெறவும் மன்றாடுகின்றோம்; இவ்வாறு பனிதமானவை உண்மையாகவே புனிதமானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இறைவேண்டல் செய்யும்படி அருள்பணியாளர் அழைப்பு விடுக்க, நம்பிக்கையாளர் எல்லாரும் அவரோடு சேர்ந்து இவ்வேண்டல் செய்கின்றனர். பின்பு அருள்பணியாளர் மட்டும் தொடர் இறைவேண்டலைச் சொல்ல, மக்கள் அதற்குப் புகழுரை கூறி அதை நிறைவுக்குக் கொண்டு வருகின்றார்கள். இத்தொடர் இறைவேண்டல் ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டலின் இறுதி மன்றாட்டை விரிவுபடுத்தி, நம்பிக்கையாளரின் குழுமம் முழுவதற்கும் தீமையின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை கோருகின்றது.
இறைவேண்டலுக்கு அழைப்பு, மன்றாட்டு, அதன் பிற்சேர்க்கை, இவை அனைத்தின் முடி வாக மக்கள் சொல்லும் புகழுரை ஆகிய அனைத்தும் பாடப்படுகின்றன அல்லது தெளிவான குரலில் சொல்லப்படுகின்றன.
அமைதிப் பரிமாற்றச் சடங்கு
82. பின், அமைதிப் பரிமாற்றச் சடங்கு தொடர்கின்றது. இதில் திரு அவை தனக்காகவும் மனிதக் குடும்பம் முழுவதற்காகவும் அமைதியையும் ஒற்றுமையையும் இறைஞ்சி மன்றாடுகின்றது. மேலும் நம்பிக்கையாளர் நற்கருணையில் பங்குகொள்ளும் முன், திரு அவையின் ஒன்றிணைப்பையும் அன்பையும் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் அமைதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் முறையை மக்களின் பழக்க வழக்கங்களுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப, ஆயர் பேரவை வரையறுக்கும். அமைதியின் அடையாளத்தைத் தம் அருகில் இருப்பவருக்கு மட்டும் ஒவ்வொருவரும் அடக்கமாகத் தெரிவித்தல் முறை ஆகும்.
அப்பம் பிடுதல்
83. அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தைப் பிடுவார். தேவைப்படின் திருத்தொண்டரோ கூட்டுத்திருப்பலி நிகழ்த்துபவரோ இதற்கு உதவி செய்வார். அப்பம் பிடுதல் இறுதி இரவு விருந்தில் கிறிஸ்து செய்த செயல் ஆகும்; திருத்தூதர் காலத்தில் முழு நற்கருணைக் கொண்டாட்டச் செயலுக்கும் இப்பெயர் கொடுக்கப்பட்டது. உலகின் மீட்புக்காக இறந்து உயிர்த்தெழுந்த, வாழ்வின் ஒரே அப்பமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து திருவிருந்தைப் பெற்றுக்கொள்வதன் வழியாக, நம்பிக்கையாளர் பலர் ஒரே உடலாக மாற்றப்படுகின்றார்கள் (1கொரி 10:17) என்பதை இச்செயல் சுட்டிக்காட்டுகின்றது. அப்பம் பிடுதல் அமைதிப் பரிமாற்றத்துக்குப்பின் தொடங்கும். இது உரிய மரியாதையுடன் நடைபெறும். தேவையின்றி இதில் நீண்ட நேரம் செலவழித்தலோ மிகையான முக்கியத்துவம் கொடுத்தலோ கூடாது. இச்சடங்கு அருள்பணியாளருக்கும் திருத்தொண்டருக்கும் உரியது.
அருள்பணியாளர் அப்பத்தைப் பிட்டு, அதிலிருந்து ஒரு சிறு துண்டைத் திருக் கிண்ணத்தில் இடுவார். மீட்புச் செயலில் ஆண்டவரின் உடலும், அதாவது இயேசு கிறிஸ்துவின் வாழும், மாட்சியின் உடலும் இரத்தமும் ஒன்றிப்பதைக் குறிக்கும். “உலகின் பாவங்களைப் போக்கும் எனும் மன்றாட்டு பாடகர் குழுவால் அல்லது மக்கள் பதில் அளிக்க பாடகர் ஒருவரால் பாடப்படும் அல்லது உரத்த குரலில் சொல்லப்படும். அப்பம் பிடும் சடங்கு முடியும்வரை தேவைக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பாடலாம் அல்லது சொல்லலாம். இறுதியாக “எங்களுக்கு அமைதியை அளித்தருளும் என்று முடிவுறும்.
============== ↑ பக்கம் 39
திருவிருந்து
84 கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பயனுள்ள வகையில் பெற்றுக்.ெ அருள்பணியாளர் அமைதியாக வேண்டிக்கொண்டு தம்மைத் தயாரிப்பார். அது 2… நம்பிக்கையாளரும் அமைதியாக வேண்டுவார்கள்.
அடுத்து அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தைத் திரு அப்பத் தட்டின்?…, அல்லது திருக்கிண்ணத்தின்மேல் பிடித்துக்கொண்டு நம்பிக்கையாளருக்குக் காண்பிப். அவர்களைக் கிறிஸ்துவின் விருந்துக்கு அழைப்பார். நம்பிக்கையாளருடன் சேர்ந்து குறிப்பிடப்பட்ட நற்செய்திச் சொற்களைப் பயன்படுத்திப் பணிவோடு வேண்டுவார்.
85. அருள்பணியாளர் செய்யக் கடமைப்பட்டுள்ளது போன்றே நம்பிக்கையாளரும் அதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்திலிருந்து ஆண்டவரின் திரு உடலைப் பெற்றுக்கொள்வதும் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டபடி திருக்கிண்ணத்தில் பங்குகொள்வதும் மிக விரும்பத்தக்கனவாகும் (காண். எண் 283). இவ்வாறு செய்வதன் வழியாகத் தற்போது கொண்டாடப்பட்ட பலியில் பங்குகொள்வதை நற்கருணை உட்கொள்ளுதல் சிறப்பாகக் காட்டுகின்றது.73
86. அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ளும்போது திருவிருந்துப் பாடல் தொடங்கும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றது; உள்ளத்து மகிழ்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது; நற்கருணை உட்கொள் வதற்காகப் பவனியாகச் செல்பவரின் குழும இயல்பையும் தெளிவாகக் காட்டுகின்றது. நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கப்படும்போது பாடல் தொடரும்.’4 திருவிருந்துக்குப்பின் பாடல் பாடப்படும் எனில், திருவிருந்துப் பாடலைத் தக்க நேரத்தில் முடிக்க வேண்டும்.
பாடகர்களும் வசதியாக நற்கருணை உட்கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
87. திருவிருந்துப் பாடலுக்காக, உரோமைப் படிக்கீத நூலிலுள்ள பல்லவியைத் திருப்பாடலோடு அல்லது தனியாகப் பயன்படுத்தலாம்; சாதாரணப் படிக்கீத நூலில் உள்ள திருப்பாடலோடு கூடிய பல்லவியையும் பயன்படுத்தலாம் அல்லது ஆயர் பேரவையின் ஒப்புதல் பெற்ற வேறு ஏற்ற பாடலைப் பயன்படுத்தலாம். இதனைப் பாடகர் குழு மட்டும் அல்லது பாடகர் குழுவோ ஒரு பாடகரோ மக்களோடு சேர்ந்து பாடலாம்.
பாடல் எதுவும் இல்லை எனில், நம்பிக்கையாளரோ அல்லது அவர்களுள் ஒரு சிலரோ அல்லது வாசகரோ திருப்பலி நூலில் தரப்பட்டுள்ள திருவிருந்துப் பல்லவியை வாசிக்கலாம்; பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் நற்கருணை உட்கொண்ட பின்பும், நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கும் முன்னும் இதனை வாசிப்பார்.
88. நற்கருணை வழங்கியபின், அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சூழ்நிலைக்கு ஏற்ப, சிறிது நேரம் அமைதி காத்து மன்றாடுவார்கள். விரும்பினால், திருக்கூட்டம் முழுவதும் ஒரு திருப்பாடலையோ வேறொரு புகழ்ச்சிப் பாடலையோ ஒரு பாடலையோ பாடலாம்.
இறைமக்களின் வேண்டலை நிறைவு செய்யவும் திருவிருந்துச் சடங்கு முழுவதையும் முடிவுக்குக் கொண்டு வரவும் அருள்பணியாளர் ‘திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் அவர் வேண்டுவார். சொல்வார். இம்மன்றாட்டில் கொண்டாடப்பட்ட மறைநிகழ்ச்சியின் பயன்களுக்காக
73 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண். 31,32: A.A.” 59 (1967) பக். 558-559; அருளடையாளங்களின் ஒழுங்குமுறைத் திருப்பேராயம், Imm ensae carital 29.01.1973, எண் 2: A.A.S. 65 (1973) பக். 267-268.
74 காண். அருளடையாளங்கள், திருவழிபாட்டுக்கான திருப்பேராயம், Inaestimabile 40″””” 03.04.1980, எண் 17: A.A.S. 72 (1980) பக். 338.
============== ↑ பக்கம் 40
திருப்பலியில் ஒரே ஒரு “திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு” சொல்லப்படும்; இம்மன்றாட்டு குறுகிய முடிவுரையோடு நிறைவுறும். அதாவது,
– திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டால் “எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்” என்றும்
– அது தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும் இறுதியில் திருமகனின் பெயர் இடம் பெற்றால் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்” என்றும்
– அது திருமகனை நோக்கிச் சொல்லப்பட்டால், “என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்” என்றும் சொல்லப்படும்.
மக்கள் “ஆமென்” என்ற ஆர்ப்பரிப்புடன் அம்மன்றாட்டைத் தமதாக்கிக் கொள்வர்.
ஈ) நிறைவுச் சடங்கு
90. நிறைவுச் சடங்கு பின்வருமாறு அமையும்:
அ) தேவைப்படின், சுருக்கமான அறிவிப்புகள்;
ஆ) அருள்பணியாளரின் வாழ்த்தும் ஆசியும்: குறிப்பிட்ட நாள்களிலும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் இவ்வாழ்த்தும் ஆசியும் “மக்கள் மீது மன்றாட்டு” அல்லது வேறு வாய்பாடு வழியாக விரித்துரைக்கப்படும்;
இ) ஒவ்வொருவரும் கடவுளை வாழ்த்தி, புகழ்ந்தவாறு நற்பணி செய்யத் திரும்பிச் செல்லும்படி திருத்தொண்டரோ அருள்பணியாளரோ மக்களை அனுப்புதல்;
ஈ) அருள்பணியாளரும் திருத்தொண்டரும் பீடத்தை முத்தமிட்ட பின்னர், அருள்பணியாளரும் திருத்தொண்டரும் பிற திருப்பணியாளர்களும் பீடத்தைப் பணிந்து வணங்குதல்.
============== ↑ பக்கம் 41
திருப்பலியில் கடமைகளும் பணிகளும்
91. நற்கருணைக் கொண்டாட்டம் கிறிஸ்துவின் செயல். அது ஆயரோடு ஒன்றிணைந்து அவருடைய ஆளுகையின்கீழ் உள்ள புனித மக்களாகிய திரு அவையின் செயலும் ஆகும்
“”யலும் ஆகும். ஆதலின் அது திரு அவை எனும் முழு உடலுக்கும் உரித்தாகும். திரு அவையை அது வெளிப்படுத்தி, அதன் மீது தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. திரு அவையின் ஒவ்வோர் உறுப்பினரும் வேறுபட்ட வகைகளிலும் வேறுபட்ட திருநிலைகளிலும் பணிகளிலும் பங்கேற்கின்றனர்.75 இவ்வாறு “தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், புனித மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்” என்று கூறப்படும் கிறிஸ்தவ மக்கள் தங்களது ஒன்றிணைப்பையும் திரு அவை ஆட்சி அமைப்பு நிலையையும் வெளிப்படுத்துகின்றனர்.76 ஆகவே திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர், பொது நிலைக் கிறிஸ்தவ நம்பிக்கையாளர் ஆகிய எல்லாரும் தத்தமக்கு உரிய பணியையும் கடமையையும் மட்டுமே முழுமையாக நிறைவேற்றுவார்களாக.77
1. திருநிலையினரின் கடமைகள்
92. முறையான எல்லா நற்கருணைக் கொண்டாட்டத்தையும் ஆயர் தாமாகவோ தம் துணைவர்களான அருள்பணியாளர்களைக் கொண்டோ ஒழுங்குபடுத்துவார்.78
மக்கள் கூடியுள்ள திருப்பலியில் ஆயர் உடனிருக்கும்பொழுது, அவரே இந்தப் புனிதச் செயலில் அருள்பணியாளர்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டு கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பது சிறந்தது. சடங்குமுறையின் வெளி ஆடம்பரத்தை அதிகரிப்பதற்காக அன்று; மாறாக ஒன்றிப்பின் அருளடையாளமாகிய திரு அவையின் மறைபொருளைத் தெளிவாகக் காட்டுவதற்காவே இவ்வாறு செய்யப்படுகின்றது.79
ஆயர் நற்கருணைப் பலியைக் கொண்டாடாமல் இருந்து, அப்பணியை வேறொருவரிடம் அளித்தாலும்கூட, ஆயர் மார்பணிச் சிலுவை, தோள்பட்டைத் திருத்துகில், நீள் வெண்ணாடை மேல் திருப்போர்வை ஆகியவை அணிந்து கொண்டு இறைவாக்கு வழிபாட்டுக்குத் தலைமை வகிப்பதும் திருப்பலியின் முடிவில் ஆசி அளிப்பதும் பொருத்தம் ஆகும்.
93. அருள்பணியாளர் திரு அவையில் கிறிஸ்துவின் பெயரால் பலி ஒப்புக்கொடுக்க அருள்பொழிவு பெற்ற திரு அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றார்.81 அவர் இங்கு இப்பொழுது கூடி இருக்கின்ற மக்களோடு உடனிருந்து அவர்களின் மன்றாட்டுக்குத் தலைமை வகிக்கின்றார்; அவர்களுக்கு மீட்பின் நற்செய்தியை அறிக்கையிடுகின்றார்; தூய ஆவியாரில் கிறிஸ்து வழியாக இறைத் தந்தைக்குப் பலி ஒப்புக்கொடுப்பதில் மக்களைத் தம்முடன் இணைத்துக் கொள்கின்றார்; நிலைவாழ்வின் அப்பத்தைச் சகோதரர் சகோதரிகளுக்கு அளித்து அவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கின்றார். எனவே நற்கருணைப் பலியைக் கொண்டாடும்போது இறைவனுக்கும் மக்களுக்கும் அருள்பணியாளர் மாண்புடனும் தாழ்மையுடனும் தொண்டாற்ற வேண்டும். மேலும் தாம் கொண்டாடுவதன் வழியாகவும் இறைவாக்குகளை அறிக்கையிடுவதன் வழியாகவும் கிறிஸ்துவின் உயிருள்ள உடனிருப்பை நம்பிக்கையாளருக்கு உணர்த்த வேண்டும்.
75 காண். திருவழிபாடு, 26.
76 காண். மேற்படி, 14.
77 காண். மேற்படி, 28.
78 காண். திருச்சபை, 26, 28; திருவழிபாடு, 42.
79 காண். திருவழிபாடு, 26.
80 காண். ஆயர்கள் திருச்சடங்கு, 1984, எண். 175 -186.
81 காண். திருப்பணியாளர்கள், 2; திருச்சபை, 28.
============== ↑ பக்கம் 42
94 திருநிலைப்படுத்தப்பட்டதன் காரணமாக, திருத்தொண்டர் திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது பணியாற்றுவோருள் அருள்பணியாளருக்கு அடுத்து முதலிடம் வகிக்கின்றார். ஏனெனில் திருத்தொண்டரின் இப்புனிதமான பணிநிலை திருத்தூதர்களின் தொடக்கக் காலத்திலிருந்து திரு அவையில் உயர் மதிப்பைப் பெற்றிருக்கின்றது. 2 திருப்பலியின்போது திருத்தொண்டருக்கே உரிய பணிகள் உள்ளன: நற்செய்தியைப் பறைசாற்றுதல், அவ்வப்போது இறைவார்த்தையைப் போதித்தல், பொது மன்றாட்டில் கருத்துக்களை எடுத்துரைத்தல், அருள்பணியாளருக்கு உதவி செய்தல், பீடத்தைத் தயார் செய்து திருப்பலிக் கொண்டாட்டத்தில் துணைபுரிதல், நம்பிக்கையாளருக்கு நற்கருணையை, சிறப்பாக இரசத்தின் வடிவத்தில் வழங்குதல், திருப்பலியின்போது திருக்கூட்டத்தின் சைகைகளையும் உடலின் நிலைகளையும் முறைப்படுத்த அவ்வப்போது தூண்டுதல் ஆகியவை ஆகும்.
II. இறைமக்களின் கடமைகள்
95. நம்பிக்கையாளர் திருப்பலிக் கொண்டாட்டத்தில் புனித மக்களினத்தினர், கடவுளின் உரிமைச் சொத்து, அரச குருக்களின் கூட்டத்தினர் ஆகின்றனர். இவ்வாறு இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்; மாசற்ற பலிப்பொருளை அருள்பணியாளர் கைகள் வழியாக மட்டுமன்றி அருள்பணியாளரோடு சேர்ந்தும் ஒப்புக்கொடுக்கின்றனர். தங்களையே கையளிக்கவும் கற்றுக் கொள்கின்றனர்.83 அவர்கள் தங்கள் ஆழ்ந்த மறையுணர்வாலும் அதே திருப்பலிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரர் சகோதரிகள் மீதுள்ள அன்பாலும் இதை வெளிப்படுத்தக் கவனம் செலுத்துவார்களாக.
ஆகவே தங்களுக்கு விண்ணகத்தில் ஒரே தந்தை உண்டு என்பதையும் இதனால் தாங்கள் அனைவரும் தங்களுக்குள் சகோதரர் சகோதரிகள் என்பதையும் கருத்தில் கொண்டு எல்லா வகையான வாழ்வின் தனித்தன்மை அல்லது பிரிவினை இவற்றின் அறிகுறிகளை அவர்கள் தவிர்ப்பார்களாக. 96. மேலும் இறைவார்த்தையைக் கேட்பதிலும் மன்றாட்டுகள், பாடல்கள் இவற்றில் பங்கெடுப்பதிலும், சிறப்பாக, பலியை ஒன்றுசேர்ந்து ஒப்புக்கொடுத்து ஆண்டவரின் திருப்பந்தியில் ஒருசேரக் கலந்துகொள்வதிலும் நம்பிக்கையாளர் ஒருடல் ஆவார்களாக. இந்த ஒன்றிப்பு, ஒன்றாகக் கடைப்பிடிக்கும் சைகைகள், உடலின் நிலைகள் ஆகியவற்றால் அழகுற வெளிப்படும். 97. நம்பிக்கையாளர் திருப்பலிக் கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பணியோ பொறுப்போ ஆற்றக் கேட்கப்படும்போதெல்லாம் அவர்கள் இறைமக்களுக்கு மனமகிழ்வோடு ஊழியம் புரிய மறுக்காதிருப்பார்களாக.
III. தனிவகைப் பணிகள்
நியமனம் பெற்ற பீடத்துணைவர், வாசகர் ஆகியோரின் பணி
98. பீடத்தில் பணி புரியவும் அருள்பணியாளர், திருத்தொண்டர் ஆகியோருக்குத் துணைபுரியவும் பீடத்துணைவர் நியமிக்கப்படுகின்றார். பீடத்தையும் திருப்பலித் திருக்கலங்களையும் தயார் செய்வது அவரது முக்கிய பணி ஆகும். மேலும் தேவைப்படின் நற்கருணையின் சிறப்புரிமைத் திருப்பணியாளராக நம்பிக்கையாளருக்கு அவர் நற்கருணை வழங்குவார். 84
பீடப் பணியில் தமக்கு உரிய பணிகளைப் (எண். 187-193) பீடத்துணைவர் நிறைவேற்ற வேண்டும்.
82 காண். ஆறாம் பால், Sacrum diaconatus Ordinem, 18.06.1967: A.A.S. 59 (1967) பக். 697-704; Pontificale Romanum, De Ordinatione Episcopi, presbyterorum et diaconorum, 1989, எண் 173.
83 திருவழிபாடு, 48: திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 12: A.A.S. 59 (1967) பக். 548-549.
84 காண். திச. 91082; Ecclesiae de mysterio, 15.08.1997, art, 8: A.A.S. 89 (1997) பக். 871.
============== ↑ பக்கம் 43
99 நற்செய்தி தவிர ஏனைய திருவிவிலிய வாசகங்களை அறிக்கையிட வாசகர் நியமிக்கப் படுகின்றார்; மேலும் அவர் பொது மன்றாட்டின் கருத்துக்களை அறிவிக்கலாம்; திருப்பார் முதல்வர் இல்லாதபோது, வாசகங்களுக்கு இடையே வரும் திருப்பாடலை அவர் வாசிக்கலாம்
நற்கருணைக் கொண்டாட்டத்தில் வாசகர் தமக்கு உரிய பணியை (காண். எண். 10. 198) அவரே நிறைவேற்ற வேண்டும்.
பிற பணிகள்
100. நியமனம் பெற்ற பீடத்துணைவர் இல்லை எனில் அவருக்குப் பதிலாகப் பீடத்தில் உதவி செய்யவும் அருள்பணியாளர், திருத்தொண்டர் ஆகியோருக்கு உதவி செய்யவும் பொது நிலைப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படலாம். அவர்கள் திருச்சிலுவை, மெழுகுதிரிகள், தூபம், அப்பம், இரசம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு வருவர். நற்கருணை வழங்குவதற்கும் தனியுரிமைத் திருப்பணியாளராய் அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படலாம், 85
101, நியமனம் பெற்ற வாசகர் இல்லை எனில், வேறு பொது நிலையினர் திருவிவிலியத்திலிருந்து வாசகங்களை வாசிக்கத் தற்காலிகமாக நியமிக்கப்படு கின்றனர். அவர்கள் இப்பணியை நிறைவேற்ற உண்மையிலேயே தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும், அதற்காகக் கவனத்துடன் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் திருவிவிலியத்திலிருந்து வாசிக்கப்பட்ட வாசகங்களுக்கு நம்பிக்கையாளர் செவிமடுத்து அதன்மீது இதமானதும் உயிருள்ளது மான பற்றுதலை உள்ளத்தில் கொண்டிருப்பார்களாக.
102. வாசகங்களுக்கு இடையே திருப்பாடலையோ ஏனைய விவிலியப் பாடலையோ பாடு வது திருப்பாடல் முதல்வரின் பணி ஆகும். இப்பணியைச் சரியாக நிறைவேற்றத் பெற்றிருத்தல் வேண்டும். திருப்பாடல் பாடும் கலையில் தேர்ச்சியும் தெளிவாக உச்சரித்துப் பேசுவதில் ஆற்றலும் அவர்
103. நம்பிக்கையாளர் நடுவில் சிறப்புப் பாடகர்களும் பாடகர் குழுவும் திருவழிபாட்டில் தமக்கே உரிய பணியினை நிறைவேற்றுவார்கள். பல்வகைப் பாடல்களின் தன்மைகளை மனதில் கொண்டு தமக்கே உரிய பகுதிகளைப் பாடுவதில் கவனம் செலுத்துவது அவர்களது கடமை. அவை முறையாகக் கையாளப்படுவதன் வழியாக நம்பிக்கையாளரின் செயல்முறைப் பங்கேற்பைப் பாடுதலில் ஊக்கப்படுத்த வேண்டும். ” பாடகர் குழுவுக்குக் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் ஏனைய இசைக் கலைஞர்களுக்கும் முக்கியமாக ஆர்மோனியக் கருவியை வாசிப்போருக்கும் பொருந்தும்.
104. மக்கள் பாடு வதை நெறிப்படுத்தி உதவ இசை இயக்குநரோ பாடகர் குழுத் தலைவரோ வழிகாட்டியாக இருப்பார். குறிப்பாக பாடகர் குழு இல்லை எனில், இசை இயக்குநரே மக்கள் பாடிப் பங்கேற்கும்படி உதவுவார். 8
105. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் திருவழிபாட்டுப் பணியில் ஈடுபடுவர்:
அ) கோவில் திருப்பொருள் அறைப் பொறுப்பாளர்
திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையான திருவழிபாட்டு நூல்கள், திருவுடைகள், பிறவற்றையும் நன்முறையில் எடுத்து வைப்பார்.
ஆ) விளக்கவுரையாளர்
இவர் தேவைக்கு ஏற்ப நம்பிக்கையாளருக்கு விளக்கவுரைகள், அறிவுரைகள் சுருக்கமாக வழங்குவார். இதனால் திருப்பலிக் கொண்டாட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அதை அவர்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுவார். விளக்கவுரையாளரின் குறிப்புகள் நன்றாகவும் சுருக்கமாகவும் தயாரிக்கப்பட வேண்டும். விளக்கவுரையாளர் தம் பணியை நிறைவேற்றும்போது மக்கள்முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் அவர் வாசக மேடையைப் பயன்படுத்தக் கூடாது.
85 காண். அருளடையாளங்களின் ஒழுங்குமுறைத் திருப்பேராயம், Immensae caritatis, 29.01.197′ எண் 1: A.A.S. 65 (1973) பக். 265-266; திச 230 $ 3.
86 திருவழிபாடு, 24. 87 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musicam sacrum, 05.03.1967, எண் 19: A.A.S. 59 (1967) பக். 306. 88 காண். மேற்படி, அதே, எண் 21: A.A.S. 59 (1967) பக். 306-307.
============== ↑ பக்கம் 44
இ) கோவிலில் காணிக்கை எடுப்பவர்
ஈ) ஒரு சில பகுதிகளில், கோவிலின் வாயிலருகில் நின்று இறைமக்களை வரவேற்று, அவர்களை வசதியான இருக்கையில் அமர்த்தவும் பவனிகளை ஒழுங்குபடுத்தவும் சிலர் பணியாற்றுவர். 106. திருவழிபாட்டு நிகழ்வுகளைத் தகுந்தவாறு ஏற்பாடு செய்யவும் அவற்றைத் திருப்பணியாளரும் பொது நிலையினரும் சிறப்பாக, முறையாக, இறைப்பற்றுடன் நிறைவேற்றுமாறு கவனிக்கவும் தகுதி படைத்த ஒருவரோ வழிபாட்டு நெறியாளரோ நியமிக்கப்படுவது பொருத்தம் ஆகும். குறிப்பாக மறைமாவட்டத் தலைமைக் கோவில்களிலும் பெருங்கோவில்களிலும் இது மிக அவசியம்.
107. அருள்பணியாளரையோ திருத்தொண்டரையோ சாராத திருவழிபாட்டுப் பணிகளைப் (எண். 100 – 106) பங்குப் பணியாளர் அல்லது அதிபரால் தெரிவு செய்யப்படும் தகுதி வாய்ந்த பொது நிலையினரிடம் திருவழிபாட்டு ஆசி வழியாகவோ தற்காலிக நியமனத்தாலோ ஒப்படைக்கலாம். பீடத்தில் பணி புரியும் அருள்பணி யாளருக்கு உதவி செய்பவருக்கான ஒழுங்கு முறைகள் இன்னவை என்று ஆயர் தம் மறைமாவட்டத்துக்கு என ஏற்படுத்தியிருக்கும் வரைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
IV. பணிகளைப் பிரித்துக் கொடுத்தலும் கொண்டாட்டத்துக்கான தயாரிப்பும்
108. ஆயர் முன்னிலை வகிக்கும் திருப்பலியில் அவருக்கு உரிய பகுதிகளைத் தவிர திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரே திருப்பலியின் எல்லாப் பகுதிகளுக்கும் எப்பொழுதும் தலைமை தாங்குவார் (காண். மேலே எண் 92).
109. ஒரே திருப்பணியை நிறைவேற்றக் கூடியவர்கள் பலர் இருப்பின், பணியின் அல்லது கடமையின் பகுதிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு நிறைவேற்றுவதில் எவ்விதத் தடையும் இல்லை. எ.கா. ஒரு திருத்தொண்டர் பாடல் பகுதிகளைப் பாடவும் மற்றொருவர் பீடத்தில் உதவி செய்யவும் நியமிக்கப்படலாம். பல வாசகங்கள் இருப்பின் அவற்றைப் பல வாசகர்களுக்குப் பிரித்துக் கொடுக்கலாம். மற்ற பணிகளுக்கும் இது பொருந்தும். இருப்பினும் கொண்டாட்டத்தின் ஒரே பகுதியைப் பலர் தங்களுக்குள் பிரித்துக் கொள்வது முறை அன்று. எ.கா. ஆண்டவருடைய பாடுகளின் வாசகத்தைத் தவிர, ஒரே வாசகத்தை இரண்டு வாசகர்கள் ஒருவர் பின் ஒருவராக வாசிப்பது.
110. மக்களோடு நிறைவேற்றப்படும் திருப்பலியில் ஓர் அருள்பணியாளர் மட்டுமே இருப்பின், அவரே பல்வேறு பணிகளையும் நிறைவேற்றுவார்.
111. திருப்பலி நூல் மற்றும் திருவழிபாட்டு நூல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு திருவழிபாட்டுக் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டிருக்கும் அனைவரும் பயன்தரும் வகையில் தயாரிக்கும்படி சடங்குகள், அருள்பணி, இசைக் கூறுகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து ஆர்வமுடன் செயல்பட வேண்டும். கோவில் அதிபரின் மேற்பார்வையிலும் நம்பிக்கையாளரைச் சார்ந்தவற்றிலும் இறைமக்களைக் கலந்து ஆலோசித்த பின்னும் இத்தயாரிப்பு நடைபெற வேண்டும். இருப்பினும் தமது பொறுப்பில் இருப்பவற்றை ஒழுங்குபட அமைத்துக்கொள்ளும் உரிமை, கொண்டாட்டத்துக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளருக்கு எப்போதும் உண்டு.”
89 காண். Pont. Cons. De Legum Textibus Interpretandis, Ca. 2308 2: A.A.S. 86 (1994) எண் 541.
90 காண். திருவழிபாடு, 22.
============== ↑ பக்கம் 45

இயல் 4
திருப்பலிக் கொண்டாட்டத்தின் பல்வேறு வகைகள்
திருப்பலிக் கொண்டாட்டத்தின் பல்வேறு வகைகள்
112. அருள்பணியாளர் குழாமும் திருத்தொண்டர்களும் பொது நிலையம் திருப்பணியாளர்களும் சூழ்ந்து நிற்க, ஆயர் தலைமை வகிக்கும் திருப்பலிக்கு அதன் சிறப்பு முன்னிட்டுத் தலத் திரு அவையில் உறுதியாக முதலிடம் வழங்கப்பட வேண்டும். 1 இது. இறைவனின் புனித மக்கள் நிறைவாகவும் செயல்முறையிலும் பங்கேற்கின்றார்கள். ஏனெனில் இதில்தான் திரு அவை தலைசிறந்த வகையில் வெளிப்படுத்தப்படுகின்றது.
ஆயர் நிகழ்த்தும் திருப்பலியில் அல்லது, அவர் நற்கருணைக் கொண்டாட்டம் இன்றி தலைமை வகிக்கும்போது, ‘ஆயர்களின் திருச்சடங்கு நூலில் காணப்படும் ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். 92
113. மக்கள் குழுமத்தோடு, சிறப்பாகப் பங்குக் குழுமத்தோடு நிகழ்த்தப்படும் திருப்பலிக்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஏனெனில் அக்குழுமம் ஒரு குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் குறிப்பாக ஞாயிறு பொதுக் கொண்டாட்டத்தில் உலகளாவிய திரு அவையைச் சிறப்பாக முன்னிலைப்படுத்துகின்றது. 93
114 சில குழுமங்களில் நிகழ்த்தப்படும் திருப்பலிகளில், துறவுக் குழுமத் திருப்பலி தனி இடம் வகிக்கின்றது; ஏனெனில் அது அன்றாட திருப்புகழ்மாலையின் ஒரு பகுதியாகவோ குழுமத் திருப்பலி’யாகவோ இருக்கின்றது. இத்திருப்பலிகளின் கொண்டாட்டத்துக்கெனத் தனிவகை வழிபாட்டு முறை இல்லையெனினும் குழுமத் துறவியர் அல்லது திருப்புகழ்மாலைப் பாடகர் குழுமத்தினர் யாவரும் முழுமையாகப் பங்கேற்கும் பாடலுடன் கூடிய திருப்பலியாக அமைவது மிகவும் பொருத்தம் ஆகும். எனவே தங்கள் பணியை ஆற்ற ஒவ்வொருவரும் தம் திருநிலைக்கும் அல்லது திருப்பணிக்கும் ஏற்ப இத்திருப்பலிகளில் செயல்பட வேண்டும். இவ்வாறு, நம்பிக்கையாளரின் அருள்பணி நலன் கருதித் தனித்தனியாகத் திருப்பலி நிறைவேற்றக் கடமை இல்லாத அருள்பணியாளர்கள் எல்லாரும் கூடுமானவரையில் அத்திருப்பலிகளில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவது விரும்பத்தக்கது. மேலும் ஒரு குழுமத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளரின் அருள்பணி நலன் கருதி, தனித்தனியாகத் திருப்பலி நிறைவேற்றக் கடமைப்பட்டவர்களாய் இருந்தாலும் அதே நாளில் துறவுக் குழுமத் திருப்பலியிலோ குழுமத் திருப்பலியிலோ சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம்.” திருப்பலிக் கொண்டாட்டத்தில் உடனிருக்கும் அருள்பணியாளர்கள், தகுந்த காரணம் இருந்தாலன்றித் தங்களது திருநிலைக்கு ஏற்பப் பணி ஆற்றுவதும் திருவுடை அணிந்து கூட்டுத்திருப்பலியில் பங்கேற்பதும் விரும்பத்தக்கது. இல்லை எனில் பாடகர் குழுவிற்கான சிறப்பான உடை அல்லது துறவு உடைமீது குறுகிய வெண்ணாடை அணிந்து பங்கேற்பர்.
I மக்களோடு திருப்பலி
15 நம்பிக்கையாளர் பங்கேற்போடு கொண்டாடப்படும் திருப்பலி ‘மக்களோடு திருப்பலி எனப்படும். மேலும் கூடுமானவரை இது, சிறப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் இசையோடும் போதுமான பணியாளர்களோடும் கொண்டாடப்படுவது பொருத்தம் ஆகும். எனினும் இது பாடலின்றியும் ஒரே ஒரு பணியாளருடனும் நடைபெறலாம்.
91 காண். திருவழிபாடு, 41. 92 காண். ஆயர்களின் திருச்சடங்கு, 1984, எண். 119-186.
93 காண். திருவழிபாடு, 42; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண” A.A.S. 59 (1967) பக். 555; திருச்சபை, 28; திருப்ப ணியாளர்கள், 5.
94 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 47: A.A.S. 59 (1967) பசு “
95 காண். மேற்படி, எண் 26: A.A.S. 59 (1967) பக். 555; திருச்சடங்குத் திருப்பேராயம், Music ” 05.03.1967, எண். 16, 27: A.A.S. 59 (1967) பக். 305, 308.
==============↑ பக்கம் 46
116. திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது திருத்தொண்டர் உடனிருந்தால், அவர் தமக்கே உரிய பணியைச் செய்ய வேண்டும். பொதுவாக, திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்குப் பீடத்துணைவர், வாசகர், பாடகர் ஆகியோர் உதவுவது விரும்பத்தக்கது. உண்மையாக, கீழே தரப்படுகின்ற வழிபாட்டுமுறை இன்னும் பலர் பணி புரியவும் வழிசெய்கின்றது.
தயாரிக்கப்பட வேண்டியவை
117. பீடம் ஒரு வெள்ளைத் துகிலாலாவது மூடப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு அதன்மீது அல்லது அதன் அருகில் எரியும் திரிகளுடன் மெழுகுதிரித் தண்டுகள் வைக்கப்பட வேண்டும். அவை சாதாரணக் கொண்டாட்டத்தில் இரண்டாகவோ, முக்கியமாக ஞாயிறு திருப்பலியின்போது அல்லது கடன் திருநாளின்போது நான்கு அல்லது ஆறாகவோ இருக்கும். மறைமாவட்ட ஆயர் திருப்பலி நிறைவேற்றும்போது ஏழு எரியும் திரிகள் பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும். அது போல, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் திரு உருவத்தோடு கூடிய சிலுவை பீடத்தின்மீதோ அதன் அருகிலோ இருக்க வேண்டும். மெழுகுதிரித் தண்டுகளும் கிறிஸ்துவின் திரு உருவத்தோடு கூடிய அணிசெய்யப்பட்ட சிலுவையும் வருகைப் பவனியில் கொண்டு வரப்படலாம். நற்செய்தி வாசக நூல் அல்லது வாசக நூல் வருகைப் பவனியில் கொண்டுவரப்படவில்லை எனில், அதைப் பீடத்தின் மீது வைத்துக்கொள்ளலாம்.
118. மேலும் தயாரிக்கப்பட வேண்டியவை:
அ) அருள்பணியாளரின் இருக்கையின் அருகில்: திருப்பலி நூல், தேவைக்கு ஏற்பப் பாடல் நூல்;
ஆ) வாசக மேடையில்: வாசக நூல்;
இ) திரு மேசைமீது : திருக்கிண்ணம், திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், தேவைக்கு ஏற்பத் திருக்கிண்ண அட்டை, தேவைப்பட்டால், அப்பத் தட்டும் நற்கருணைக் கலங்களும்; தலைமை வகிக்கும் அருள்பணியாளரும் திருத்தொண்டர், திருப்பணியாளர்கள், மக்கள் ஆகியோரும் நற்கருணை உட்கொள்ளத் தேவையான அப்பம், இரசமும் தண்ணீரும் உள்ள குப்பிகள் (இவை நம்பிக்கையாளரால் காணிக்கைப் பவனியின்போது கொண்டு வரப்படாதபோது); புனிதப்படுத்தப்பட வேண்டிய தண்ணீர் அடங்கிய கலம்; நம்பிக்கையாளர் நற்கருணை உட்கொள்ளும்போது பயன்படுத்தப்படும் நற்கருணைத் தட்டும், கை கழுவுவதற்குத் தேவையானவையும்.
கூடுமாயின் திருக்கிண்ணத்தை அந்தந்த நாளுக்கு உரிய நிறத் துகிலாலோ வெண் துகிலாலோ மூடிவைத்தல் சிறப்புக்கு உரியது ஆகும்.
119. திருப்பொருள் அறையில் திருப்பலிக் கொண்டாட்டத்தின் பல வகைக்கு ஏற்ப, அருள்பணியாளருக்கும் திருத்தொண்டருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் தேவையான (காண். எண். 337-341) திருவுடைகள் தயாரிக்கப்படுகின்றன.
அ. அருள்பணியாளருக்கு : நீள் வெண்ணாடை, தோள்துகில், திருப்பலி உடை.
ஆ. திருத்தொண்டருக்கு: நீள் வெண்ணாடை, தோள்து கில், இவற்றோடு திருத்தொண்டர் திருவுடை ; தேவையின் பொருட்டும் ஆடம்பரம் குறைந்த கொண்டாட்டத்தின்போதும் திருத்தொண்டரின் திருவுடையை விட்டுவிடலாம்.
இ. மற்ற பணியாளர்களுக்கு: நீள் வெண்ணாடைகள் அல்லது முறையான அனுமதி பெற்ற வேறு உடைகள்.96
நீள் வெண்ணாடை அணியும் அனைவரும் இடைக்கச்சையும் கழுத்துத் துணியும் பயன் படுத்துவர். நீள் வெண்ணாடை வடிவமைப்பில் ஆடை இருப்பின், அவை தேவைப்படா.
96 காண். Ecclesiae de mysterio, 15.08.1997, art, 6: A.A.S. 89 (1997) பக். 869.
==============↑ பக்கம் 47
வருகைப் பவனி நடைபெற்றால், பின்வருபவையும் தயாராக இருக்க வேண்டும்: நற்செய் வாசக நூல்; ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருநாள்களிலும் தூபம் பயன்படுத்தினால் கா : கலமும் சாம்பிராணிக் கலமும்; சிலுவை; எரியும் மெழுகுதிரிகளுடன் மெழுகுதிரித் தண்டுகள்
அ) திருத்தொண்டர் இல்லாத திருப்பலி
தொடக்கச் சடங்குகள்
120. மக்கள் கூடிவந்தபின் அருள்பணியாளரும் பணியாளர்களும் திருவுடைகள் அணிந்து பின்வரும் வரிசைப்படி பீடத்துக்குப் பவனியாகச் செல்வர்:
அ) தூபத்தைப் பயன்படுத்தினால், புகையும் தூபக் கலம் ஏந்திய தூபப் பணியாளர்,
ஆ) எரியும் திரிகளை ஏந்திய பணியாளர்கள், இவர்கள் நடுவில் பீடத்துணைவர் அல்லது திருச்சிலுவை ஏந்திய ஒரு பணியாளர்;
இ) பீடத்துணைவரும் பிற பணியாளர்களும்;
ஈ) வாசக நூல் (Lectionary) அல்லாத, நற்செய்தி வாசக நூலைச் (Book of the Gospels) சிறிது உயர்த்திப் பிடித்துக்கொண்டு வரும் வாசகர்;
உ) திருப்பலியைக் கொண்டாட இருக்கும் அருள்பணியாளர்.
தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் பவனி தொடங்கும் முன் தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு, அமைதியாக அதன் மீது சிலுவை அடையாளம் வரைந்து ஆசி வழங்குவார்.
121. பவனி பீடத்தை நோக்கிச் செல்லும்போது வருகைப் பாடல் பாடப்படும் (காண். எண். 47-48).
122. அருள்பணியாளரும் பணியாளர்களும் பீடத்தை அணுகியவுடன் தாழ்ந்து பணிந்து வணங்குவர்.
பாடுபட்ட கிறிஸ்துவின் திரு உருவத்தோடு கூடிய அணிசெய்யப்பட்ட சிலுவையைப் பவனியில் கொண்டு வந்தால், அதைப் பீடத்தின் அருகில் வைக்கலாம். அது பீடச் சிலுவையாக இருக்கும். அவ்வாறெனில் அதுவே பயன்படுத்தப்பட வேண்டிய ஒரே சிலுவை ஆகும். இன்றேல் அதை வேறு ஒரு தகுதியான இடத்தில் வைத்து விடலாம். மெழுகுதிரித் தண்டுகள் பீடத்திலோ அதன் அருகிலோ வைக்கப்படும். நற்செய்தி வாசக் நூலைப் பீடத்தின் மீது வைத்தல் சிறப்புக்கு உரிய செயல் ஆகும். 123. அருள்பணியாளர் பீடத்துக்கு ஏறிச்சென்று அதற்கு முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்: பின் தேவைக்கு ஏற்ப, பீடத்தைச் சுற்றிவந்து சிலுவைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டுவார்:
124. இவற்றுக்குப்பின் அருள்பணியாளர் தம் இருக்கைக்குச் செல்வார். வருகைப் பாட முடிந்ததும் நின்றுகொண்டிருக்கும் அருள்பணியாளர், நம்பிக்கையாளர் ஆகிய அனைவரு” தம்மீது சிலுவை அடையாளம் வரைவர்; அப்போது “தந்தை, மகன், தூய ஆவியா’ பெயராலே” என அருள்பணியாளர் சொல்ல, மக்கள் “ஆமென்” எனப் பதிலளிப்பார்
பின்பு, அருள்பணியாளர் மக்களை நோக்கி, கைகளை விரித்து, தரப்பட்டு வாய்பாடுகளுள் ஒன்றைச் சொல்லி அவர்களை வாழ்த்துவார். அந்த ந திருப்பலியைப் பற்றி அருள்பணியாளரோ மற்றொரு பணியாளரோ மிகச் சுரு” நம்பிக்கையாளருக்கு முன்னுரை கூறலாம்.
125. பின்னர் பாவத்துயர்ச் செயல் தொடரும். அதன்பின் சடங்குமுறைக் குறிப்புகளுக்கு ஏற்ப ஆண்டவரே, இரக்கமாயிரும்” பாடப்படும் அல்வா சொல்லப்படும் (காண் எண் 52.)
==============↑ பக்கம் 48
126. நிர்ணயிக்கப்பட்டுள்ள கொண்டாட்டங்களில் “உன்னதங்களிலே” பாடப்படும் அல்லது சொல்லப்படும் (காண். எண் 53).
127 தென்பின் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து “மன்றாடுவோமாக எனக் கூறி, மக்களை மன்றாட அழைப்பார். அருள்பணியாளருடன் ஒன்றித்து அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவர். பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத் திருக்குழும மன்றாட்டைச் சொல்வார்; அதன் முடிவில் மக்கள் “ஆமென்” என ஆர்ப்பரிப்பார்கள்.
வார்த்தை வழிபாடு
128. திருக்குழும மன்றாட்டு முடிந்ததும் எல்லாரும் அமர்வர். அருள்பணியாளர் வார்த்தை வழிபாட்டை நம்பிக்கையாளருக்கு மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம். வாசகர் வாசக மேடைக்குச் சென்று அங்கே திருப்பலி தொடங்கும் முன் வைக்கப்பட்டிருக்கும் வாசக நூலிலிருந்து முதல் வாசகத்தை வாசிப்பார். மக்கள் யாவரும் கவனமுடன் அதைக் கேட்பார்கள். முடிவில் வாசகர் “ஆண்டவரின் அருள் வாக்கு” என ஆர்ப்பரிப்பார். எல்லாரும் “இறைவனுக்கு நன்றி” எனப் பதில் கூறுவர்.
பின்னர் தாங்கள் கேட்டவற்றைத் தியானிக்கும் பொருட்டு, தேவைக்கு ஏற்ப மக்கள் சிறிது நேரம் அமைதி காப்பர். 129. பின்னர் திருப்பாடல் முதல்வர் அல்லது வாசகரே திருப்பாடலின் வசனங்களை எடுத்துரைப்பார்; மக்கள் வழக்கம் போல பதில் அளிப்பர்.
130. நற்செய்திக்குமுன் இரண்டாம் வாசகம் இருப்பின் வாசகர் வாசக மேடையிலிருந்து அதனை வாசிப்பார். எல்லாரும் கேட்டு முடிவில் மேலே குறிப்பிட்டது போல (காண். எண் 128) ஆர்ப்பரிப்புக்குப் பதில் கூறுவர். பின்னர் வசதிக்கு ஏற்ப, சிறிது நேரம் அமைதி காக்கலாம்.
131. அதன் பின்னர், எல்லாரும் எழுந்து நிற்க, “அல்லேலூயா’ அல்லது திருவழிபாட்டுக் காலத்துக்கு ஏற்ப வேறொரு பாடல் பாடப்படும் (காண். எண். 62-64).
132. “அல்லேலூயா” அல்லது வேறு பாடல் பாடப்பெறும்போது, தூபம் பயன்படுத்தினால் அருள் பணியாளர் தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு ஆசி வழங்குவார். பின்பு, தம் கைகளைக் குவித்துப் பீடத்துக்கு முன்பாகத் தாழ்ந்து பணிந்து, “எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியை….” என்னும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார்.
133. நற்செய்தி வாசக நூல் பீடத்தின் மீது இருந்தால், அருள்பணியாளர் அதை எடுத்து, சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு வாசக மேடைக்குச் செல்வார். பொது நிலைப் பணியாளர்கள் தூபக் கலத்தையும் எரியும் மெழுகுதிரிகளையும் ஏந்தி அவருக்கு முன் செல்வர். கிறிஸ்துவின் நற்செய்திக்குக் காட்டும் சிறப்பு மரியாதையின் அடையாளமாக அங்கு இருப்போர் வாசக மேடை நோக்கித் திரும்புவர்.
134. வாசக மேடையில் அருள்பணியாளர் வாசக நூலைத் திறந்து, தம் கைகளைக் குவித்து “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” எனச் சொல்ல, மக்கள் “உம் ஆன்மாவோடும் இருப்பாராக” எனப் பதில் கூறுவர்; பின்னர் அவர் பெருவிரலால் நூலின்மீதும் தம் நெற்றி, வாய், நெஞ்சிலும் சிலுவை வரைந்து கொண்டே “… எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்” எனச் சொல்வார். மக்கள் ஒவ்வொருவரும் அவ்வாறே செய்துகொண்டு “ஆண்டவரே, மாட்சி உமக்கே” எனக் கூறி ஆர்ப்பரிப்பர். தூபம் பயன்படுத்தினால் (காண். எண். 276-277), அருள்பணியாளர் நற்செய்தி வாசக நூலுக்குத் தூபம் காட்டுவார். பின்னர் அவர் நற்செய்தியைப் பறைசாற்றி முடிவில் “ஆண்டவரின் அருள்வாக்கு” எனச் சொல்ல, எல்லாரும் “கிறிஸ்துவே, உமக்குப் புகழ்” எனப் பதில் கூறுவர். அருள்பணியாளர் “இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக” என அமைந்த குரலில் மன்றாடி, நூலை முத்தமிடுவார்.==============↑ பக்கம் 49
135. வாசகர் எவரும் இல்லை எனில், எல்லா வாசகங்களையும் பதிலுரைத் திருப்பாடலை…… அருள்பணியாளரே வாசக மேடையில் நின்று கொண்டு வாசிப்பார். தூபம் பயன்படுத்தின. வாசக மேடையில் நின்றுகொண்டே தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு, ஆசி வழங்கித் தாம் .. பணிந்து “எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியை …” எனச் சொல்வார்.
136. அருள்பணியாளர் தம் இருக்கையில் அல்லது வாசக மேடையில் அல்லது தேவைக்கு ஏற்ப, தகுதியான வேறோர் இடத்தில் நின்றுகொண்டு மறையுரை ஆற்றுவார். மறையுரைக்குப்பின் சிறிது நேரம் அமைதி காக்கலாம்.
137. எல்லாரும் எழுந்து நிற்க, மக்களோடு சேர்ந்து அருள்பணியாளர் நம்பிக்கை அறிக்கையைப் பாடுவார் அல்லது சொல்வார் (காண். எண் 68). “தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்” எனும் வார்த்தைகளைப் பாடும்போது / சொல்லும்போது அனைவரும் தாழ்ந்து பணிந்து வணங்குவர். ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு, ஆண்டவருடைய பிறப்பு ஆகிய பெருவிழாக்களில் அனைவரும் முழங்காலிடுவர்.
138. நம்பிக்கை அறிக்கைக்குப்பின், அருள்பணியாளர் தமது இருக்கையில் நின்றுகொண்டு தம் கைகளைக் குவித்து, சிறிய அறிவுரை கூறி, பொது மன்றாட்டுகளில் பங்கேற்கும்படி நம்பிக்கையாளருக்கு அழைப்பு விடுப்பார். பின்னர் பாடகரோ வாசகரோ மற்றொருவரோ வாசக மேடையிலிருந்து அல்லது வசதியானதோர் இடத்திலிருந்து மக்களைப் பார்த்துக் கருத்துகளை எடுத்துரைக்க, மக்கள் பணிவுடன் பதில் கூறுவர். இறுதியாக அருள்பணியாளர் தம் கைகளை விரித்து இறைவேண்டலுடன் மன்றாட்டை நிறைவு செய்வார்.
நற்கருணை வழிபாடு
139. பொது மன்றாட்டு முடிந்ததும் எல்லாரும் அமர்வர். பின்பு காணிக்கைப் பாடல் தொடங்கும் (காண். எண் 74).
பீடத்துணைவர் அல்லது வேறொரு பொது நிலைப் பணியாளர் திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருக்கிண்ணம், திருக்கிண்ண அட்டை, திருப்பலி நூல் ஆகியவற்றைக் கொண்டு வந்து பீடத்தின் மீது வைப்பார். 140. திருப்பலிக் கொண்டாட்டத்துக்கான அப்பத்தையும் இரசத்தையும் அல்லது கோவில் தேவைகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் பயன்படும் நன்கொடைகளையும் காணிக்கையாகக் கொடுத்து, நம்பிக்கையாளரின் பங்கேற்பை வெளிக்காட்டுவது விரும்பத்தக்கது.
அருள்பணியாளர் நம்பிக்கையாளரின் காணிக்கைப் பொருள்களை ஏற்றுக்கொள்வார். அவருக்குப் பீடத்துணைவரோ வேறொரு பணியாளரோ உதவி செய்வார். திருப்பலிக்கான அப்பமும் இரசமும் பலி நிறைவேற்றும் அருள்பணியாளரிடம் எடுத்துச் செல்லப்படும். அவர் அவற்றைப் பீடத்தின் மீது வைப்பார். பிற காணிக்கைப் பொருள்கள் வேறொரு தகுந்த இடத்தில் வைக்கப்படும் (காண். எண் 73).
141. பீடத்தில் அருள்பணியாளர் அப்பம் உள்ள தட்டைப் பெற்று அதை இரு கைகளிலும், பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, “ஆண்டவரே, அனைத்தும் இறைவா …” எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார். பின்பு, அப்பம் உ” தட்டைத் திருமேனித் துகில்மீது வைப்பார்.
==============↑ பக்கம் 50
142 அடுத்து, அருள்பணியாளர் பீடத்தின் ஒரு பக்கம் நின்று, பணியாளர் வழங்கும் இரசம், தண்ணீர் உள்ள குப்பிகளைப் பெற்று, இருக்கிண்ணத்தில் இரசத்தையும் சிறிதளவு தண்ணீரையும் ஊற்றில் இருவது இது மனித இயல்பில் எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார். பீடசுலின் நடுப்பகுதிக்குத் திரும்பி வந்து, திருக்கிண்ணத்தை இரு லைனிலும் பிடித்து, பிடத்துக்கு மேல் சற்று உயர்த்தி, ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார், பின், திருக்கிண்ணத்தைத் திருமேனித் இல்மீது வைத்து, தேவைக்கு ஏற்ப, அதைத் திருக்கிண்ண அட்டையால் மூடுவார்.
காணிக்கைப் பாடல் பாடப்படாமலோ இசைக்கருவி மீட்டப்படாமலோ இருப்பின், அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுக்கும்பொழுது அவற்றுக்கு உரிய ஆசி வாய்பாடுகளை அருள்பணியாளர் உரத்த குரலில் சொல்ல, மக்கள் “இறைவன் என்றென்றும் வாழக்கப்பெறுவாரா* என ஆர்ப்பரிப்பார்கள்.
13. பீடத்தின்மீது இருக்கிண்ணத்தை வைத்தபின்னர் அருள்பணியாளர் தாழ்ந்து பணிந்து, ஆண்டவரே, தாழ்மையான மனமும் என அமைந்த குரலில் மன்றாடுவார்.
144 பின்னர், தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் தூபக் கலத்தில் சிறிது சாம்பிராணி இட்டு, அமைதியாக ஆசி வழங்குவார். காணிக்கைப் பொருள்கள், சிலுவை, பீடம் ஆகியவற்றுக்குத் தூபம் காட்டுவார். பணியாளர் பீடத்தின் ஒரு பக்கமாக நின்று கொண்டு அருள்பணியாளருக்குத் தூபம் காட்டுவார்; பிறகு மக்களுக்கும் தூபம் காட்டுவார்.
145″ஆண்டவரே, தாழ்மையான மனமும் எனும் மன்றாட்டுக்குப்பின் அல்லது தூபம் காட்டி யபின் அருள்பணியாளர் பீடத்தின் ஒரு பக்கம் நிற்பார்; பணியாளர் தண்ணீர் அமைந்த குரலில் சொல்வார். வார்க்க, தம் கைகளைக் கழுவி ஆண்டவரே, எனது குற்றம் நீங்க… எனும் மன்றாட்டை
146. அருள்பணியாளர் பீடத்தின் நடுப்பகுதிக்குத் திரும்பி வந்து, மக்களை நோக்கி நின்று கொண்டு, தம் கைகளை விரித்து, பின் குவித்து, “சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான . எனச் சொல்லி மக்களை வேண்டுதல் செய்ய அழைப்பு விடுப்பார். இதற்கு மக்கள் எழுந்து நின்று ஆண்டவர் தமது திருப்பெயரின்’ எனும் பதில் மொழி சொல்வார்கள். பின்னர் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துக் காணிக்கைமீது மன்றாட்டைச்’ சொல்வார். இதன் இறுதியில் மக்கள் “ஆமென் என ஆர்ப்பரிப்பார்கள்.
147. அதன் பின்னர், அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டைத் தொடங்குவார். சடங்குமுறைக் குறிப்புகளின்படி (காண். எண் 365) உரோமைத் திருப்பலி நாலில் தரப்பட்டுள்ள அல்லது திருத்தூது ஆட்சிப் பீடம் அனுமதித்துள்ள நற்கருணை மன்றாட்டுகளுள் ஒன்றைத் தேர்வு செய்வார். அருள்பணியாளர் மட்டுமே தமது திருநிலைப்பாட்டின் ஆற்றலினால் நற்கருணை மன்றாட்டை அதன் இயல்பின் காரணமாக, சொல்ல வேண்டும் என்பதை அது வலிந்து கோருகின்றது. மக்கள் நம்பிக்கையோடும் அமைதியாகவும் அருள்பணியாளரோடு ஒன்றித்திருப்பார்கள். நற்கருணை மன்றாட்டின்போது தங்களுக்கு உரிய பகுதிகளில் பங்கேற்பதினாலும் தங்களை ஒன்றிணைத்துக் கொள்வார்கள். அதாவது தொடக்கவுரையில் வரும் பதில் உரையாடல், “தூயவர்’, அர்ச்சிப்புக்குப்பின் வரும் ஆர்ப்பரிப்பு, சிறப்புப் புகழுரையின் முடிவில் பெற்றுள்ள பிற ஆர்ப்பரிப்புகள். *ஆமென், மற்றும் ஆயர் பேரவையின் அனுமதியும் திரு ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலும் பெற்றுள்ள பிற ஆர்ப்பரிப்புகள்.
இசைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் நற்கருணை மன்றாட்டின் பகுதிகளை அருள்பணியாளர் பாடுவது சாலப் பொருத்தமானது.
==============↑ பக்கம் 51
148. அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டைத் தொடங்கும்போது, தம் கைகட. “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” எனப் பாட அல்லது சொல்ல, மக்கள்
பாா” எனப் பதிலுரைப்பார்கள். அருள்பணியாளர் தொட “இதயங்களை மேலே எழுப்புங்கள்” எனத் தம் கைகளை உயர்த்தியவாறு சொல்ல, “ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்” எனப் பதிலுரைப்பார்கள். அருள்பணியாளர் தம் கை, விரித்தவண்ணம் “நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம் எனச் சொல்ல, மக். அது தகுதியும் நீதியும் ஆனதே” என மறுமொழி கூறுவார்கள். பின்னர் அருள்பணியாளர் : கைகளை விரித்தவாறே தொடக்கவுரையைத் தொடர்வார். அவ்வுரையின் முடிவில் : கைகளைக் குவித்து, குழுமி உள்ளோரோடு ஒன்றுசேர்ந்து, தெளிவான குரலில் “தாய, எனப் பாடுவார் அல்லது சொல்வார் (காண். எண் 79b).
149. ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டிலும் குறித்துள்ள சடங்குமுறைக் குறிப்புகளின்படி, அருள்பணியாளர் நற்கருணை மன்றாட்டைத் தொடர்வார்.
திருப்பலி நிறைவேற்றுபவர் ஆயராக இருந்தால், நற்கருணை மன்றாட்டுகளில் “எங்கள் திருத்தந்தை (பெயர்)” எனும் சொற்களுக்குப்பின் “உம்முடைய தகுதியற்ற ஊழியன் எனக்காகவும்” எனச் சொல்வார். ஆயினும் ஆயர் தமது மறைமாவட்டத்துக்கு வெளியே திருப்பலி நிறைவேற்றினால், “எங்கள் திருத்தந்தை..” எனும் சொற்களுக்குப்பின் இந்த மறைமாவட்ட ஆயரான என் சகோதரர் … க்காகவும் தகுதியற்ற ஊழியனான எனக்காகவும்” எனச் சேர்த்துச் சொல்வார்.
மறைமாவட்ட ஆயர் அல்லது சட்டத்தின் அடிப்படையில் அவருக்குச் சமநிலையில் உள்ள மற்றவர்கள் கீழ்வரும் முறையில் குறிப்பிடப்பட வேண்டும்: எங்கள் திருத்தந்தை (பெயர்), எங்கள் ஆயர் (அல்லது பதிலாள், மேல்நிலையாளர், மேல்நர், துறவு மடத்துத் தலைவர்) பெயர்.
நற்கருணை மன்றாட்டில் இணையுதவி ஆயரையும் துணை ஆயரையும் குறிப்பிடலாம். அங்கிருக்கும் பிற ஆயர்களின் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. பலரின் பெயர்களைக் எனச் சொல்லவும். குறிப்பிட வேண்டின் பொதுப்பாடமாக எங்கள் ஆயரும் (பெயர்), அவருடைய துணை ஆயர்களும் எனச் சொல்லவும்.
இந்தப் பாடங்களின் அடிப்படையில் அந்தந்த நற்கருணை மன்றாட்டுக்கு ஏற்றவாறு இலக்கண விதிப்படி இவ்வாய்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
150 அர்ச்சிப்புக்குச் சற்றுமுன், தேவைக்கு ஏற்ப, நம்பிக்கையாளருக்கு ஒரு முன்னறிவிப்பாகப் பணியாளர் ஒருவர் மணி ஒலிக்கச் செய்வார். அவ்வாறே ஒவ்வோர் எழுந்தேற்றத்தின்போதும் இடத்தின் வழக்கத்துக்கு ஏற்ப மணி ஒலிக்கச் செய்வார். காட்டும்போது அவற்றிற்குப் பணியாளர் தூபம் காட்டுவார்.
தாபம் பயன்படுத்தினால், அர்ச்சிப்புக்குப்பின் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும்
151. அர்ச்சிப்புக்குப்பின் அருள்பணியாளர் “நம்பிக்கையின் மறைபொருள்” எனச் ஆர்ப்பரிப்பார்கள். சொன்னவுடன் கொடுக்கப்பட்டுள்ள வாய்பாடுகளில் ஒன்றைச் சொல்லி மக்கள் ஆர்ப்பரிப்பார்கள்.
நற்கருணை மன்றாட்டின் முடிவில் திரு அப்பம் உள்ள சட் கிண்ணத்தையும் எடுத்து இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு
முடிவில் திரு அப்பம் உள்ள தட்டையும் திருக் மட்டும் “இவர் வழியாக, இவரோடு, இவரில் ….” எனும் இறுதி இறைப்புகழும் இறுதியில் மக்கள் ” ஆமென்” என ஆர்ப்பரிப்பார்கள். பின்னர் அம்
இவரில் ….” எனும் இறுதி இறைப்புகழுரையைச் சொல்வார். இறுதியில் மக்கள் ஆமென் என ஆர்ப்பரிப்பார்கள். பின்னர் அருள் பணியாளர் திரு அப்பம் உள்ள தட்டையும் திருக்கிண்ணத்தையும் திருமேனித் துகில்மேல் வைப்பார்.
152. நற்கருணை மன்றாட்டின் இறுதியில், அருள்பணியாளர் தம் கை ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலுக்கு முன்னுரை வழங்குவார். பின்
இல் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து விரித்து மக்களோடு சேர்ந்து அதைச் சொல்வார்.
==============↑ பக்கம் 52
15.3. ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டல் முடிந்தபின், அருள் பற்றியாளர் மாட்டியே தம் கைகளை விரித்து, ஆண்டவரே, நீமை அமத்திலிருந்தும் எனும் தொடர் இறை 2வண்டலைச் சொல்வார். அதன் முடிவில் மக்கள், ”எனெனில் ஆட்சியர் 1101′ என ஆர்ப்பரிப்பார்கள்.
158 அதன்பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்து ஆடவரே யார் ” அமைதியை எனும் மன்றாட்டைத் தெளிவான குரலில் சொல்வார், அதன் இறுதியில் தம் கைகளை விரித்து, பின் குவித்து, “ஆண்டவருடைய அமைதி படங்களோடு என்றும் இருப்பதாக என மக்களை நோக்கிச் சொல்லி, அமைதி வாழ்த்தை வழங்குவார். மக்களும் “1” ஆன்மாவோடும் இருப்பதாக, எனப் பதில் கூறுவார்கள், பின் அருள்பணியாளர் தேவைக்கு ஏற்ப, ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம் என்பார்,
அருள்பணியாளர் அமைதியின் வாழ்த்தைப் பிற பணியாளர்களுக்குத் தெரிவிக்கலாம். ஆனால் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படா வண் ராம் அவர் திருப்பீட முற்றத்துக்குள்ளேயே இருக்க வேண்டும். தகுந்த காரணத்தை முன்னிட்டு, நம்பிக்கையாளர் சிலருக்கும் அமைதியின் வாழ்த்துக் கூற விரும்பினால் அவ்வாறே செய்யலாம். ஆயர் பேரவை நிர்ணயித்தபடி அனைவரும் ஒருவர் மற்றவருக்கு அமைதியையும் ஒன்றிணைப்பையும் அன்பையும் வெளிப்படுத்துவர். ஒருவர் மற்றவருக்கு ஆண்டவரின் அமைதியை வழங்கும்போது “ஆண்டவருடைய அமைதி மங்களோடு என்றும் இருப்பதாக எனச் சொல்லலாம். அதற்கு “ஆமென்” எனப் பதில் அளிக்கலாம்.
155, அடுத்து அருள்பணியாளர் திரு அப்பத்தை எடுத்து திரு அப்பத் தட்டின் மீது அதைப் பிட்டு, ஒரு சிறு துண்டைத் திருக்கிண்ணத்துள் இட்டு, “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் – எனச் சொல்லியவாறு அமைந்த குரலில் மன்றாடுவார். அப்பொழுது “உலகின் பாவங்களைப் போக்கும் என்பதைப் பாடகர் குழுவும் மக்களும் சேர்ந்து பாடுவார்கள் அல்லது சொல்வார்கள் (காண். எண் 83).
156. பிறகு அருள்பணியாளர் நற்கருணை உட்கொள்ளும்முன் தம் கைகளைக் குவித்து, “ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, எனும் மன்றாட்டையோ” ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் எனும் மன்றாட்டையோ அமைந்த குரலில் சொல்வார்.
157. இம்மன்றாட்டு முடிந்தபின் அருள்பணியாளர் முழங்காலிட்டு அதே திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்ட திரு அப்பத்தை எடுத்து, அதைத் திரு அப்பத் தட்டின் மீது அல்லது திருக் கிண்ணத்தின் மீது சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு மக்களை நோக்கி, “இதோ இறைவனின் செம்மறி ….” எனச் சொல்லி, பின் மக்களோடு சேர்ந்து “ஆண்டவரே, நீர் என மன்றாடுவார்.
158. பின்பு, பலிப்பீடப் பக்கமாய்த் திரும்பி நின்றுகொண்டு, “கிறிஸ்துவின் திரு உடல் …” என்பதை அமைந்த குரலில் சொல்லி, வணக்கத்துடன் கிறிஸ்துவின் திரு உடலை உட்கொள்வார். அடுத்து, திருக்கிண்ணத்தை எடுத்து “கிறிஸ்துவின் திரு இரத்தம் என்பதை அமைந்த குரலில் சொல்லி, வணக்கத்துடன் கிறிஸ்துவின் திரு இரத்தத்தைப் பருகுவார்.
159. அருள்பணியாளர் நற்கருணை உட்கொள்ளும்போது திருவிருந்துப்பாடல் தொடங்கப்பெறும் (காண். எண் 86).
160. பின்னர் அருள்பணியாளர் திரு அப்பத் தட்டை அல்லது நற்கருணைக் கலத்தை எடுத்துக்கொண்டு, நற்கருணை வாங்குவோரை நோக்கிச் செல்வார். அவர்கள் வழக்கப்படி பவனியாக வருவர்.
நம்பிக்கையாளர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை அல்லது திருக்கிண்ணத்தைத் தாங்களாகவே எடுத்து உட்கொள்ளுதல் கூடாது. அவற்றை ஒருவர் மற்றவருக்கு பரிமாறிக் கொள்ளுதலும் கூடாது. ஆயர் பேரவையின் விதிமுறைகளுக்கு ஏற்ப நம்பிக்கையாளர் முழங்காவிலிருந்தோ நின்றுகொண்டோ நற்கருணை உட்கொள்வார்கள். நின்றுகொண்டு நற்கருணை வாங்கினால் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி நற்கருணை வாங்கும்முன் தகுந்த வணக்கம் செய்ய வேண்டும்,
==============↑ பக்கம் 53
161. அப்பத்தின் வடிவத்தில் மட்டும் நற்கருணை வழங்கப்பட்டால் அருள்பணி… திரு அப்பத்தை சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் “கிறிஸ்துவ திரு உடல் எனச் சொல்லிக் காண்பிப்பார். நற்கருணை உட்கொள்வோர் “ஆமென்” — பதில் அளித்து, நற்கருணையை நாவிலோ, அனுமதிக்கப்பட்டிருந்தால், நற்கருணை உட்கொள்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப, கைகளிலோ பெற்றுக்கொள்ளலாம் நற்கருணையைப் பெறுவோர் திரு அப்பத்தைப் பெற்று அதனை முழுமையாக உடனே உட்கொள்வர்.
இரு வடிவங்களிலும் நற்கருணை வழங்கும்போது அதற்கு உரிய சடங்கு முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் (காண். எண். 284 – 287).
162. நற்கருணை வழங்குவதில் அருள் பணியாளருக்கு அங்கு இருக்கும் வேறு அருள் பணியாளர்களும் உதவலாம். அத்தகையோர் இல்லை எனில், நற்கருணை உட்கொள்வோர் மிகப் பெரும் எண்ணிக்கையில் இருந்தால், அருள்பணியாளர் சிறப்புரிமைத் திருப் பணியாளர்களை அதாவது நியமனம் பெற்ற பீடத்துணைவரையோ இச்சடங்கிற்கென தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளரையோ உதவிக்கு அழைக்கலாம்.97 தேவை ஏற்படும்பொழுது தகுதியுள்ள நம்பிக்கையாளரை இந்த ஒரு நிகழ்வுக்கு மட்டும் நியமிக்கலாம்.”
அருள்பணியாளர் நற்கருணை உட்கொள்ளும்முன் இத்திருப்பணியாளர்கள் பீடத்தை அணுகக் கூடாது. அத்தோடு அவர்கள் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்குவதற்காக வைத்திருக்கும் திருக்கலங்களை எப்பொழுதும் அருள்பணியாளரின் கைகளிலிருந்தே பெறுவர்.
163. நற்கருணையை வழங்கியபின், அர்ச்சிக்கப்பட்ட இரசம் எஞ்சி இருப்பின், அருள்பணியாளர் அதனை உடனே முற்றிலும் பீடத்திலேயே உட்கொள்வார். எஞ்சி இருக்கும் அர்ச்சிக்கப்பட்ட அப்பங்களைப் பீடத்திலேயே உட்கொள்வார் அல்லது நற்கருணை வைக்கப்படும் இடத்துக்குக் கொண்டு செல்வார்.
அருள்பணியாளர் பீடத்துக்குத் திரும்பிவந்து, அப்பத் துகள்கள் இருந்தால் அவற்றை ஒன்றுசேர்ப்பார்; பீடத்தின் ஒரு பக்கமாக நின்றுகொண்டு அல்லது திருமேசைக்குச் சென்று, திரு அப்பத் தட்டையோ நற்கருணைக் கலத்தையோ திருக்கிண்ணத்தின்மேல் தூய்மைப்படுத்துவார்; பின்னர் திருக்கிண்ணத்தையும் தூய்மைப்படுத்துவார். அப்பொழுது அவர் “ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட …” எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்வார். அப்பொழுது திருக்கிண்ணத் துகிலால் திருக்கிண்ணத்தைத் துடைப்பார். கலங்கள் பீடத்தின் மீது தூய்மைப்படுத்தப்பட்டால் அவற்றைப் பணியாளர் ஒருவர் திரு மேசைக்கு எடுத்துச் செல்வார். தவிர, தூய்மைப்படுத்தப்படவேண்டிய கலங்களை, முக்கியமாக அவை பலவாக இருப்பின், பீடத்தின் மீது அல்லது திரு மேசைமீது வசதிக்கு ஏற்றாற் போலத் துகிலால் மூடி, திருப்பலி முடிந்து மக்கள் சென்றவுடனே தூய்மைப்படுத்தும் பொருட்டு திருமேனித் துகில் மீது வைக்கலாம். 164 பின்பு, அருள்பணியாளர் தம் இருக்கைக்குத் திரும்பலாம். இப்பொழுது, சிறிது நேரம் திரு அமைதி காக்கப்படலாம் அல்லது திருப்பாடலையோ மற்றொரு புகழ்ச்சிப் பாடலையோ ஒரு பாடலையோ பாடலாம் (காண். எண் 88).
165. அடுத்து அருள்பணியாளர் தம் இருக்கை அருகில் அல்லது பலிப்பீடத்துக்கு அருகில் மக்கள் பக்கமாய்த் திரும்பி நின்றுகொண்டு, தம் கைகளைக் குவித்து ”மன்றாடுவோமாக எனக் கூறுவார்; பின்பு, தம் கைகளை விரித்து, திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்வார். திருவிருந்துக்குப்பின் அமைதி காக்கவில்லை எனில், அனைவரும் இப்போது, சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவர். இந்த மன்றாட்டின் முடிவில் மக்கள் ஆடும் என ஆர்ப்பரிப்பார்கள்.
97 காண். அருளடையாளங்கள், திருவழிபாட்டுக்கான திருப்பேராயம், Inaestimabile 40″. 03.04.1980, எண் 10: A.A.S. 72 (1980) பக். 336; Ecclesiae de mysterio, 15.08.1997, af” A.A.S. 89 (1997) பக். 871.
98 காண். பிற்சேர்க்கை, தூய நற்கருணை வழங்கப் பணியாளருக்கு உரிமை அளிக்கும் சடங்கு பக் ‘
==============↑ பக்கம் 54
நிறைவுச் சடங்குகள்
66. திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு முடிந்ததும் தேவைக்கு ஏற்ப, மக்களுக்குச் சுருக்கமான அறிவிப்புகள் வழங்கலாம்.
167. பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்து “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக எனச் சொல்லி மக்களை வாழ்த்துவார். அதற்கு மக்கள் “உம் ஆன்மாவோடும் இருப்பாராக எனப் பதிலுரைப்பார்கள். அருள்பணியாளர் மீண்டும் தம் கைகளைக் குவித்து, உடனே, தமது இடக் கையைத் தம் மார்பில் வைத்து வலக் கையை உயர்த்தி எல்லாம் வல்ல இறைவன் எனச் சொல்லி மக்கள்மேல் சிலுவை அடையாளம் இட்டு “தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக” எனத் தொடர்வார். எல்லாரும் “ஆமென் எனப் பதில் கூறுவர்.
ஒழுங்குமுறைக் குறிப்புகளுக்கு இணங்க, குறிப்பிட்ட நாள்களிலும் நிகழ்வுகளிலும் இந்த ஆசி மக்கள் மீது மன்றாட்டினாலோ சிறப்பு ஆசி வாய்பாடு ஒன்றினாலோ விரிவாகச் சொல்லப்படும்.
ஆயர் உரிய வாய்பாட்டோடு மக்கள் மீது மூன்று முறை சிலுவை அடையாளம் வரைந்து மக்களுக்கு ஆசி வழங்குவார்.”
168. ஆசி வழங்கியவுடன் அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, “சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று” எனச் சொல்ல, எல்லாரும் “இறைவனுக்கு நன்றி” எனப் பதில் கூறுவர். 169. இதன்பின், அருள்பணியாளர் வழக்கம் போலப் பீடத்தை முத்தமிட்டு அதற்கு வணக்கம் செலுத்துவார். அடுத்து பிற பொது நிலைப் பணியாளர்களுடன் இணைந்து தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டு அவர்களோடு திரும்பிச் செல்வார்.
170. திருப்பலியைத் தொடர்ந்து வேறு ஒரு திருவழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றால் நிறைவுச் சடங்குகள், அதாவது வாழ்த்துரை, ஆசி, பிரியாவிடை ஆகியவை விட்டுவிடப்படும்.
ஆ) திருத்தொண்டருடன் திருப்பலி
171. திருப்பலிக் கொண்டாட்டத்தில் திருத்தொண்டர் பங்கேற்றால் அவர் தமக்கு உரிய திருவுடைகளை அணிந்து தமது பணியை நிறைவேற்றுவார்:
அ) அருள்பணியாளருக்கு உதவி செய்வார்; அவர் அருகில் நடந்து செல்வார்;
ஆ) பீடத்தில் திருக்கிண்ணத்தையும் திருப்பலி நூலையும் பயன்படுத்த உதவி செய்வார்;
இ) நற்செய்தியைப் பறைசாற்றுவார். திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் பணித்தால், மறையுரை நிகழ்த்துவார் (காண். எண் 66);
ஈ) பொருத்தமான அறிவுரைகள் வழியாக நம்பிக்கையாளரை வழிநடத்துவார்.
பொது மன்றாட்டின் கருத்துக்களை எடுத்துரைப்பார்;
உ) நற்கருணை வழங்குவதில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்கு உதவி செய்வார். திருப்பலிக் கலங்களைத் தூய்மைப்படுத்தி அவற்றை ஒழுங்காக வைப்பார்.
ஊ) வேறு பணியாளர்கள் இல்லை எனில், தேவைக்கு ஏற்ப, அவர்களுடைய பணிகளையும் செய்வார்.
99 காண். ஆயர்களின் திருச்சடங்கு நூல், 1984, எண் 1118 – 1121
==============↑ பக்கம் 55
தொடக்கச் சடங்குகள்
172. பீடத்தை நோக்கிச் செல்லும்போது, திருத்தொண்டர் நற்செய்தி வாசக நாலை, உயர்த்திப் பிடித்துச் சென்றால் அருள்பணியாளருக்குமுன் செல்வார்; அவ், இல்லாதபோது அருள்பணியாளருக்கு அருகில் நடந்து செல்வார். 173. பீடத்தை நெருங்கியதும் அவர் நற்செய்தி வாசக நூலைக் கொண்டு வந்தால், வணக்கம் செலுத்தாமல் நேரே பீடத்துக்குச் செல்வார். பின்னர் நற்செய்தி வாசக நூலைப் பீடத்தின்மீது வைப் போற்றுதற்கு உரியது. அதன்பின் அவர் அருள்பணியாளரோடு சேர்ந்து பீடத்தை முத்தமிடுவார்.
அவர் நற்செய்தி வாசக நூலைக் கொண்டு வரவில்லை என்றால் அருள்பணியாளரோடு சேர்ந்து வழக்கத்துக்கு ஏற்ப பீடத்தைத் தாழ்ந்து பணிந்து வணங்குவார்; அதை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்.
தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் தூபக் கலத்தில் சாம்பிராணி இடவும் சிலுவைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டவும் அவருக்கு உதவுவார். 174 பீடத்துக்குத் தூபம் காட்டியபின், அருள்பணியாளருடன் இருக்கைக்குச் செல்வார். அங்கு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து, தேவைப்படும்போது உதவுவார்.
வார்த்தை வழிபாடு
175. தூபத்தைப் பயன்படுத்தினால், “அல்லேலூயா’ அல்லது வேறு பாடல் பாடும்போது, தூபக் கலத்தில் சாம்பிராணி இடுவதற்குத் திருத்தொண்டர் அருள்பணியாளருக்கு உதவுவார். பின் அருள்பணியாளருக்குமுன் பணிந்து வணங்கி “தந்தையே, ஆசி வழங்கும்” என்று தாழ்ந்த குரலில் கூறி ஆசி கேட்பார்; அருள்பணியாளர், “தமது நற்செய்தியைத் தகுதியுடனும் …” என வேண்டி ஆசி வழங்க, திருத்தொண்டர் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு “ஆமென்” எனப் பதில் அளிப்பார். பின்னர் பீடத்துக்கு வணக்கம் செய்துவிட்டு அதன்மீது வைக்கப்பட்டுள்ள நற்செய்தி வாசக நூலை எடுத்து, சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு வாசக மேடை நோக்கிச் செல்வார். புகையும் தூபக் கலத்துடன் தூபப் பணியாளரும் எரியும் மெழுகுதிரிகளுடன் பணியாளர்களும் முன் செல்வர். அங்கே தம் கைகளைக் குவித்து அவர், “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக எனச் சொல்லி மக்களை வாழ்த்துவார். அதன்பின் “… தூய நற்செய்தியிலிருந்து வாசகம் எனச் சொல்லும்போது பெரு விரலால் நற்செய்தி வாசக நூல்மீதும் தம் நெற்றி மீதும் வாய், நெஞ்சின் மீதும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்வார். வாசக நூலுக்குத் தூபம் காட்டிவிட்டு நற்செய்தியைப் பறைசாற்றுவார். மடிவில் “ஆண்டவரின் அருள்வாக்கு என ஆர்ப்பரிப்பார். எல்லாரும் கிறிஸ்துவே, உமக்குப் புகழ்” எனப் பதில் கூறுவர். பின்னர் இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக என அமைந்த குரலில் வேண்டி, நூலை முத்தமிட்டு அதற்கு வணக்கம் செலுத்துவார். பின்பு அருள்பணியாளரிடம் திரும்புவார்.
திருத்தொண்டர் ஆயருக்கு உதவி செய்யும்போது, அவர் நூலை முத்தமிடும்படி அதனை அவரிடம் கொண்டு செல்வார் அல்லது திருத்தொண்டரே “இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக என அமைந்த குரலில் வேண்டி அதனை நூலைக் கொண்டு மக்களுக்கு ஆசி வழங்குவார். முத்தமிடுவார். சூழ்நிலைக்கு ஏற்ப, பெருவிழாக் கொண்டாட்டங்களில் ஆயர் நற்செய்தி
இறுதியாக, திருத்தொண்டர் நற்செய்தி வாசக நூலை எடுத்துச் சென்று திரு மேசையில் அல்லது அதற்கு உரிய தகுதி வாய்ந்த மதிப்புக்கு உரிய இடத்தில் வைக்கலாம்.
176. தகுதி வாய்ந்த வேறொரு வாசகர் இல்லை எனில், மற்ற வாசகங்களையும் திருத்தொண்டரே அறிக்கை இடுவார்.
==============↑ பக்கம் 56
177. அருள் பணியாளர் முன்னுரை கூறியபின் வழக்கப்படி திருத்தொண்டரே பொது மன்றாட்டின் கருத்துக்களை வாசக மேடையிலிருந்து எடுத்துரைப்பார்.
நற்கருணை வழிபாடு
178. பொது மன்றாட்டு முடிந்தவுடன் அருள்பணியாளர் தம் இருக்கையில் அமாவா”: திருத்தொண்டர் பீடத்தைத் தயார் செய்வார். அவருக்குப் பீடத்துணைவர் உதவி செய்வார்; திருத்தொண்டரே திருக்கலங்களைக் கையாளுவார். அருள்பணியாளர் மக்கள் அளிக்கும் கொடைகளை ஏற்றுக்கொள்வதற்கு அவர் உதவி செய்வார். பின்னர் அர்ச்சிக்கப்பட இருக்கும் அப்பம் உள்ள தட்டை அருள்பணியாளரிடம் கொடுப்பார். “கிறிஸ்து நமது மனித இயல்பில் . . . எனும் வார்த்தைகளை அமைந்த குரலில் சொல்லி, திருக்கிண்ணத்தினுள் இரசமும் சிறிதளவு தண்ணீரும் ஊற்றித் திருக்கிண்ணத்தை அருள்பணியாளரிடம் கொடுப்பார். திரு மேசையிலும் இவ்வாறு திருக்கிண்ணத்தைத் தயார் செய்யலாம். தூபத்தைப் பயன்படுத்தினால், அருள்பணியாளர் காணிக்கைப் பொருள்களுக்கும் சிலு வைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டும்போது அவருக்கு உதவி செய்வார். பின்னர் திருத்தொண்டர் அல்லது பீடத்துணைவர் அருள்பணியாளருக்கும் மக்களுக்கும் தூபம் காட்டு வார்.
179. நற்கருணை மன்றாட்டின்போது, திருத்தொண்டர் அருள்பணியாளருக்கு அருகில், ஆனால் சற்றுப் பின்னால் நின்றுகொண்டு, தேவைப்படும்போது திருக்கிண்ணம், திருப்பலி நூல் ஆகியவற்றைப் பயன்படுத்த உதவுவார்.
பின்னர் அருள்பணியாளர் தூய ஆவி இறங்கி வருவதற்காகச் சொல்லும் மன்றாட்டிலிருந்து திருக்கிண்ணத்தை உயர்த்திக் காட்டும் வரை திருத்தொண்டர் வழக்கப்படி முழங்காலில் இருப்பார். திருத்தொண்டர்கள் பலர் இருப்பின், அர்ச்சிப்புக்காக அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் உயர்த்திக்காட்டும்போது, அவர்களுள் ஒருவர் தூபக் கலத்தில் சாம்பிராணி இட்டு தூபம் காட்டுவார்.
180. நற்கருணை மன்றாட்டின் இறுதியில் வரும் இறைப்புகழுரையில் அருள்பணியாளர் திரு அப்பம் உள்ள தட்டை உயர்த்திப் பிடிக்கும்போது மக்கள் “ஆமென் எனக் கூறும்வரை திருத்தொண்டர் அவருக்கு அருகில் நின்று, திருக்கிண்ணத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பார்.
181. அமைதிக்கான மன்றாட்டை அருள்பணியாளர் சொல்லி, “ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக எனக் கூற, மக்கள், “உம் ஆன்மாவோடும் இருப்பதாக என மறுமொழி கூறுவார்கள். உடனே தேவைக்கு ஏற்ப, திருத்தொண்டர் அமைதி வாழ்த்துக் கூற மக்களை அழைத்து, தம் கைகளைக் குவித்து, மக்களை நோக்கி, ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம் எனச் சொல்வார். தாமும் அருள்பணியாளரிடமிருந்து அமைதி வாழ்த்தைப் பெற்றுக்கொள்வார்; தமக்கு அருகில் உள்ள மற்றப் பணியாளர்களுக்கும் அவர் அமைதி வாழ்த்து வழங்கலாம்.
182. அருள்பணியாளர் நற்கருணை உட்கொண்டதும் திருத்தொண்டர் அவரிடமிருந்து இரு வடிவங்களிலும் நற்கருணையைப் பெற்றுக்கொள்வார். பின்பு மக்களுக்கு நற்கருணை வழங்க அருள்பணியாளருக்கு உதவுவார். மக்களுக்கு இரு வடிவங்களிலும் நற்கருணை வழங்கப்படும்போது, திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்வோருக்கு அதைக் கொடுத்து உதவுவார். நற்கருணை பகிர்ந்தளிப்பு நிறைவுற்றதும், உடனே பீடத்தில் எஞ்சி இருக்கும் கிறிஸ்துவின் திரு இரத்தம் முழுவதையும் வணக்கத்துடன் உட்கொள்வார். தேவைப்பட்டால் பிற திருத்தொண்டர்களும் அருள்பணியாளர்களும் அவருக்கு உதவுவர்.
183. நற்கருணை வழங்கி முடிந்ததும் அருள்பணியாளருடன் பீடத்துக்குத் திரும்பி வந்து, அப்பத் துகள்கள் இருந்தால் அவற்றை ஒன்றுசேர்ப்பார்; பின்பு, திருக்கிண்ணத்தையும் ஏனைய திருக்கலங்களையும் திரு மேசைக்கு எடுத்துச்சென்று அவற்றை அங்கே தூய்மைப்படுத்தி, வழக்கம் போல ஒழுங்காக வைப்பார்: இவ்வேளையில் அருள்பணியாளர் தம் இருக்கைக்குத் திரும்புவார். திரு மேசையில் தூய்மைப்படுத்தப்படவேண்டிய கலங்களை வசதிக்கு ஏற்றாற்போலத் துகிலால் மூடித் திருப்பலி முடிந்து மக்கள் சென்றவுடனே, அவற்றைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு, திருமேனித் துகில்மீது வைக்கலாம்.
==============↑ பக்கம் 57
நிறைவுச் சடங்குகள்
184 திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு முடிந்ததும் திருத்தொண்டர் மக்களுக்குச் சி. அறிவிப்புகளை வழங்குவார். அருள்பணியாளர் விரும்பினால், தாமே அவ்வாறு செய்யலாம்
185. மக்கள் மீது மன்றாட்டையோ சிறப்பு ஆசிக்கான வாய்பாட்டையோ பயன்படுத்தினால் திருத்தொண்டர் “இறை ஆசி பெறத் தலை வணங்குங்கள் எனச் சொல்வார். அருள்பணியாளர் ஆசி வழங்கியவுடன் திருத்தொண்டர் மக்களை நோக்கி தம் கைகளைக் குவித்தவாறு “சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று என மக்களுக்குப் பிரியாவிடை கூறுவார்.
186. அடுத்து, அருள்பணியாளருடன் பலிப்பீடத்தை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார். பின்பு தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டு, பீடத்துக்கு வந்தவாறே அங்கிருந்து பவனியாகத் திரும்பிச் செல்வார்.
இ) பீடத்துணைவரின் பணிகள்
187. பீடத்துணைவர் செய்ய வேண்டிய பணிகள் பல வகை ஆகும்; அவற்றில் பலவும் ஒரே நேரத்தில் இடம் பெறலாம். எனவே அவற்றைப் பலரிடம் பகிர்ந்தளிப்பது விரும்பத்தக்கது. பீடத்துணைவர் ஒருவர் மட்டும் இருந்தால், மிக இன்றியமையாததை அவர் செய்வார்; மற்றவை வேறு பணியாளரிடம் பகிர்ந்தளிக்கப்படலாம்.
தொடக்கச் சடங்குகள்
188. பீடத்துக்குப் பவனியாக வரும்போது, எரியும் மெழுகுதிரிகள் தாங்கும் இரு பணியாளர்கள் நடுவில் அவர் திருச்சிலுவை ஏந்தி வரலாம். பீடத்தை அடைந்தபின், அதன் அருகில் திருச்சிலுவையை வைப்பார். அதுவே பீடச் சிலுவையாக இருக்கும். இல்லை எனில், அதைத் தகுதியான ஓர் இடத்தில் வைப்பார்; பின்னர் திருப்பீட முற்றத்தில் உள்ள தமது இடத்துக்குச் செல்வார்.
189, கொண்டாட்டத்தின்போது, தேவைக்கு ஏற்ப, அருள்பணியாளரை அல்லது திருத்தொண்டரை அணுகி நூல்களைக் கொடுப்பதும், வேறு தேவைகளில் அவர்களுக்கு உதவுவதும் பீடத்துணைவரின் பணிகள் ஆகும். இவற்றிற்கு ஏற்ப, அருள்பணியாளர் இருக்கைக்கு அருகிலோ பீடத்துக்கு அருகிலோ தம் பணிகளைத் தேவையானபோதெல்லாம் செய்வதற்கு வசதியாக, உகந்ததோர் இடத்தில் பீடத்துணைவர் இருப்பார்.
நற்கருணை வழிபாடு
190. திருத்தொண்டர் இல்லாதபோது, பொது மன்றாட்டு முடிந்தபின், அருள்பணியாளர் தம் இருக்கையில் அமர்ந்திருக்க, பீடத்துணைவர் திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருக்கிண்ணம், திருக்கிண்ண அட்டை, திருப்பலி நூல் ஆகியவற்றைப் பீடத்தின் மீது வைப்பார். பின் தேவையானால் மக்களின் காணிக்கைப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள அருள்பணியாளருக்கு உதவி செய்வார்; தேவைக்கு ஏற்ப அப்ப, இரசத்தை பீடத்துக்குக் கொண்டு வந்து அருள்பணியாளரிடம் அளிப்பார். தூபம் பயன்படுத்தப்பட்டால் தூங்க கலத்தை அருள்பணியாளருக்குமுன் உயர்த்திப் பிடிப்பார்; காணிக்கைப் பொருள்கள் மீதும் பீடத்துக்கும் சிலுவைக்கும் தூபமிட அருள்பணியாளருக்கு உதவி செய்வார். பின்னர் அருள்பணியாளருக்கும் மக்களுக்கும் தூபம் காட்டுவார்.
191. மக்களுக்கு நற்கருணை வழங்கத் திருத்தொண்டர் இல்லை எனில், முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவர் நற்கருணையின் சிறப்புரிமைத் திருப்பணியாளராக அருள்பணியால் உதவி புரியலாம்.100 இரு வடிவங்களில் நற்கருணை வழங்கினால், திருத்தொ ” இல்லாதபோது, அவரே திருக்கிண்ணத்தை மக்களுக்கு வழங்குவார் அல்லது திருக்கின” தோய்த்து நற்கருணை வழங்கினால் அவர் திருக்கிண்ணத்தை ஏந்திக் கொள்வார்.
==============↑ பக்கம் 58
192. அதே போல, நற்கருணை வழங்கியபின், முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவர் திருக்கலங்களைத் தூய்மைப்படுத்தி ஒழுங்காக வைப்பதில் அருள்பணியாளருக்கு அல்லது திருத்தொண்டருக்கு உதவி செய்வார். திருத்தொண்டர் இல்லை எனில், முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவர் திருக்கலங்களைத் திரு மேசைக்குக் கொண்டுபோய் வழக்கப்படி அங்கே அவற்றைத் தூய்மைப்படுத்தி, துடைத்து, ஒழுங்காக வைப்பார்.
193. திருப்பலி முடிந்ததும் பீடத்துணைவரும் மற்றப் பணியாளர்களும் அருள்பணியாளரோடும் திருத்தொண்டரோடும் பீடத்துக்கு வந்த முறையிலும் வரிசையிலும் பவனியாகத் திருப்பொருள் அறைக்குத் திரும்பிச் செல்வர்.
ஈ) வாசகரின் பணிகள் தொடக்கச் சடங்குகள்
194. பீடத்துக்குப் பவனியாக வரும்போது, திருத்தொண்டர் இல்லை எனில், அவர் தமக்கு உரிய உடைகளை அணிந்து நற்செய்தி வாசக நூலைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு அருள்பணியாளருக்கு முன் செல்வார்; அவ்வாறு இல்லை எனில், மற்றப் பணியாளரோடு வருவார்.
195. பீடத்தை அடைந்ததும் அவர் பிறருடன் தாழ்ந்து பணிந்து வணக்கம் செலுத்துவார். நற்செய்தி வாசக நூலை ஏந்திச் சென்றால் பீடத்துக்குச் சென்று நற்செய்தி வாசக நூலை அதன்மீது வைப்பார். பின் திருப்பீட முற்றத்தில் மற்றப் பணியாளரோடு தமக்கு உரிய இடத்துக்குச் செல்வார். வார்த்தை வழிபாடு
196. நற்செய்திக்குமுன் வரும் வாசகங்களை வாசக மேடையில் இருந்து வாசிப்பார். திருப்பாடல் முதல்வர் இல்லாதபோது முதல் வாசகத்துக்குப்பின் பதிலுரைத் திருப்பாடலை எடுத்துரைப்பார். 197. திருத்தொண்டர் இல்லாதபோது, பொது மன்றாட்டுக்கு அருள்பணியாளர் முன்னுரை கூறியபின் வாசகர் பொது மன்றாட்டின் கருத்துக்களை வாசக மேடையிலிருந்து எடுத்துக் கூறலாம். 198. வருகைப் பாடல், திருவிருந்துப் பாடல் பாடப்படவில்லை அல்லது நம்பிக்கையாளரால் திருப்பலி நூலில் உள்ள பல்லவிகள் சொல்லப்படவில்லை எனில், வாசகரே உரிய நேரத்தில் அவற்றை வாசிக்கலாம்.
II. கூட்டுத்திருப்பலி
199. குருத்துவம், திருப்பலி, மற்றும் இறைமக்கள் அனைவரின் ஒருமைப்பாட்டைக் கூட்டுத்திருப்பலிச் சடங்குமுறை முறையாக வெளிப்படுத்துகின்றது. எனவே ஆயர் மற்றும் அருள்பணியாளர்களின் திருநிலைப்பாட்டின்போதும் துறவு மடத்துத் தலைவர் அர்ச்சிக்கப்படும்போதும் கிறிஸ்மா எண்ணெய் அர்ச்சிக்கப்படும் சடங்கின்போதும் கூட்டுத்திருப்பலியே நடைபெற வேண்டும்.
கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் நலன் கருதி வேறொருவகைக் கொண்டாட்டம் தேவைப்பட்டால் தவிர பின்வரும் நேரங்களில் கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றப் பரிந்துரைக்கப்படுகின்றது.
அ) ஆண்டவரின் இரவு விருந்து மாலைத் திருப்பலி;
ஆ) பொதுச் சங்கங்கள், ஆயர்களின் கூட்டங்கள், மன்றங்கள் ஆகியவற்றின்போது நிறைவேற்றப்படும் திருப்பலி;
இ) துறவுக் குழுமப் பொதுத் திருப்பலி, கோவில்களிலும் தொழுகைக் கூடங்களிலும் நடைபெறும் முக்கியத் திருப்பலிகள்;
==============↑ பக்கம் 59
ஈ) மறைமாவட்ட அல்லது துறவு அருள்பணியாளர்கள் கூடி வரும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் திருப்பலி.101
தனியாகத் திருப்பலி நிறைவேற்ற எந்த அருள்பணியாளருக்கும் உரிமை உண்டி ஆயினும் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும் கோவிலிலோ சிற்றாலயத்திலோ அ.ே நேரத்தில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றக் கூடாது. அவ்வாறே பெரிய வியாழன் ஆண்டவருடைய இரவு விருந்துக் கொண்டாட்டம், பாஸ்கா திருவிழிப்பு ஆகிய நாள்களில் தனியாகத் திருப்பலி நிறைவேற்ற அனுமதி இல்லை.
200. அறிமுகம் இல்லாத, பயணம் மேற்கொண்டுள்ள அருள்பணியாளர்களின் குருத்துவ நிலை உறுதி செய்யப்பட்டபின், கூட்டுத்திருப்பலியில் கலந்துகொள்ள அவர்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளலாம். 201. அருள்பணியாளர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும்போது, தேவையை முன்னிட்டும் அருள்பணி நலன் கருதியும் ஒரே நாளில் பல முறை கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப் பரிந்துரைக்கப்படுகின்றது. ஆயினும் வெவ்வேறு நேரங்களிலும் வெவ்வேறு புனித இடங்களிலும் நிகழ வேண்டும்.102
202. தம் மறைமாவட்டத்தின் எல்லாக் கோவில்களிலும் வழிபாட்டு இடங்களிலும் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றும் முறையைச் சட்ட முறைமைப்படி நெறிப்படுத்துவது ஆயரைச் சாரும்.
203. மறைமாவட்ட அருள்பணியாளர்கள் தங்கள் ஆயருடன் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவது தனி மதிப்புடையதாகக் கருதப்பட வேண்டும். சிறப்பாக, பொதுக் கூட்டுத் தலத் திருப்பலி, திருவழிபாட்டு ஆண்டின் பெருவிழாத் திருப்பலிகள்; மறைமாவட்டத்தின் புதிய ஆயர், அவரின் இணையுதவி ஆயர், துணை ஆயர் ஆகியோரின் திருநிலைப்பாட்டுத் திருப்பலி; கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலி; ஆண்டவருடைய இறுதி இரவு விருந்து மாலைத் திருப்பலி; தலத் திரு அவையை நிறுவியவர் அல்லது மறைமாவட்டப் பாதுகாவலரின் விழா; ஆயரின் திருநிலைப்பாட்டு ஆண்டு விழா மற்றும் அருள்பணியாளர்களின் மாமன்றம், ஆயரின் அருள்பணி ஆய்வு.
அவ்வாறே அருள்பணியாளர்களின் அருள்வாழ்வுப் பயிற்சிகள், மற்றும் கூட்டங்களின்போது தங்கள் ஆயருடன் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவது பரிந்துரைக்கப்படுகின்றது. ஒவ்வொரு கூட்டுத்திருப்பலியும் குருத்துவத்தின் ஒற்றுமையையும் திரு அவையின் ஒன்றிப்பையும் எடுத்துக்காட்டினாலும், மேற்குறிப்பிட்ட கூட்டுத்திருப்பலிகளில் இது மேலும் தெளிவாக விளங்குகின்றது.103
204. குறிப்பிட்ட சடங்குமுறையின் உட்பொருளை உணர்த்துவதற்காக அல்லது விழாச் சிறப்புக்காக ஒரே நாளில் பல முறை திருப்பலி நிறைவேற்ற அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப் பின்வரும் சூழல்களில் அனுமதிக்கப்படுகின்றது:
அ) புனித வார வியாழனன்று கிறிஸ்மா எண்ணெய்த் திருப்பலி அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியவர் அதே நாளில் ஆண்டவருடைய இரவு விருந்து மாலைத் திருப்பலி அல்லது கூட்டுத்திருப்பலி நிகழ்த்தலாம்;
ஆ) பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலியைத் தனியாகவோ பிற அருள்பணியாளர்களோடு இணைந்தோ கொண்டாடி யவர் பாஸ்கா ஞாயிறு பகல் திருப்பலியையும் தனியாகவோ பிற அருள்பணியாளர்களோடு இணைந்தோ நிகழ்த்தலாம்.
இ) ஆண்டவர் பிறப்பு விழாவின் மூன்று திருப்பலிகளையும் அருள்பணியாளர்கள் எல்லாரும் தனித்தனித் திருப்பலியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ நிறைவேற்றலாம் ஆனால் இம்மூன்று திருப்பலிகளும் அவ்வவற்றுக்கு உரிய நேரத்தில் நடைபெற வேண்டும்’
101 காண். திருவழிபாடு, 57; திச, 902.
102 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண். 47: A.A.S. 59 (1967) பக் 566.
103 காண். மேற்படி, பக் 565
==============↑ பக்கம் 60
ஈ) இறந்த நம்பிக்கையாளரின் நினைவு நாளில் அருள்பணியாளர்கள் எல்லாரும் மூன்று திருப்பலிகளையும் தனித்தனித் திருப்பலியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ நிறைவேற்றலாம். அவை வெவ்வேறு நேரங்களில் நடைபெற வேண்டும். இரண்டாம், மூன்றாம் திருப்பலிகள் விதிமுறைகளில் குறிக்கப்பட்ட கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்.”
உ) மாமன்றங்கள், அயரின் அருள்பணி ஆய்வு இவற்றின்போது ஆய?” அவரது பிரதிநிதியோடு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியவர், அருள்பணியாளர்களின் இதரக — ங்கள் ஆகிய வேளைகளில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றியவர் நம்பக”””” -லனை முன்னிட்டு மீண்டும் திருப்பலி நிறைவேற்றலாம். தேவைப்பட்ட மாற்றம்”” இந்த விதிமுறை துறவுக் கூட்டங்களுக்கும் பொருந்தும்.
205 எவ்வகைக் கூட்டுத்திருப்பலியும், நடைமுறையிலுள்ள விதிமுறைகளுககு ??” ஒழுங்குபடுத்தப்படும் (காண். எண். 112 – 198). எனினும் பின்வருவனவற்றைக் கடைப்பிடித்தோ தழுவியமைத்தோ செயல்படுத்தலாம்.
206, திருப்பலி தொடங்கிய பின் வருகின்ற அருள்பணியாளர்கள் ஒருபோதும் கூட்டுத் திருப்பலியாளர்களாகச் செயல்படக்கூடாது; அத்தகையோரை அனுமதிக்கவும் கூடாது.
207. திருப்பீட முற்றத்தில் தயாராக இருக்க வேண்டியவை:
அ) இருக்கைகளும் கூட்டுத்திருப்பலியில் பங்கேற்கும் அருள்பணியாளர்களுக்கான கையேடுகளும்;
ஆ) திரு மேசையின்மேல்: தேவையான அளவுக்கு ஒரு பெரிய திருக்கிண்ணம் அல்லது சில திருக்கிண்ணங்கள்;
208. திருத்தொண்டர் இல்லை எனில், அவருக்கு உரிய கடமைகளைக் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர்களுள் சிலர் மேற்கொள்ளலாம்.
வேறு பணியாளர்களும் இல்லை எனில், அவர்களுடைய பணிகளைத் தகுதி வாய்ந்த நம்பிக்கையாளர் சிலரிடம் ஒப்படைக்கலாம்; இல்லை எனில், கூட்டுத்திருப்பலியில் பங்கேற்கும் அருள்பணியாளர்களுள் சிலர் அவற்றைச் செய்வர்.
209. கூட்டுத்திருப்பலியாளர்கள் திருப்பொருள் அறையிலோ வேறு தகுந்த இடத்திலோ திருப்பலிக்கு உரிய உடைகளை, தனியாக திருப்பலி நிறைவேற்றும்போது அணிவது போன்று அணிந்து கொள்வர். எனினும் தகுந்த காரணம் இருப்பின் (எ.கா. கூட்டுத்திருப்பலியாளர்கள் எண்ணிக்கை மிகுதியாக இருத்தல் அல்லது போதுமான திருவுடைகள் இன்மை) கூட்டுத்திருப்பலியின் முதல்வர் நீங்கலாக மற்றவர் திருப்பலி உரை அணியாது நீள் வெண்ணாடைமீது தோள் துகில் மட்டும் பயன்படுத்தலாம்.
தொடக்கச் சடங்குகள்
210. அனைத்தும் முறையாய்த் தயாரானபின் வழக்கம் போலப் பவனி கோவில் வழியாகப் பீடத்தை நோக்கிச் செல்லும். கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர்கள் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர்முன் செல்வார்கள்.
211 பீடத்துக்கு வந்ததும் கூட்டுத்திருப்பலியாளர்களும் திருப்பலி முதல்வரும் தாழ்ந்து பணிந்து, பீடத்தை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவர். பின்னர் தம்தம் இருக்கைகளுக்குச் செல்வர். திருப்பலி முதல்வர் தேவைக்கு ஏற்ப, பலிப்பீடத்துக்கும் சிலு வைக்கும் தூபம் காட்டுவார். பின் தம் இருக்கைக்குச் செல்வார்.
==============↑ பக்கம் 61
வார்த்தை வழிபாடு
212. வார்த்தை வழிபாட்டின்போது கூட்டுத்திருப்பலியாளர்கள் திருப்பலிக்குத் தலை ஏற்பவர் செய்வது போன்று தம் இருக்கைகளில் அமர்வார்கள் அல்லது நிற்பார்கள்.
“அல்லேலூயா’ தொடங்கியவுடன் ஆயர் தவிர எல்லாரும் எழுந்து நிற்பர். ஆயர் ஒன்றும் சொல்லாமல் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுவார். நற்செய்தியைப் பறைசாற்ற இருக்கும் திருத்தொண்டருக்கோ அல்லது அவர் இல்லாதபோது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவருக்கோ ஆயர் ஆசி வழங்குவார். அருள்பணியாளர் ஒருவர் கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை வகிக்கும்போது, திருத்தொண்டர் இல்லை எனில், நற்செய்தியைப் பறைசாற்றும் கூட்டுத்திருப்பலியாளர் திருப்பலி முதல்வரிடம் ஆசி கேட்பதும் இல்லை , அவரிடமிருந்து பெறுவதும் இல்லை .
213. திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் முதல்வர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர்களில் ஒருவர் வழக்கம் போல மறையுரை நிகழ்த்துவார்.
நற்கருணை வழிபாடு
914 பிற கூட்டுத்திருப்பலியாளர்கள் தம் இருக்கைகளில் அமர்ந்திருக்க, கூட்டுத்திருப்பலி முதல்வர் காணிக்கைப் பொருள்களைத் (காண். எண். 139-146) தயார் செய்வார்.
215. கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் காணிக்கைமீது மன்றாட்டைச் சொல்லி முடித்தவுடன் கூட்டுத்திருப்பலியாளர்கள் பீடத்தை அணுகி அதைச் சுற்றி நிற்பர். இருப்பினும் அவர்கள் சடங்குகள் சரியாக நடைபெறுவதற்கோ நம்பிக்கையாளர் திருச்சடங்குகளை நன்றாகக் காண்பதற்கோ திருத்தொண்டர் தம் பணியை நிறைவேற்றப் பீடத்தை அணுகுவதற்கோ தாங்கள் தடையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருக்கிண்ணம், திருப்பலி நூல் இவை பொருட்டுத் தேவையான நேரத்தில் உதவி செய்வதன் வழியாக திருத்தொண்டர் பீடத்தில் தம் பணியை நிறைவேற்றுவார். இருப்பினும் இயன்ற அளவு கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரைச் சுற்றி நிற்கும் கூட்டுத்திருப்பலியாளர்களுக்குச் சற்றுப் பின்னே நிற்பார்.
நற்கருணை மன்றாட்டைச் சொல்லும் முறை
216. கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளர் மட்டுமே தொடக்கவுரையைப் பாடுவார் அல்லது சொல்வார். “தூயவர்’ எனும் பாடலைக் கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் மக்களோடும் பாடல் குழுவினரோடும் சேர்ந்து பாடுவர் அல்லது சொல்வர். 217. ”தாயவர் ” முடிந்ததும் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் அருள் பணியாளர்கள் நற்கருணை மன்றாட்டைக் கீழே விவரித்துள்ளபடி தொடர்ந்து சொல்வர். வேறுவிதமாகக் செய்வார். குறிப்பிட்டிருந்தாலன்றி, கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டுமே சைகைகள்
218. கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒருமித்துச் சொல்லும் பகுதிகளைக் குறிப்பாக எல்லாரும் சொல்ல வேண்டிய அர்ச்சிப்பு வார்த்தைகளைக் கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரின் குரல் தெளிவாகக் கேட்கும் வகையில் கூட்டுத்திருப்பலியாளர்கள் கொள்ளப்பட முடியும். மெல்லிய குரலில் சொல்வார்கள். இதனால் சொற்கள் மக்களால் எளிதில் புரிந்து
சிறந்தது ஆகும்.
கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒருமித்துச் சொல்ல வேண்டிய பகுதிகளுக்கு? திருப்பலி நூலில் இசைக் குறியீடுகள் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றைப் பாடு?
==============↑ பக்கம் 62
நற்கருணை மன்றாட்டு 1 அல்லது உரோமை நற்கருணை மன்றாட்டு
219. உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டைப் பயன்படுத்தும்போது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்து “ஆகவே கனிவுமிக்க தந்தையே. . . எனச் சொல்வார்.
220. “ஆண்டவரே, உம் அடியார்களாகிய … ” என்பதைக் கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரும் உமமுடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள்…’ என்பதை மற்றொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர்.
221. ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும்…’ என்பதைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் கைகளை விரித்துச் சொல்வார்.
222. “இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி …” என்பதிலிருந்து “எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் …” எனும் மன்றாட்டுவரை திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் பின்வருமாறு சைகை செய்வார். கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒன்றாக அனைத்தையும் சொல்வர்.
அ. “இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி” என்பதை எல்லாரும் தம் கைகளைக் காணிக்கைப் பொருள்கள் பக்கமாய் நீட்டிச் சொல்வர்;
ஆ. “அவர் தாம் பாடுபடுவதற்கு முந்திய நாள்” என்பதையும் “அவ்வண்ணமே இரவு விருந்தை அருந்தியபின்” என்பதையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;
இ. ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் எனத் தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தம் வலக் கையை திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் சற்று உயர்த்திக் காட்டப்படும்போது அவற்றை உற்று நோக்குவர், பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்;
ஈ. “ஆகவே ஆண்டவரே, உம் திருமகனும் ….” என்பதையும் “இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும் … என்பதையும் தம் கைகளை விரித்துச் சொல்வர்;
உ.”எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் …” என்பதிலிருந்து “நாங்கள் அனைவரும் … வரை தம் கைகளைக் குவித்துத் தலை குனிந்து சொல்வர்; பின்பு “எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்” எனச் சொல்லும்போது நிமிர்ந்து நிற்பர்; “எல்லா விண்ணக ஆசியையும் எனச் சொல்லும்போது தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைவர்.
223. “ஆண்டவரே, நம்பிக்கையின் அடையாளத்தோடு…’ என்பதைக் கூட்டுத் திருப்பலியாளருள் ஒருவரும் “பாவிகளாகிய உம் ஊழியர்கள் நாங்களும் …” என்பதை மற்றொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர். 234 “பாவிகளாகிய உம் அடியார்கள் நாங்களும்” எனும் சொற்களின்போது கூட்டுத் திருப்பலியாளர்கள் எல்லாரும் மார்பைத் தட்டிக்கொள்வர்.
225. “இவர் வழியாகவே, ஆண்டவரே … என்பதைக் கூட்டுத்திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் சொல்வார்.
நற்கருணை மன்றாட்டு II
226, இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் “ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்.” என்பதைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார்.
227. “ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து … என்பதிலிருந்து உம்மைத் தாழ்மையுடன் பின்வருமாறு சொல்வர்: மன்றாடுகின்றோம்…” வரை கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒன்றாக அனைத்தையும் பின்வருமாறு சொல்வர்:
=============↑ பக்கம் 63
அ) “ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து’ என்பதை எல்லாரும் தம் கை காணிக்கை பக்கமாய் நீட்டிச் சொல்வர்;
கைகளைக் காணிக்கை பக்கமாய் நீட்டிச் சொல்வார்:
ஆ) “அவர் பாடுபட உளம் கனிந்து … என்பதையும் “அவ்வண்ண மே. அருந்தியபின்..” என்பதையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;
இ) ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் — தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் வலக் கையைத் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் சற்று உயர்த்திக் காட்டப்படும்போது, அவற்றை உற்றுநோக்குவர்; பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்;
ஈ) “ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் …” என்பதிலிருந்து “உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்…” வரை தம் கைகளை விரித்துச் சொல்வர்.
228. வாழ்வோருக்காகச் சொல்லப்படும் “ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை … ” எனத் தொடங்கும் மன்றாட்டை ஒருவரும் இறந்தோருக்காகச் சொல்லப்படும் “மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ….” எனத் தொடங்கும் மன்றாட்டை மற்றொருவரும் சொல்லலாம். அவர் மட்டும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் இம் மன்றாட்டுகளைச் சொல்வார்.
நற்கருணை மன்றாட்டு III 229. மூன்றாவது நற்கருணை மன்றாட்டில், “ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்…” எனத் தொடங்கும் மன்றாட்டைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார்.
230. “எனவே ஆண்டவரே, உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டு வந்துள்ள …” என்பதிலிருந்து, “கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும் ஒரே உள்ளமும் உடையவராக விளங்கச் செய்வீராக …” வரை கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாரும் ஒன்றாக அனைத்தையும் பின்வருமாறு சொல்வர்:
அ) “எனவே ஆண்டவரே, உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டு வந்துள்ள …” எனும் மன்றாட்டைத் தம் கைகளைக் காணிக்கைப் பக்கமாய் நீட்டிச் சொல்வர்;
ஆ) “ஏனெனில் அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்” எனும் மன்றாட்டையும் “அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்’ எனும் மன்றாட்டையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;
இ) ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் எனத் தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் வலக் கையைத் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் சற்று உயர்த்திக்காட்டப்படும்போது அவற்றை உற்று நோக்குவர்; பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்;
ஈ) ஆகவே ஆண்டவரே, உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளையும் என்பதிலிருந்து கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும் ஒரே உள்ளமும் உடையவராக விளங்க செய்வீராக…” வரை தம் கைகளை விரித்துச் சொல்வர்.
231. “இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக… எனும் மன்ற” கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரும் ஆண்டவரே, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் !
” எனும் மன்றாட்டை மற்றொருவரும் இறந்துபோன … எனும் மகே” இன்னொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர்.
==============↑ பக்கம் 64
நற்கருணை மன்றாட்டு IV
032. நான்காவது நற்கருணை மன்றாட்டில், “தூயவரான தந்தையே, உம்மைப் புகழ்கின்றோம்…” என்பதிலிருந்து, “புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார்” வரை திருப்பலிக்குத் தலைமை …வர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார். 99 ஆகவே ஆண்டவரே, அதே தூய ஆவியார்…’ என்பதிலிருந்து கிறிஸ்துவில் உயிருள்ள வலிப்பொருளாகுமாறு கனிவாய் அருள்புரியும் வரை கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் எல்லாரும் எல்லாவற்றையும் ஒன்றாகப் பின்வருமாறு சொல்வர்:
அ) “ஆகவே ஆண்டவரே, அதே தூய ஆவியார்…” எனும் மன்றாட்டை எல்லாரும் தம் கைகளைக் காணிக்கைப் பக்கமாய் நீட்டிச் சொல்வர்;
ஆ) “ஏனெனில் தூயவரான தந்தையே, உம்மால் அவர்…” எனும் மன்றாட்டையும் “அவ்வண்ணமே, திராட்சை இரசம் . . . எனும் மன்றாட்டையும் தம் கைகளைக் குவித்துச் சொல்வர்;
இ) ஆண்டவரின் வார்த்தைகளை உச்சரிக்கும்போது, பொருத்தம் எனத் தெரிந்தால், கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் வலக் கையை திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் நோக்கி நீட்டுவர்; திரு அப்பமும் திருக்கிண்ணமும் உயர்த்திக்காட்டப்படும்போது அவற்றை உற்று நோக்குவர், பின்பு தாழ்ந்து பணிந்து வணங்குவர்.
ஈ) “ஆகவே ஆண்டவரே, எங்கள் மீட்பின் நினைவை ….” என்பதிலிருந்து “கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருளாகுமாறு கனிவாய் அருள்புரியும் … வரை தம் கைகளை விரித்துச் சொல்வர்.
234 “எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை …” எனத் தொடங்கும் மன்றாட்டைக் கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரும் கனிவுள்ள தந்தையே … எனும் மன்றாட்டை மற்றொருவரும் தம் கைகளை விரித்து உரத்த குரலில் சொல்வர்.
235. திருத்தூதுப் பீடத்தின் ஒப்புதல் பெற்ற பிற நற்கருணை மன்றாட்டுகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மன்றாட்டுக்கும் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
236. நற்கருணை மன்றாட்டின் இறுதி இறைப்புகழுரை திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளரால் மட்டும் அல்லது ஏற்புடையதாயின் கூட்டுத்திருப்பலியாளர்கள் எல்லாராலும் சேர்ந்து சொல்லப்படும். இது பொதுநிலை நம்பிக்கையாளர் சொல்வதற்கு உரிய பகுதி அல்ல.
திருவிருந்துச் சடங்கு
237. பின்பு திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் தம் கைகளைக் குவித்து, ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலுக்கான முன்னுரை வழங்குவார்; பின்னர் அவர் தம் கைகளை விரித்துக் கூட்டுத் திருப்பலியாளர்கள் எல்லாருடனும் மக்களுடனும் சேர்ந்து அவ்வேண்டலைச் சொல்வார்.
238. “ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும்… எனும் தொடர் இறைவேண்டலைத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளை விரித்துச் சொல்வார். இறுதியில் கூட்டுத்திருப்பலியாளர்கள் மக்களோடு சேர்ந்து, ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் . . . என்ற இறுதி ஆர்ப்பரிப்பைச் சொல்வர்.
239. “ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம் எனத் திருத்தொண்டரோ அவர் இல்லை எனில் கூட்டுத்திருப்பலியாளர்களுள் ஒருவரோ சொல்வார். அதன்பின் ஒருவர் மற்றவருக்கு அமைதி வாழ்த்தை வழங்குவர்; திருத்தொண்டருக்கு முன்பாக, உருப்பலிக்குத் தலைமை ஏற்பவருக்கு அருகில் உள்ள கூட்டுத்திருப்பலியாளர்கள் அமைதி “உதை முதலில் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.
==============↑ பக்கம் 65
240. “உலகின் பாவங்களைப் போக்கும் எனும் மன்றாட்டு சொல்லப்படும்போது கட்டி, திருப்பலியாளர்கள், மக்கள் ஆகியோருக்குத் தேவையான அப்பத்தைப் பிடுவதில் திருப்பலி தலைமை ஏற்பவருக்குத் திருத்தொண்டர்கள் அல்லது கூட்டுத்திருப்பலியாளர்களுள் சில: உதவலாம்.
241. சிறு அப்பத் துண்டு ஒன்றைத் திருக்கிண்ணத்துள் இட்டபின் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் மட்டும் தம் கைகளைக் குவித்து “ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே. ..” எனு. மன்றாட்டையோ “ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் …” எனும் மன்றாட்டையோ அமைந்த குரலில் சொல்வார்.
242. திருவிருந்துக்கு முந்திய மன்றாட்டு முடிந்ததும் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் முழங்காலிட்டு, சிறிது பின்நோக்கிச் செல்வார். கூட்டுத்திருப்பலியாளர்கள் ஒருவர்பின் ஒருவராய்ப் பீடத்தின் நடுப்பகுதிக்கு வந்து, முழங்காலிட்டு, பின் பீடத்திலிருந்து கிறிஸ்துவின் திரு உடலை வணக்கத்துடன் எடுத்து அதை வலக் கையில் பிடித்து இடக் கையால் அதை தாங்கிக்கொண்டு தம் இடத்துக்குத் திரும்புவர்; அல்லது கூட்டுத்திருப்பலியாளர்கள் தம் இடத்திலேயே இருக்க, திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரோ கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரோ பலரோ திரு அப்பம் உள்ள தட்டை ஏந்திவர அத்தட்டிலிருந்து கூட்டுத்திருப்பலியாளர்கள் கிறிஸ்துவின் திரு உடலை எடுத்துக்கொள்ளலாம் அல்லது அவர்கள் திரு அப்பம் உள்ள தட்டைத் தங்களுக்கு அடுத்து இருப்பவர்முதல் இறுதி இருக்கையில் நிற்பவர்வரை கொடுத்துக் கிறிஸ்துவின் திரு உடலை எடுத்துக்கொள்ளலாம்.
343. பின்பு திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் அந்தத் திருப்பலியில் அர்ச்சிக்கப்பட்ட திரு அப்பத்தை எடுத்து, திருக்கிண்ணத் தட்டுக்குமேல் அல்லது திருக்கிண்ணத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மக்கள் பக்கமாய்த் திரும்பி “இதோ, இறைவனின் செம்மறி …” எனச் சொல்வார்; தொடர்ந்து, “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் ….” என்பதைக் கூட்டுத்திருப்பலியாளரோடும் மக்களோடும் சேர்ந்து சொல்வார்.
244. அதன்பின், திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் பலிப்பீடப் பக்கமாய்த் திரும்பி, அவர் மட்டும் “கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக” என அமைந்த குரலில் சொல்லி, கிறிஸ்துவின் திரு உடலை வணக்கத்துடன் உண்பார்; இவ்வாறே கூட்டுத் திருப்பலியாளர்களும் செய்வார்கள். பின் திருத்தொண்டர் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரிடமிருந்து கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் பெற்றுக்கொள்வார். 245. ஆண்டவரின் திரு இரத்தத்தை நேரடியாகத் திருக்கிண்ணத்திலிருந்து பருகலாம் அல்லது திருக்கிண்ணத்தில் கிறிஸ்துவின் திரு உடலைத் தோய்த்தும் உட்கொள்ளலாம் அல்லது ஒரு குழாயையோ கரண்டியையோ பயன்படுத்தி உட்கொள்ளலாம். 246. திருக்கிண்ணத்திலிருந்து நேரடியாகப் பருகினால் பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:
அ) திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்தின் நடுவில் நின்று “கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நிலைவாழ்வு அளிப்பதாக” என அமைந்த குரலில் சொல்லி, சிறிதளவு திரு இரத்தத்தை உட்கொண்டபின், திருத்தொண்டர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவரிடம் திருக்கிண்ணத்தைத் தருவார்; பின்னர் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்குவார் (காண். எண். 160-16 2).
கூட்டுத்திருப்பலியாளர் ஒருவர் பின் ஒருவராக அல்லது இரு திருக்கிண்ணங்க பயன்படுத்தினால், இருவர் இருவராகப் பீடத்துக்கு வந்து, முழங்காலிட்டு திரு இரத்தத உட்கொண்டபின், திருக்கிண்ணத்தின் விளிம்பைத் துடைத்ததும் தம் இருக்கைக்குத் திரும்புவார்.
ஆ) திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் வழக்கம் போலப் பீடத்தின் நடு’ நின்றுகொண்டு ஆண்டவரின் திரு இரத்தத்தைப் பருகுவார்.
==============↑ பக்கம் 66
கூட்டுத்திருப்பலியாளர்கள் தங்கள் இடங்களிலேயே இருந்து கொண்டு, திருத்தொண்டர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவர் கொண்டு வந்து தரும் திருக்கிண்ணத்திலிருந்து ஆண்டவரின் திரு இரத்தத்தை உட்கொள்ளலாம் அல்லது ஒருவர் மற்றவரிடம் திருக்கிண்ணத்தைத் தந்து, உட்கொள்ளலாம். திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்பவர் அல்லது திருக்கிண்ணத்தைக் கொடுப்பவர் அதன் விளிம்பைத் துடைப்பார்: பருகியவர் ஒவ்வொருவராகத் தம் இருக்கையில் அமர்வர்.
247. திருத்தொண்டர் பீடத்தின்மேல் எஞ்சி இருக்கும் திரு இரத்தம் முழுவதையும் வணக்கத்துடன் உட்கொள்வார். தேவைப்படின் கூட்டுத்திருப்பலியாளர்கள் சிலர் அவருக்கு உதவலாம். அவர் திருக்கிண்ணத்தைத் திரு மேசைக்கு எடுத்துச் செல்வார். அங்கு அவரோ முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவரோ வழக்கம் போல அதைத் தூய்மைப்படுத்தி, துடைத்து ஒழுங்காக வைப்பர் (காண். எண் 183).
248. கூட்டுத்திருப்பலியாளர்கள் பின்வரும் முறையிலும் நற்கருணை உட்கொள்ளலாம்: அதாவது, ஒவ்வொருவராகப் பீடத்திலிருந்து ஆண்டவரின் திரு உடலை உண்டு, உடனே தொடர்ந்து திரு இரத்தத்தை உட்கொள்ளுதல்.
இம்முறைப்படி திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் வழக்கம் போல இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்வார் (காண். எண் 158). இருப்பினும் திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்ள ஒரு குறிப்பிட்ட முறையைத் தேர்ந்தெடுப்பார். அம்முறையையே கூட்டுத் திருப்பலியாளர்கள் எல்லாரும் பின்பற்றுவர்.
திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் நற்கருணை உட்கொண்ட பின்பு, பீடத்தின் ஓரத்தில் உள்ள மற்றொரு திருமேனித் துகில் மீது திருக்கிண்ணம் வைக்கப்படும். கூட்டுத் திருப்பலியாளர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பீடத்தின் நடுப்பகுதியை அணுகி, முழங்காலிட்டு, ஆண்டவர் திரு உடலை உட்கொள்வர்; பிறகு பீடத்தின் ஒரத்திற்குச் சென்று, மேலே கூறியுள்ள முறைப்படி திருக்கிண்ணத்திலிருந்து உட்கொள்வதற்கான சடங்குகளுள் ஒன்றைத் தேர்ந்து கொண்டு ஆண்டவரின் திரு இரத்தத்தை உட்கொள்வர்.
பின்பு திருத்தொண்டர் நற்கருணை உட்கொள்வதும் திருக்கிண்ணத்தைத் தூய்மைப் படுத்துவதும் மேலே விளக்கியபடி நடக்கும்.
249. கூட்டுத்திருப்பலியாளர்கள், திருக்கிண்ணத்தில் திரு உடலைத் தோய்த்து உண்ணும் முறையைப் பின்பற்றினால், திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் வழக்கம் போல ஆண்டவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொள்வார்; ஆனால் கூட்டுத்திருப்பலியாளரின் தேவைக்குப் போது மான திரு இரத்தம் திருக்கிண்ணத்தில் இருக்கும்படி அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்பு திருத்தொண்டர் அல்லது கூட்டுத்திருப்பலியாளர் ஒருவர் பீடத்தின் நடுவில் அல்லது ஓரத்தில் மற்றொரு திருமேனித் துகில் மீது திருக்கிண்ணத்தை வைப்பார்; திரு அப்பத் துண்டுகளைக் கொண்ட தட்டையும் வசதியாகத் திருக்கிண்ணத்துக்கு அருகில் வைப்பார்.
கூட்டுத்திருப்பலியாளர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பீடத்தை அணுகி, முழங்காலிட்டு வணங்கி அப்பத் துண்டு ஒன்றை எடுத்துத் திருக்கிண்ணத்தில் சிறிதளவு தோய்த்து, வாய்க்குக் கீழே திருக்கிண்ணத் துகில் ஒன்றை ஏந்தி, தோய்த்தத் திரு அப்பத் துண்டை உண்பர்; பின் திருப்பலியின் தொடக்கத்தில் தாம் இருந்த இடத்துக்குத் திரும்புவர்.
திருத்தொண்டருக்கும் திரு இரத்தத்தில் தோய்த்து நற்கருணை வழங்கப்படும். நற்கருணை கொடுக்கும் அருள்பணியாளர், “கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும் எனச் சொல்ல, திருத்தொண்டர் “ஆமென் எனப் பதில் அளிப்பார். திருத்தொண்டர் பீடத்தின்மேல் எஞ்சி இருக்கும் திரு இரத்தம் முழுவதையும் உட்கொள்வார். தேவைப்படின் கூட்டுத்திருப்பலியாளர்கள் சிலர் அவருக்கு உதவலாம். அவர் திருக்கிண்ணத்தைத் திரு மேசைக்கு எடுத்துச் செல்வார். அங்கு அவரோ முறையாக நியமனம் பெற்ற பீடத்துணைவரோ வழக்கம் போல அதைத் தூய்மைப்படுத்தி, துடைத்து, ஒழுங்காக வைப்பார்.
==============↑ பக்கம் 67
நிறைவுச் சடங்குகள்
250. திருப்பலி இறுதிவரை உள்ள பகுதிகளை வழக்கம் போலத் திருப்பலி, தலைமை ஏற்பவர் நிறைவேற்றுவார் (காண். எண். 166-168); அப்பொம் கூட்டுத்திருப்பலியாளர்கள் தத்தம் இடத்தில் நிற்பார்கள். 251. பீடத்தை விட்டுச் செல்லு முன், கூட்டுத்திருப்பலியாளர்கள் பீடத்துக்குத் தாழ்ந்து பணிந்து வணக்கம் செய்வார்கள். திருப்பலிக்குத் தலைமை ஏற்பவர் திருத்தொண்டருடன் சேர்ந்து வழக்கம் போலப் பீடத்தை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்.
III ஒரு பணியாளர் மட்டும் பங்கேற்கும் திருப்பலி
52. அருள்பணியாளர் நிறைவேற்றும் திருப்பலியில் ஒரு பணியாளர் மட்டும் உதவி புரிந்து பதிலளிக்கும்போது, மக்களோடு சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் திருப்பலி வழிபாட்டுமுறை பின்பற்றப்பட வேண்டும் (காண். எண். 120-169); தேவைக்கு ஏற்ப, பணியாளர் மக்களின் பகுதிகளைத் தகுந்த முறையில் சொல்வார்.
253. பணியாளர் ஒரு திருத்தொண்டராக இருப்பின், அவருக்கு உரிய பணிகளைச் (காண். எண். 171-186) செய்வார். மக்களுக்கு உரிய பகுதிகளையும் நிறைவேற்றுவார்.
254. தகுந்த, சரியான காரணமின்றி, பணியாளரோ பொது நிலையினர் ஒருவரோ பங்கேற்காத நிலையில் திருப்பலி நிறைவேற்றக் கூடாது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் வாழ்த்துகளும் அழைப்பு முன்னுரைகளும் திருப்பலி முடிவில் ஆசியும் விட்டுவிடப்படும்.
255. திருப்பலிக்கு முன்பு பீடத்தின் அருகில் உள்ள திரு மேசையின்மீது அல்லது பீடத்தின் வலப் பக்கத்தில் திருக்கிண்ணமும் தேவையானவையும் தயார் செய்யப்பட்டிருக்கும்.
தொடக்கச் சடங்குகள்
256. அருள்பணியாளர் பீடத்தை அணுகி, பணியாளருடன் தாழ்ந்து பணிந்து வணங்கிப் பீடத்தை முத்தமிட்டபின் தம் இருக்கைக்குச் செல்வார். அருள்பணியாளர் விரும்பினால் பீடத்திலேயே நிற்கலாம். அவ்வாறெனில், அங்கேயே திருப்பலி நூலும் தயாராக இருக்கும். பின் பணியாளர் அல்லது அருள்பணியாளர் வருகைப் பல்லவியைச் சொல்வார்.
257. பின்னர் அருள்பணியாளர் பணியாளருடன் நின்றுகொண்டு “தந்தை, மகன், தாய ஆவியார்… எனச் சொல்லிச் சிலுவை அடையாளம் வரைவார். தரப்பட்டுள்ள வாய்பாடுகளில் ஒன்றைத் தெரிவு செய்து பணியாளரை வாழ்த்துவார்.
258. பின்பு பாவத்துயர்ச் செயல் முடிந்ததும் சடங்குமுறைக் குறிப்புகளுக்கு ஏற்ப “ஆண்டவரே, ரொக்கமாயிரும்” எனும் மன்றாட்டும் “உன்னதங்களிலே எனும் பாடலும் சொல்லப்படும்.
259. பின் கைகளைக் குவித்து “மன்றாடுவோமாக” எனச் சொல்வார். தேவைக்கு ஏற்ப, சிறிது நேர அமைதிக்குப் பின், தம் கைகளை விரித்துத் திருக்குழும மன்றாட்டைச் சொல்வார். மன்றாட்டு முடிவில் பணியாளர் “ஆமென்’ எனப் பதில் சொல்வார்.
வார்த்தை வழிபாடு
260 கூடுமானவரை, வாசக மேடையிலிருந்தோ புத்தகத் தாங்கியிலிருந்தோ வாசகங்கள் வாசிக்கப்படும்.
261. திருக்குழும மன்றாட்டு முடிந்ததும் பணியாளர் முதல் வாசகத்தையும் அத்தோடு சேர்?? திருப்பாடலையும் வாசிப்பார்; இரண்டாம் வாசகம் இருந்தால் அதைத் தொட”
— வாடர்ந்து வாசிப்பார்; பின் “அல்லேலூயா’ வசனத்தை அல்லது வேறு பாடலை வாசிப்பார்.
==============↑ பக்கம் 68
263. பின்னர் அருள்பணியாளர் தாழ்ந்து பணிந்து “எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியை … எனச் சொன்ன பிறகு நற்செய்தியை வாசிப்பார். முடிவில் ஆண்டவரின் அருள்வாக்கு எனக் கூற, பணியாளர் “கிறிஸ்துவே, உமக்குப் புகழ் என்பார். முடிவில் “இந்நற்செய்தியின் வார்த்தைகளால் நம் பாவங்கள் நீங்குவனவாக…” என்று அமைந்த குரலில் சொல்லி, நூலை முத்தமிட்டு வணக்கம் செலுத்துவார்.
263. பின்னர் அருள்பணியாளர் ஒழுங்குமுறைக் குறிப்புகளுக்கு இணங்க, நம்பிக்கை அறிக்கையைப் பணியாளருடன் சேர்ந்து சொல்வார்.
264 பின்னர் பொது மன்றாட்டு தொடரும். இவ்வகைத் திருப்பலியிலும் இது இடம்பெறலாம், அருள்பணியாளர் முன்னுரையையும் இறுதி மன்றாட்டையும் கூறுவார். பணியாளரோ கருத்துக்களை எடுத்துரைப்பார்.
நற்கருணை வழிபாடு
265. நற்கருணை வழிபாட்டில் பின்வருபவை தவிர மற்றவை எல்லாம் மக்களோடு திருப்பலியில் உள்ளது போலவே நடைபெறும்.
266. ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலுக்குப்பின் வரும் தொடர் இறைவேண்டல் சொல்லப்படும். அதன் முடிவில் வரும் ஆர்ப்பரிப்புக்குப் பின் “ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, அமைதியை …… எனும் மன்றாட்டைச் சொல்வார். தொடர்ந்து “ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக” என்பார். பணியாளர், “உம் ஆன்மாவோடும் இருப்பதாக” என்று பதிலளிப்பார். தேவைக்கு ஏற்ப, அருள்பணியாளர் பிற பணியாளருக்கு அமைதி ஆசி கூறுவார்.
267. பின்னர் “உலகின் பாவங்களைப் போக்கும் … ” எனும் மன்றாட்டைப் பணியாளரோடு சொல்லும்போது திரு அப்பத் தட்டின்மீது அப்பத்தைப் பிடுவார். “உலகின் பாவங்களைப் போக்கும் … சொல்லி முடித்தபின் “நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திரு உடலும் … எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்லி சிறு அப்பத் துண்டைத் திருக்கிண்ணத்துள் இடுவார்.
268. சிறு அப்பத் துண்டைத் திருக்கிண்ணத்துள் இட்டபின் அருள்பணியாளர், “ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே … எனும் மன்றாட்டையோ “ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும்…” எனும் மன்றாட்டையோ அமைந்த குரலில் சொல்வார். பின் முழங்காலிட்டு, அப்பத்தை எடுத்து, பணியாளர் நற்கருணை உட்கொள்கின்றார் எனில், அவர் பக்கமாய்த் திரும்பி, திரு அப்பத்தை அப்பத் தட்டுக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்தோ திருக்கிண்ணத்தின்மீது பிடித்தோ, “இதோ, இறைவனின் செம்மறி … எனும் மன்றாட்டைச் சொல்வார். தொடர்ந்து பணியாளரோடு சேர்ந்து, “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில்… எனும் மன்றாட்டைச் சொல்வார். பின்னர் பலிப்பீடப் பக்கம் திரும்பி கிறிஸ்துவின் திரு உடலை உட்கொள்வார். பணியாளர் நற்கருணை உட்கொள்ளவில்லை எனில், அருள்பணியாளர் முழங்காலிட்டு, அப்பத்தை எடுத்து, பலிப்பீடப் பக்கம் திரும்பி, “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில்
” என்பதையும் “கிறிஸ்துவின் திரு உடல் ….. என்பதையும் அமைந்த குரலில் சொல்வார். பின் கிறிஸ்துவின் திரு உடலை உட்கொள்வார். அதன்பின் திருக்கிண்ணத்தை எடுத்து, “கிறிஸ்துவின் திரு இரத்தம் … எனும் மன்றாட்டை அமைந்த குரலில் சொல்லி கிறிஸ்துவின் திரு இரத்தத்தை உட்கொள்வார்.
369. பணியாளருக்கு நற்கருணை வழங்கும் முன் பணியாளர் அல்லது அருள்பணியாளரே திருவிருந்துப் பல்லவியைச் சொல்வார்.
270. அருள் பணியாளர் திருக்கிண்ணத்தை திரு மேசையிலோ பீடத்திலோ தூய்மைப்படுத்துவார். திருக்கிண்ணத்தைப் பீடத்தில் தூய்மைப்படுத்தினால், பணியாளர் வைக்கலாம். அதைத் திரு மேசைக்கு எடுத்துச் செல்லலாம் அல்லது பீடத்தின் ஒரு புறத்தில் வைக்கலாம்.
==============↑ பக்கம் 69
271. திருக்கிண்ணத்தைத் தூய்மைப்படுத்தியபின் அருள்பணியாளர் சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும். பின்னரே திருவிருந்துக்குப்பின் மன்றாட்டைச் சொல்வார்.
நிறைவுச் சடங்குகள்
272. மக்களோடு திருப்பலியில் உள்ளது போலவே இச்சடங்குகள் நடைபெறும், ‘மெ. வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று” எனும் பிரியாவிடை சொல்வதில்லை, அருள்பணியாளர் வழக்கம் போலப் பீடத்தை முத்தமிட்டு அதற்கு வணக்கம் செலுத்துவார்; பின் பணியாளரோடு தாழ்ந்து பணிந்தபின் திரும்பிச் செல்வார்.
IV. எல்லாவகைத் திருப்பலிக்கும் உரிய சில பொதுவிதிகள்
பீடத்துக்கும் நற்செய்தி வாசக நூலுக்கும் வணக்கம்
273. திருவழிபாட்டு மரபுப்படி, பீடத்துக்கும் நற்செய்தி வாசக நூலுக்கும் முத்தமிட்டு வணக்கம் செலுத்தப்படும். ஆனால் அவ்வாறு வணக்கம் செலுத்தும் முறை குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியின் மரபுகளுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்புடையதாக இல்லை எனில், அதற்குப் பதிலாகப் பயன்படுத்த வேண்டிய வேறொரு முறையை ஆயர் பேரவை தீர்மானித்து, திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலோடு பயன்படுத்த வேண்டும்.
முழங்காலிடுதலும் தலை வணங்குதலும்
274. முழங்காலிடுவது என்பது வலது முழங்காலை மடக்கித் தரைவரை தொடுவது ஆகும். இது ஆராதனையைக் குறிக்கும். மிகவும் தூய்மைமிகு நற்கருணைக்கும் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளிக்கிழமை அன்று திருவழிபாட்டில் இடம் பெறும் ஆடம்பர வழிபாட்டிலிருந்து பாஸ்கா திருவிழிப்புத் தொடங்கும்வரை திருச்சிலுவைக்கும் இது உரியது.
திருப்பலிக் கொண்டாட்டத்தில் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் திரு அப்ப எழுந்தேற்றத்துக்குப் பின்னும் திருக்கிண்ண எழுந்தேற்றத்துக்குப் பின்னும் திரு உணவை உண்ணும் முன்னும் என கூட்டுத்திருப்பலியில் மூன்று முறை முழங்காலிடுவார். கூட்டுத்திருப்பலியில் கடைப்பிடிக்கப்படவேண்டிய இதற்கான சில தனிப்பட்ட விதிமுறைகள் உரிய இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன (காண். எண். 210-251).
தாய்மைமிகு நற்கருணைப் பேழை திருப்பீட முற்றத்தில் இருந்தால், அருள்பணியாளர், திருத்தொண்டர், ஏனைய பணியாளர்கள் பீடத்தை அணுகும்போதும் அதை விட்டுத் திரும்பிச் செல்லும்போதும் முழங்காலிட வேண்டும். திருப்பலியின்போது இது தேவையில்லை.
மற்றபடி எல்லாரும் தூய்மைமிகு நற்கருணைக்குமுன் கடந்து செல்லும்போது மங்காலிடுவர். பவனியாகச் செல்லும்போது இப்படிச் செய்தல் தேவையில்லை.
திருச்சிலுவையை அல்லது மெழுகுதிரிகளை ஏந்திச் செல்லும் பணியாளர்கள் முழங்காலிடுவதற்குப் பதிலாகத் தலை வணங்குவர்.
275. தலை வணங்குதல் ஆள்களுக்கும் அவர்களைக் அடையாளங்களுக்கும் செலுத்தப்படும் வணக்கத்தையும் மரியாதையையும் குறிக்கும். தங்க வணங்குதல் இரு வகைப்படும்: தலைதாழ்த்துதல், குனிதல்.
அ) மூன்று இறை ஆள்களின் பெயரை ஒன்றாய்ச் சொல்லும்பே” இயேசுவின் பெயர், புனித கன்னி மரியாவின் பெயர், எந்தப் புனிதரின் மாட்சி தாழ்த்தப்படும். திருப்பலி நடைபெறுகிறதோ அவருடைய பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடும்போதும் தலை தாழ்த்தப்படும்
==============↑ பக்கம் 70
ஆ) பீடத்துக்கு; “எல்லாம் வல்ல இறைவா, உமது நற்செய்தியைத் தகுதியுடன் நான் அறிவிக்குமாறு என் இதயத்தையும் உதடுகளையும் தூய்மைப்படுத்தியருளும் எனும் மன்றாட்டின்போதும் ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் ….” எனும் மன்றாட்டின்போதும் நம்பிக்கை அறிக்கையில், “தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்’ என அறிக்கையிடும்போதும் உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், “எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் . . . எனும் மன்றாட்டின்போதும் நற்செய்தி அறிக்கையிடும் முன்னர், திருத்தொண்டர் ஆசி கேட்கும்போதும் அருள்பணியாளர் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறும்போதும் குனிதல் அல்லது தாழ்ந்து பணிதல் இடம் பெறும்.
தூபம் காட்டுதல்
276. தூபம் காட்டுதல் அல்லது நறுமணப்புகை எழுப்புதல் திருநூலில் குறிப்பிட்டுள்ளப்படி (திபா 141:2; திவெ 8:3) மரியாதையையும் மன்றாட்டையும் உணர்த்தும்.
விருப்பத்துக்கு ஏற்ப, எவ்வகைத் திருப்பலியிலும் தூபம் பயன்படுத்தலாம்:
அ) வருகைப் பவனியின்போது; ஆ) திருப்பலியின் தொடக்கத்தில், திருச்சிலுவைக்கும் பீடத்துக்கும்;
இ) நற்செய்தி வாசக நூல் பவனியின்போதும் நற்செய்தி அறிக்கையின்போதும்;
ஈ) திரு அப்பமும் திருக்கிண்ணமும் பீடத்தில் வைக்கப்பட்ட பின்னர், காணிக்கைப் பொருள்களுக்கு, திருச்சிலுவைக்கு, பீடத்துக்கு, அருள்பணியாளருக்கு, மக்களுக்கு;
உ) அர்ச்சிப்புக்குப்பின் திரு அப்பத்தையும் திருக்கிண்ணத்தையும் காட்டும்போது.
377. அருள்பணியாளர் தூபக் கலத்தில் நறுமணப்பொருளை இட்டபின், ஒன்றும் சொல்லாமல் சிலுவை அடையாளம் வரைந்து அதற்கு ஆசி வழங்குவார்.
பீடத்துக்கும் திருப்பலிக் காணிக்கைகளுக்கும் தவிர, தூபம் காட்டும் முன்னரும் பின்னரும் தூபம் காட்டப்படும் ஆளுக்கும் பொருளுக்கும் தாழ்ந்து வணக்கம் செலுத்தப்படும்.
மூன்று வீச்சுத் தூபம் காட்டுதல் : தூய்மைமிகு நற்கருணை, திருச்சிலுவையின் திருப்பண்டம், மக்களின் பொது வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஆண்டவரின் திரு உருவங்கள், திருப்பலிக்கான காணிக்கைப் பொருள்கள், பீடச் சிலுவை, நற்செய்தி வாசக நூல், பாஸ்கா திரி, அருள்பணியாளர், மக்கள்.
இரு வீச்சுத் தூபம் காட்டுதல்: மக்களின் பொது வணக்கத்துக்கு வைக்கப்படும் புனிதர்களின் திருப்பண்டங்கள், திரு உருவங்கள் ஆகியவற்றுக்குக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தில் பீடத்துக்குத் தூபம் காட்டியபின் இது நடைபெற வேண்டும்.
பீடத்துக்குப் பின்வருமாறு ஒற்றை வீச்சுகளில் தூபம் காட்டப்படும்:
அ) பீடம் தனித்திருந்தால், அருள்பணியாளர் தூபம் காட்டிக்கொண்டே அதைச் சுற்றி வருவார்.
ஆ) பீடம் சுவரோடு பொருந்தி இருந்தால், அருள்பணியாளர் முதலில் பீடத்தின் வலப் புறமும் பின்னர் அதன் இடப் புறமும் சென்று தூபம் காட்டுவார்.
திருச்சிலுவை பீடத்தின் மீதோ அதன் அருகிலோ இருப்பின், பீடத்துக்குமுன் அதற்குத் தூபம் காட்டுவார். திருச்சிலுவை பீடத்துக்குப் பின்னால் இருப்பின், அருள்பணியாளர் அதன்முன் கடந்து செல்லும்போது அதற்குத் தூபம் காட்டுவார்.
==============↑ பக்கம் 71
அருள்பணியாளர் திருச்சிலு வைக்கும் பீடத்துக்கும் தூபம் காட்டி, பீடத்தின் மீதுள்ள காணிக்கைப் பொருள்களுக்கு மூன்று வீச்சுத் தூபம் காட்டுவார் – சிலுவை வடிவிலும் காணிக்கைப் பொருள்கள் மீது தூபம் காட்டுவார்.
தூய்மைப்படுத்துதல்
278. திரு அப்பத் துகள் ஏதும் விரல்களில் ஒட்டியிருந்தால், முக்கியமாக திரு அப்பத்தைப் பிட்ட பின்னும் நம்பிக்கையாளருக்கு நற்கருணை வழங்கிய பின்னும் அவ்வாறு இருந்தால், அருள்பணியாளர் திரு அப்பத் தட்டின் மீது விரல்களைத் தூய்மைப்படுத்தி அல்லது தேவையானால் அவற்றைக் கழுவுவார். அவ்வாறே திரு அப்பத் தட்டுக்கு வெளியில் விழுந்த துகள்களை ஒன்று சேர்ப்பார்.
379. திருவிருந்துக்குப் பிறகு அல்லது திருப்பலி முடிவில் அருள்பணியாளரோ திருத்தொண்டரோ அல்லது நியமனம் செய்யப்பட்ட பீடத்துணைவரோ திருக்கலங்களைத் தூய்மைப்படுத்துவார்; கூடுமானவரையில் இது திரு மேசையில் செய்யப்படும். திருக்கிண்ணம் தண்ணீரால் மட்டும் அல்லது இரசமும் தண்ணீரும் விட்டுக் கழுவப்படும். தூய்மைப்படுத்துபவர் பாராய் இருந்தாலும் அதை உட்கொள்வார். வழக்கப்படி திருக்கிண்ணத் துகிலால் திரு அப்பத் தட்டைத் தூய்மைப்படுத்துவார்.
அருள்பணியாளர் நற்கருணை வழங்கிய பின்னர் எஞ்சியுள்ள கிறிஸ்துவின் திரு இரத்தம் முழுவதும் உடனடியாகப் பீடத்திலேயே உட்கொள்ளப்படக் கவனமாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
280. திரு அப்பமோ திரு அப்பத் துகளோ கீழே விழ நேர்ந்தால், அதை வணக்கத்தோடு எடுக்க வேண்டும்; திரு இரத்தம் சிந்த நேர்ந்தால், சிந்திய இடத்தைத் தண்ணீரால் கழுவி, அத்தண்ணீரைத் திருப்பொருள் அறையில் உள்ள தூய தொட்டியில் ஊற்ற வேண்டும்.
இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்ளுதல்
281 இரு வடிவங்களிலும் தூய நற்கருணை உட்கொள்ளுவது அடையாள வகையில் மிக நிறைவான பொருள் கொண்டுள்ளது. ஏனெனில் அதில் நற்கருணை விருந்தின் அடையாளம் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது; இதனால் புதிய, நிலையான உடன்படிக்கை நம் ஆண்டவரின் திரு இரத்தத்தால் நிறைவு பெறுகின்றது எனும் அவருடைய திருவுளமும் அத்தோடு, நற்கருணைத் திருவிருந்துக்கும் தந்தையின் ஆட்சியில் நிறைவுகால விருந்துக்கும் இடையே உள்ள தொடர்பும் இன்னும் தெளிவாகக் காட்டப்படுகின்றன.195
282 இச்சடங்கில் பங்கெடுக்கும் அல்லது உடனிருக்கும் நம்பிக்கையாளருக்குத் திருவிருந்து வகை பற்றித் திரெந்துப் பொதுச் சங்கம் தந்துள்ள கத்தோலிக்கப் படிப்பினையை அருள் நெறியாளர்கள் நினைவுபடுத்த வேண்டும். முதன்முதலாக, கத்தோலிக்க நம்பிக்கைப் படிப்பினைப்படி, ஒரு வடிவத்தில் மட்டும் நற்கருணை உட்கொண்டாலும் நம்பிக்கையாளர் முழுக் கிறிஸ்துவையும் உண்மையான அருளடையாளத்தையும் பெறுகின்றார்கள் என்பதையும் ஒரு வடிவத்தில் மட்டும் நற்கருணை உட்கொள்வதால் மீட்புக்குத் தேவையான எந்த அருள்கொடையையும் இழந்திடுவதில்லை என்பதையும் அருள்நெறியாளர்கள் நினைவுபடுத்த வேண்டும். 108
105 காண் திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 32: A.A.S. 39 (9) பக். 558
106 காண். திரெந்து சங். அமர்வு XX, Deer. de communione eucleistica, 16, 07.1562, capp. 1-3:DS 1725-1729.
==============↑ பக்கம் 72
மேலும் அருளடையாளங்களின் உட்பொருளுக்குக் குறைவு ஏற்படாத வகையில், பல்வேறு சூழ்நிலை, காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு அருளடையாளங்களின் வணக்கத்துக்கும் அவற்றைப் பெற்றுக்கொள்வோரின் தேவைகளுக்கும் எவை சாதகமானவை என மதிப்பிட்டு முடிவு செய்யவோ மாற்றம் செய்யவோ திரு அவைக்கு அதிகாரம் உண்டு என்பதையும் அருள்நெறியாளர்கள் கற்பிப்பார்களாக.107 அதே நேரத்தில், திருவிருந்தின் அடையாளத்தன்மை முழுமையாக வெளிப்படும் இத்திருச்சடங்கில் நம்பிக்கையாளர் ஆவலுடன் பங்குகொள்ள அருள்நெறியாளர்கள் அறிவுரை கூறுவார்களாக.
283. திருச்சடங்கு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் பின்வருபவர்களும் இரு வடிவங்களிலும் நற்கருணை உட்கொள்ளலாம்.
அ) தனியாக அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்ற இயலாத அருள்பணியாளர்கள்; ஆ) திருப்பலியில் சில பணிகளை நிறைவேற்றும் திருத்தொண்டரும் பிறரும்;
இ) துறவு இல்லத் திருப்பலியில் பங்கேற்கும் இல்லத்து உறுப்பினர், குழுமத் திருப்பலியில் பங்கேற்போர், அருள்பணி மாணவர்கள், ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், ஆன்மீக அல்லது அருள்பணிக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள்.
இரு வடிவங்களில் நற்கருணை உட்கொள்வதற்கான விதிமுறைகளை மறைமாவட்ட ஆயர் தமது மறைமாவட்டத்துக்கு என்று வரையறுக்கலாம். இவை துறவறத்தாரின் கோவில்களிலும் குழுமத் திருப்பலிகளிலும் கடைப்பிடிக்கப்படவேண்டும். அருள்பணியாளர் ஒரு குழுமத்துக்கு அருள் நெறியாளராக ஏற்படுத்தப்பட்டிருக்கும்போது, இரு வடிவங்களில் நற்கருணை வழங்குவது பொருத்தமானது எனக் கருதினால் அதற்கான அனுமதியை அவருக்கு வழங்க மறைமாவட்ட ஆயருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் நம்பிக்கையாளர் இது பற்றி நன்கு அறிவுறுத்தப்படவேண்டும். அருளடையாளத்துக்கு ஏற்படக்கூடிய எவ்வித அவமதிப்புக்கான ஆபத்தோ பங்கேற்போரின் மிகுதியான எண்ணிக்கையின் காரணமாக இச்சடங்கை நிறைவேற்றக் கடினமாகும் சூழ்நிலையோ வேறு எந்தக் காரணமோ இருத்தலாகாது.
எனினும் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலைப் பெற்று, ஆயர் பேரவை நம்பிக்கையாளருக்கு இரு வடிவங்களில் நற்கருணை வழங்கப்படும் முறைகளுக்கான விதிமுறைகளையும் அவ்வாறு செய்வதற்கான அதிகார நீட்டிப்பைக் குறித்தும் நிர்ணயிக்கலாம்.
284. நற்கருணை இரு வடிவங்களில் வழங்கப்படும்போது:
அ) திருக்கிண்ணத்தை வழக்கமாகத் திருத்தொண்டர் வழங்குவார். அவர் இல்லாதபோது ஒர் அருள்பணியாளர் அதை வழங்குவார்; அல்லது முறையாக நியமனம் செய்யப்பட்ட பீடத்துணைவரும் நற்கருணை வழங்குவதற்கு என நியமிக்கப்பட்ட சிறப்புரிமைத் திருப்பணியாளர் ஒருவரும் இப்பணியைச் செய்யலாம்; தேவைப்படின், நம்பிக்கையாளருள் ஒருவரிடம் அந்த ஒரு வேளையில் மட்டும் இப்பணியை ஒப்படைக்கலாம்.
ஆ) எஞ்சியுள்ள கிறிஸ்துவின் திரு இரத்தத்தை ஓர் அருள்பணியாளரோ, திருக் தொண்டரோ, திருக்கிண்ணத்தைப் பகிர்ந்தளிக்க முறையாக நியமனம் செய்யப்பட்ட பீடத்துணைவரோ பீடத்தில் உட்கொள்வார். இவரே வழக்கம் போலத் திருக்கலங்களைத் தூய்மைப்படுத்தி, துடைத்து அவற்றை ஒழுங்காக வைப்பார்.
தூய நற்கருணையை திரு அப்ப வடிவில் மட்டும் உட்கொள்ள விரும்பும் நம்பிக்கையாளர் எவருக்கும் அவ்வடிவில் வழங்கப்படல் வேண்டும்.
107 காண். மேற்படி, cap. 2: DS 1728.
==============↑ பக்கம் 73
285. இரு வடிவங்களில் நற்கருணை வழங்குவதற்குக் கீழ்க்கண்டவை தயார் செய்ய வேண்டும்:
அ) நற்கருணை உட்கொள்பவருக்குத் திருக்கிண்ணத்திலிருந்து நேரடியாக உட்கொள்ள வழங்கப்பட்டால், போது மான அளவில் பெரிய திருக்கிண்ணமோ பா திருக்கிண்ணங்களோ தயார் செய்யப்பட வேண்டும். திருக்கொண்டாட்டத்தின் இறுதியில் கிறிஸ்துவின் திரு இரத்தம் அதிக அளவில் எஞ்சியிருந்து அதனைப் பருகும் நிலை ஏற்படாதவாறு எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆ) திரு அப்பத்தை திரு இரத்தத்தில் தோய்த்துக் கொடுத்தால், திரு அப்பங்கள் மெல்லியனவாகவோ சிறியனவாகவோ இருத்தலாகாது. சாதாரண அப்பத்தைவிட சிறிது திண்மையாக இருத்தல் வேண்டும். இதனால் திரு அப்பத்தின் ஒரு பகுதியைக் கிறிஸ்துவின் திரு இரத்தத்தில் தோய்த்து நற்கருணையை எளிதாக வழங்க இயலும்.
286. திருக்கிண்ணத்திலிருந்து திரு இரத்தத்தை உட்கொள்ளக் கொடுத்தால் நற்கருணை உட்கொள்வோர் கிறிஸ்துவின் திரு உடலைப் பெற்றுக்கொண்டபின் திருக்கிண்ணம் வைத்திருக்கும் பணியாளர் முன் சென்று நிற்பார். அப்பணியாளர், “கிறிஸ்துவின் திரு இரத்தம்’ எனச் சொல்ல, அதை உட்கொள்பவர் “ஆமென்” எனப் பதில் சொல்வார். பணியாளர் திருக்கிண்ணத்தை அவரிடம் கொடுக்க, அதை உட்கொள்பவர் அதனைக் கைகளில் வாங்கித் திருக்கிண்ணத்திலிருந்து சிறிது உட்கொண்டபின் அதனைப் பணியாளரிடம் கொடுத்துவிட்டுத் திரும்புவார்; பணியாளர் திருக்கிண்ணத்தின் விளிம்பைத் திருக்கிண்ணத் துகிலால் துடைப்பார்.
287. திருக்கிண்ணத்தில் தோய்த்து நற்கருணை வழங்கப்பட்டால், நற்கருணை உட்கொள்பவர் நற்கருணைத் தட்டைத் தம் வாய் அருகே பிடித்துக்கொண்டு அருள்பணியாளரை அணுகுவார். அருள்பணியாளர் நற்கருணைக் கலத்தைப் பிடித்து நிற்க, பணியாளர் ஒருவர் அவரது வலப் பக்கம் திருக்கிண்ணத்தைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அருள்பணியாளர் திரு அப்பத்தை எடுத்து, அதனைத் திருக்கிண்ணத்தில் சிறிது தோய்த்து, அதனைக் காட்டிக் “கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும்” எனச் சொல்வார். நற்கருணை உட்கொள்பவர், “ஆமென்” எனப் பதில் சொல்லி அருள்பணியாளரிடமிருந்து தமது வாயில் அதைப் பெற்று, பின்னர் இடம்பெயர்வார்.
==============↑ பக்கம் 74

இயல் 5
நற்கருணைக் கொண்டாட்டத்துக்கு ஏற்பக் கோவிலை அமைத்தலும் அணிசெய்தலும்
நற்கருணைக் கொண்டாட்டத்துக்கு ஏற்பக் கோவிலை அமைத்தலும் அணிசெய்தலும்
I. பொது விதிகள்
288. நற்கருணைக் கொண்டாட்டத்துக்காக இறைமக்கள் பொதுவாகக் கோவிலில் கூடுவார்கள்; கோவில் இல்லாதபோது அல்லது அது மிகச் சிறியதாக இருக்கும்போது, மாண்புமிகுந்த இம்மறைநிகழ்ச்சிக்குத் தகுதியான வேறொரு மதிப்புக்கு உரிய இடத்தில் கூடுவார்கள். எனவே கோவில்களோ மற்ற இடங்களோ திருப்பலி நிறைவேற்றுவதற்கும் நம்பிக்கையாளர் செயல்முறையில் பங்கெடுப்பதற்கும் ஏற்றவையாய் இருத்தல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, திருக்கட்டடங்களும் திருவழிபாட்டுக்கான பொருள்களும் தகுதியும் அழகும்கொண்டு விண்ணைச் சார்ந்தவற்றைக் குறிக்கும் அடையாளங்களாகத் திகழ வேண்டும்.108
289. எனவே திரு அவை கலைகளின் சிறந்த துணையை எப்போதும் தேடியுள்ளது. எல்லா மக்கள் இனங்களுடையவும் நிலப்பகுதியினுடையவும் கலைகளுக்குத் திரு அவை முக்கியத்துவம் அளித்திருக்கின்றது.109 மேலும் பண்டைக் காலத்துக் கலைப் படைப்புகளையும் கலைச் செல்வங்களையும் கவனமாய்ப் பாதுகாத்து, 110 அவசியமானால் புதிய தேவைகளை நிறைவு செய்ய அவற்றைப் பயன்படுத்தவும் அந்தந்தக் காலத்தின் போக்குக்குப் பொருத்தமான புதிய கலைப் படைப்புகளை ஊக்குவித்து வளர்க்கவும் அது முயலுகின்றது.”111
ஆகவே, கோவில் பயன்பாட்டிற்காகப் பொருள்களை உருவாக்கக் கலைஞர்களை அமர்த்தும்போது அல்லது பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது உண்மையான கலைச் சிறப்பைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்; அது நம்பிக்கை, இறைப்பற்று ஆகியவற்றை வளர்க்கவும் அதன் அடையாளத்தின் உண்மைத்தன்மையை விளக்கவும் அதற்கு உரிய அலுவலுக்கு ஏற்றதாகவும் அமைந்திருக்க வேண்டும்.113
290. எல்லாக் கோவில்களையும் நேர்ந்தளிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் புனிதப்படுத்த வேண்டும். தலைமைக் கோவில்களையும் பங்குக் கோவில்களையும் சிறப்புச் சடங்குகளினால் நேர்ந்தளிக்க வேண்டும்.
291. கோவில்களை முறையாகக் கட்டுவதிலும் மாற்றியமைப்பதிலும் சீரமைப்பதிலும் ஈடுபடுவோர் அனைவரும் மறைமாவட்டத் திருவழிபாட்டு மற்றும் திருக்கலைப் பணிக்குழுவைக் கலந்து ஆலோசிப்பார்களாக. இதற்கு ஏற்ற விதிமுறை வகுப்பதில் அல்லது புதிய கோவில்களுக்கான வரைபடங்களுக்கு அனுமதி அளிப்பதில் அல்லது இவ்வகையான முக்கிய செயல்பாடுகளை முடிவு செய்வதில் மறைமாவட்ட ஆயர் மேற்குறிப்பிட்ட குழுவின் கருத்துகளையும் உதவியையும் பயன்படுத்த வேண்டும். 113
108 காண். திருவழிபாடு, 122-124; திருப்பணியாளர், 5; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 90: A.A.S. 56 (1964) பக். 897; மேற்ப டி, Eucharisticum mysterium, 25.05.1967, எண். 24: A.A.S. 59 (1967) பக். 554; திச 93281.
109 காண். திருவழிபாடு, 123.
110 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum mysterium, 26.09.1967, எண் 24: A.A.S. 59 (1967) பக். 554.
111 காண். திருவழிபாடு, 123, 129; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 13e: A.A.S. 56 (1964) பக். 880.
112 காண். திருவழிபாடு, 123.
113 காண். திருவழிபாடு, 126; திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 91: A.A.S. 56 (1964) பக். 898.
==============↑ பக்கம் 75
393. கோவிலை அணிசெய்தல் பகட்டுக்காக அன்றி அதன் மாண்புமிகு எளி உணர்த்துவதாய் இருக்க வேண்டும். அழகு செய்வதற்காகப் பொருள்களைத் .ெ செய்யும்போது அவற்றின் மெய்ம்மையும் நம்பகத்தன்மையும் கவனத்தில் கொள்ள, வேண்டும். அவை மக்களுக்குப் படிப்பினையாகவும் புனித இடத்தின் பெருமையை உணர்த்தும் வகையிலும் அமைந்திட வேண்டும்.
293. கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் சரியான விதத்தில் ஒழுங்குபடுத்தும்போது தற்காலத் தேவைகளைத் தகுந்த விதமாக நிறைவு செய்யும்படி கவனமுடன் செயல்பட வேண்டும். திருநிகழ்ச்சிகளின் கொண்டாட்டத்துக்கு மிகுந்த தொடர்புடைய கூறுகளைக் கவனிப்பதோடு மட்டும் அல்லாமல் வழக்கமாக மக்கள் கூடும் இடங்களில் எழும் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது போலவே நம்பிக்கையாளர் கூடிவரும்போது செய்ய வேண்டும்.
294 திருப்பலிக்காகக் கூடியிருக்கும் இறைமக்கள், கொண்டாட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்பக் குறிக்கப்பட்டுள்ள வெவ்வேறு பணியாளர்களையும் பல்வகைச் செயல்களையும் உணர்த்தும் ஒருங்கிணைந்த படி நிலை அமைப்புமுறையைக் கொண்டுள்ளனர். திருக்கோவிலின் பொதுவான அமைப்பு, கூடியிருக்கும் திருக்கூட்டத்தின் சாயலை ஒருவகையில் பிரதிபலிக்கும்படியாக இருக்க வேண்டும். கொண்டாட்டத்தில் பங்கேற்போர் அனைவரையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதாகவும் ஒவ்வொருவரும் தத்தம் பணியைச் செவ்வனே செய்யத் துணைபுரிவதாகவும் இருக்க வேண்டும்.
நம்பிக்கையாளருக்கும் பாடகர் குழுவினருக்கும் ஒதுக்கப்படும் இடம் அவர்களின் ) செயல்முறைப் பங்கேற்புக்கு உதவிடும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.114
திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர், திருத்தொண்டர், பிற பணியாளர் ஆகியோருக்கான இருக்கைகள் திருப்பீட முற்றத்தில் இருக்கும். கூட்டுத்திருப்பலியாளருக்கும் அங்கே இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருக்கும். இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோவிலின் வேறொரு பகுதியில், பீடத்துக்கு அருகில் இருக்கைகள் போடப்படும்.
இவையெல்லாம் படி நிலை அமைப்பு முறையையும் பணிகளின் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்றாலும் இவை தமக்குள் நெருங்கிய, இணைந்த ஒன்றிப்பை உருவாக்குகின்றன. இதுவே இறைமக்கள் அனைவரின் ஒன்றிப்பைத் தெளிவாகக் காட்டுகின்றது. அந்த இடத்தின் இயல்பும் அழகும் அங்குள்ள பொருள்களும் இறைப்பற்றைத் தூண்டி வளர்ப்பவையாகவும் கொண்டாடப்படும் மறைநிகழ்வுகளின் புனிதத்தை வெளிப்படையாகக் காட்டுபவையாகவும் அமைதல் வேண்டும்.
II. திருக்கூட்டத்துக்காகத் திருப்பீட முற்றத்தை அமைத்தல்
295. திருப்பீட முற்றத்தில் பீடம் அமைந்திருக்கும்; அங்கேதான் கடவுளின் வார்த்தை அறிவிக்கப்படுகின்றது. அருள்பணியாளர், திருத்தொண்டர், மற்ற பணியாளர்கள் அனைவரும் தத்தம் பணியை நிறைவேற்றுவர். அது கோவிலில் மக்கள் அமரும் இடத்தை விடச் சிறிது உயர்ந்து அல்லது தனிப்பட்ட வடிவமைப்புடன் அழகு செய்யப்பட்டு வேறுபட்டிருக்கும். நற்கருணைக் கொண்டாட்டம் வசதியாக நடைபெறுவதற்கும் மா” பார்ப்பதற்கும் ஏதுவாகப் பெரிதாக அமைந்திருக்கலாம்.”115
114 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Interecumenici, 26.09.1964, எண். 97-98: A.A.S. 56 எண், 97-98: A.A.S. 56 (1964) பக். 899.
115 காண். மேற்படி, எண் 91: A.A.S. 56 (1964) பக். 898.
==============↑ பக்கம் 76
பீடமும் அதை அணிசெய்தலும்
996. பீடத்தின் மீது அடையாள முறையில் சிலுவைப்பலி நிறைவேற்றப்படுகின்றது; பீடம் ஆண்டவரின் திருவிருந்து மேசையும் ஆகும். திருப்பலியில் பங்கேற்க இறைமக்கள் இந்த மேசையைச் சுற்றி ஒன்றுகூட்டப்படுகிறார்கள்; மேலும் நற்கருணை வழியாக நிகழும் நன்றியறிதலின் மையமாகவும் அது அமைகின்றது. 297. புனித இடத்தில் பீடத்தின் மீது திருப்பலி நடைபெறும்; பிற இடங்களில், தக்கதொரு மேசையைப் பீடமாகப் பயன்படுத்தலாம்; ஆனால் எப்போதும் பீடத் துகிலும் திருமேனித் துகிலும் சிலுவையும் மெழுகுதிரிகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.
298. ஒவ்வொரு கோவிலிலும் அசையாப் பீடம் இருப்பது நல்லது. ஏனெனில் அது உயிருள்ள கல்லாகிய (1 பேது 2:4; காண். எபே 2:20) இயேசு கிறிஸ்துவை மிகத் தெளிவாகவும் நிரந்தரமாகவும் குறிக்கின்றது. திருக்கொண்டாட்டங்கள் நிறைவேற்றப்படும் பிற இடங்களில் அசையும் பீடம் இருக்கலாம்.
பீடம் நகர்த்த முடியாதபடி தளத்தோடு பொருத்தப்பட்டிருந்தால் அசையாப் பீடம் என்றும், நகர்த்தக்கூடியதானால் அசையும் பீடம் என்றும் சொல்லப்படும்.
399. எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் பீடத்தைச் சுற்றிவரவும் மக்களைப் பார்த்துத் திருப்பலி நிறைவேற்றவும் பீடம் சுவரோடு பொருத்தப்படாமல் தனித்து இருக்குமாறு அமைவது விரும்பத்தக்கது. நம்பிக்கையாளர் திருக்கூட்டத்தின் கவனத்தை இயல்பாக ஈர்த்திடும் வண்ணம் பீடம் மையமான இடத்தில் அமைய வேண்டும். 116 பீடம் வழக்கமாக அசையாததும் நேர்ந்தளிக்கப்பெற்றதாயும் இருக்கும்.
300. அசையாப் பீடமோ அசையும் பீடமோ உரோமைச் சடங்கு நூலில் கண்டுள்ளபடி நேர்ந்தளிக்கப்பெறும். எனினும் அசையும் பீடத்தைப் புனிதப்படுத்தினால் போதும்.
301. திரு அவையின் மரபுப்படியும் பீடத்துக்கு உரிய உட்பொருள் விளங்கவும் அசையாப் பீடத்தின் மேசை, கல்லால் – அதுவும் இயற்கைக் கல்லால் – ஆனதாக இருக்க வேண்டும். எனினும் ஆயர் பேரவையின் முடிவின்படி தகுதி வாய்ந்த, திண்ணிய, கைவேலைப்பாடு உள்ள வேறு பொருள்களையும் பீட மேசை உருவாக்கப் பயன்படுத்தலாம். பீடத் தூண்களும் அதன் ஆதாரங்களும் தகுதியும் உறுதியும் உள்ள எவ்வகைப் பொருளாலும் அமைக்கப்படலாம்.
அசையும் பீடத்தை அமைப்பதற்கு, அந்தந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதி மரபுகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப, வழிபாட்டு உபயோகத்துக்குச் சிறப்பும் உறுதியும் வாய்ந்த எந்தப் பொருளையும் பயன்படுத்தலாம்.
302. புனிதர்களின் திருப்பண்டங்களை, நேர்ந்தளிக்கப்பெறும் பீடத்துக்கு அடியில் வைக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெறும்; அப்பண்டங்கள் மறைச்சாட்சியருடையனவாய் இல்லாவிட்டாலும்கூட அவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். உண்மையாகவே புனிதர்களுடையனவாய் இருப்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.
303. புதிய கோவில்களைக் கட்டும்போது ஒரு பீடம் மட்டும் அமைப்பது சிறந்தது. ஏனெனில் அது நம்பிக்கையாளர் திருக்கூட்டத்தில் ஒரே கிறிஸ்துவையும் திரு அவையின் ஒரே நற்கருணையையும் உணர்த்தும்.
ஏற்கெனவே கட்டப்பட்ட கோவில்களில் பழைய பீடத்தின் அமைப்பு மக்களின் பங்கேற்புக்குக் கடினமாக இருந்தால், அதே சமயத்தில் அதன் கலை நயம் எந்தச் சேதமும் இல்லாமல் அதை மாற்றி அமைக்க முடியாத நிலையில் இருந்தால் கலை அழகுடனும் முறையாக நேர்ந்தளிக்கப்பட்டதுமான வேறொரு அசையாப் பீடம் எழுப்பப்பட வேண்டும்; அதன்மீது மட்டுமே திருச்சடங்குகள் நிறைவேற்றப்பட வேண்டும். புதிய பீடத்தின் மீதுள்ள கவனம் பிறழ்ந்து போகா வண்ணம் பழைய பீடத்தைச் சிறப்பான முறையில் அணிசெய்யக் கூடாது.
116 காண். மேற்படி.
==============↑ பக்கம் 77
304. ஆண்டவருடைய நினைவுக்கொண்டாட்டத்தின் மீதும் அவருடைய திரு உட… இரத்தமும் வழங்கப்படும் திருவிருந்தின் மீதும் இருக்க வேண்டிய இறைப்பட முன்னிட்டு, பீடத்தின்மேல் வெண்ணிறத்தில் ஒரு பீடத் துகிலாவது விரிக்க வேம் அதன் அளவும் தோற்றமும் ஒப்பனையும் பீட அமைப்புக்கு ஏற்றதாயும் இருக்க வேண்டும்
305. பீடத்தை அணிசெய்வது மிதமான அளவோடு இருக்க வேண்டும்.
திருவருகைக் காலத்தில் அக்காலத்தின் தன்மைக்கு ஏற்ப, பீடத்தை மிதமான அளவில் மலர்களால் அணிசெய்தல் வேண்டும். அது ஆண்டவருடைய பிறப்பின் நிறை மகிழ்வை முன்னறிவிப்பதாய் அமைதல் கூடாது. தவக் காலத்தில் பீடத்தை மலர்களால் அணிசெய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. “அகமகிழ்” ஞாயிற்றுக்கிழமை (தவக் கால 4-ஆம் ஞாயிறு), பெருவிழா, விழா நாள்கள் இதற்கு விதிவிலக்கு ஆகும்.
மலர்களால் அணிசெய்வது எப்பொழுதும் அளவுக்கு மிகாமல் இருத்தல் நல்லது. மலர்கள் பீட மேசையின் மீது வைக்கப்படுவதைவிட பீடத்தைச் சுற்றி வைக்கப்பட வேண்டும்.
306. பீடத்தின்மீது திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவைப்படுபவற்றை மட்டும் வைக்கலாம். அவையாவன: கொண்டாட்டத்தின் தொடக்கமுதல் நற்செய்தி அறிவிப்புவரை நற்செய்தி வாசக நூல், காணிக்கைப் பொருள்களை ஒப்புக்கொடுத்தல் முதல் திருக்கலங்களைத் தூய்மைப் படுத்தும்வரை திருக்கிண்ணமும் திரு அப்பத் தட்டும், தேவைப்படின் நற்கருணைக் கலம், திருமேனித் துகில், திருக்கிண்ணத் துகில், திருக்கிண்ண அட்டை, திருப்பலி நூல் ஆகியவை.
அருள்பணியாளரின் குரலைப் பெருக்கிக் கொடுப்பதற்காக ஒலிவாங்கிகள் ஏற்ற வகையில் அமைக்கப்படும்.
307. திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றின்போதும் வணக்கத்துக்கும் விழாச் சிறப்பின் தரத்துக்கும் அடையாளமாக அமையும் மெழுகுதிரித் தண்டுகள் தேவைப்படுகின்றன (காண். எண் 117). பீடம், திருப்பீட முற்றம் ஆகியவற்றின் அமைப்புக்குப் பொருத்தமாக இத்தண்டுகள் பீடத்தின் மீதோ பீடத்தைச் சுற்றியோ வைக்கப்படும்; ஆனால் நம்பிக்கையாளர் பீடத்தின் மீது இருப்பனவற்றையும் நிகழ்வனவற்றையும் எளிதில் பார்ப்பதற்குத் தடை ஏற்படாதவாறு இத்தண்டுகள் வைக்கப்பட வேண்டும். 308. அவ்வாறே திருக்கூட்டம் எளிதில் காணுமாறு கிறிஸ்துவின் உருவம் தாங்கிய திருச்சிலுவை பீடத்தின் மீதோ அதன் அருகிலோ இடம்பெறும்.
ஆண்டவருடைய மீட்பளிக்கும் பாடுகளை நம்பிக்கையாளருக்கு நினைவூட்டும் வண்ணம் இச்சிலுவை திருவழிபாட்டுச் சடங்குகளுக்குப் புறம்பேயும் பீடத்தின் அருகில் இருக்கும்.
வாசக மேடை
309 இறைவார்த்தையின் மாண்புக்கு ஏற்ப கோவிலில் இறைவார்த்தை அறிவிக்கப்பட ஒரு பொருத்தமான இடம் அமைய வேண்டும். வார்த்தை வழிபாட்டின்போது வேண்டும்.117 நம்பிக்கையாளரின் கவனத்தை இயல்பாகவே ஈர்க்கும் வண்ணம் வாசக மேடை அமைய வேண்டும்.
இறைவார்த்தை அறிவிக்கும் இடம் வழக்கமாக நிலையான வாசக மேடையாக இருக்க வேண்டும். அது இடம் பெயரக்கூடிய புத்தகத் தாங்கி மட்டும் அல்ல. அந்தந்தக் கோவிலில் அமைப்புக்கு ஏற்ப இம்மேடை தகுந்த இடத்தில் அமைய வேண்டும். இதன் பார்க்கவும் கேட்கவும் முடியும். நம்பிக்கையாளர் வாசகரையும் திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளரையும் எளிதாகப் பார்க்கவும் கேட்கவும் முடியும்.
117 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Interecumenici, 26.09.1964, எண். 97-98: A.A.S. 56 எண், 97-98: A.A.S. 56 (1964) பக். 898.
==============↑ பக்கம் 78
வாசக மேடையிலிருந்து மட்டும் வாசகங்களும் பதிலுரைத் திருப்பாடலும் பாஸ்கா அறிக்கையும் அறிவிக்கப்படும். இங்கிருந்தே மறையுரை வழங்கப்படும். பொது மன்றாட்டின் கருத்துகள் அறிவிக்கப்படும். வாசகப்பணியாளர் மட்டும் வாசக மேடையில் ஏறுவது அதன் மாண்பை நிலைநிறுத்துவது ஆகும்.
புதிய வாசக மேடையைத் திருவழிபாட்டில் பயன்படுத்தும் முன் உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் ஏற்புடையது ஆகும்.
திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்கான இருக்கையும் மற்ற இருக்கைகளும்
310. திருக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி மன்றாட்டை வழிநடத்தும் பணியைத் திருப்பல் நிகழ்த்தும் அருள்பணியாளருடைய இருக்கை உணர்த்த வேண்டும். எனவே அருள்பணி யாளருக்கும் திருக்கூட்டத்துக்கும் இடையே உள்ள தொடர்புக்கு இடையூறாக உள்ள அதிக தூரம், பீடத்துக்குப் பின்னால் நற்கருணைப் பேழை நடுவில் இடம் பெறுதல் போன்ற அக்கட்டடத்தின் உருவ அமைப்போ மற்ற வடிவங்களோ இடையூறாக இல்லாதிருந்தால், மக்களைப் பார்த்த வண்ணம் திருப்பீட முற்றத்தின் மேல் பகுதியே அத்தகைய இருக்கைக்கு உரிய பொருத்தமான இடம் ஆகும். எவ்வாறாயினும் பகட்டான அரியணைக்கு உரிய எந்தத் தோற்றமும் இருக்கக் கூடாது.119 திருவழிபாட்டின் பயன்பாட்டுக்கு வரும்முன், அந்த இருக்கையை உரோமைத் திருச்சடங்கு நூலில் கொடுக்கப்பட்டுள்ள சடங்கின்படி புனிதப்படுத்துதல் சரியானது.120
அதே போன்று திருப்பீட முற்றத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர்களுக்கும் கூட்டுத்திருப்பலியில் கலந்து கொள்ளாமல் அங்கே பாடல் குழுவினர் உடை அணிந்திருக்கும் பிற அருள்பணியாளர்களுக்கும் இருக்கைகள் போடப்படும்.
திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளருக்கு அருகில் திருத்தொண்டருக்கு இருக்கை வைக்கப்பட்டிருக்கும். பிற பணியாளர்களின் இருக்கைகள் திருநிலையினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையிலும் தங்களுக்கு உரிய பணியை எளிதில் செய்யும் வகையிலும் பிரித்துப் போடப்பட்டிருக்கும்.131
III. கோவிலின் ஒழுங்கமைவு
நம்பிக்கையாளருக்கு உரிய இடங்கள்
311. நம்பிக்கையாளர் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை நன்கு கண்டு, உணர்ந்து பங்கேற்பதற்கு ஏற்றவாறு, உரிய கவனத்துடன் அவர்களுக்கு இடங்கள் அமைக்க வேண்டும். வழக்கம் போல அவர்கள் பயன்பாட்டுக்கு மரத்தினாலான நீள் இருக்கைகள் அல்லது நாற்காலிகளை அமைப்பது விரும்பத்தக்கது. ஆனால் தனிப்பட்ட ஆள்களுக்கென்று இருக்கைகளை ஒதுக்கி வைக்கும் வழக்கம் கண்டனத்துக்கு உரியது ஆகும்.132 நம்பிக்கையாளர் வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்ற உடலின் நிலைகளை எளிதில் மேற்கொள்ளவும் திருவிருந்துக்கு வசதியாகச் சென்று வரவும் தக்கவாறு அவற்றைக் குறிப்பாக புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் அமைக்க வேண்டும்.
நம்பிக்கையாளர் அருள்பணியாளர்களையும் திருத்தொண்டரையும் வாசகர்களையும் கண்டால் மட்டும் போதாது; அவர்கள் சொல்வதையும் எளிதாகக் கேட்க வேண்டும். இதற்குத் தேவையானால் நவீன தொழில் நுட்பக் கருவிகளையும் பயன்படுத்தலாம்.
118 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 900-918.
119 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 92: A.A.S. 56 (1964) பக். 898.
120 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 880-899
121 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Inter 0ecumenici, 26.09.1964, எண் 92: A.A.S. 56 (1964) பக். 898.
122 காண். திருவழிபாடு, 32.
==============↑ பக்கம் 79
பாடகர் குழு, இசைக் கருவிகளுக்கு உரிய இடம்
313. அந்தந்தக் கோவிலின் அமைப்புக்கு ஏற்ப, பாடகர் குழு தன் இயல்பை வெளிப்பா: வகையில் கோவிலில் இடம் பெற வேண்டும்; இதனால் அது கூடியுள்ள நம்பிக்கை குழுமத்தின் ஒரு பகுதி என்பதும் அது ஒரு தனிப்பட்ட பணியை ஆற்றுகின்றது என்பது விளங்கும். மேலும் கோவிலில் பாடகர் குழுவுக்கு அளிக்கப்பட்ட இடம் அக்குழு . வழிபாட்டுப் பணியை எளிதாக ஆற்றுவதற்கும் அக்குழுவினர் ஒவ்வொருவரும் திருப்பலியில் அருளடையாள முறையில் முழுமையாகப் பங்கெடுப்பதற்கும் ஏதுவாக இருக்க் வேண்டும்.
313. இசைப் பெட்டியும் அனுமதிக்கப்பெற்ற பிற இசைக் கருவிகளும் பாடகர் குழுவினருக்கும் பாடுகின்ற திருக்கூட்டத்தினருக்கும் துணைபுரியப் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு இவற்றைத் தனித்து இயக்கும்போது அனைவரும் எளிதில் கேட்கலாம். திருவழிபாட்டில் பயன்படுத்துவதற்குமுன் இசைப் பெட்டியை உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் நல்லது.
திருவருகைக் காலத்தில், அதன் தன்மைக்கு ஏற்றவாறு, இசைப் பெட்டியையும் பிற இசைக் கருவிகளையும் மிதமாக, ஆண்டவருடைய பிறப்பின் நிறை மகிழ்வை முன்னறிவிக்காத அளவில் மீட்டுதல் வேண்டும்.
தவக் காலத்தில் இசைப் பெட்டியும் பிற இசைக் கருவிகளும் பாடுவதற்கு மட்டுமே உதவியாக வாசிக்கப்படும். “அகமகிழ்” ஞாயிற்றுக்கிழமை (தவக்கால 4-ஆம் ஞாயிறு), பெருவிழா, விழா நாள்கள் இதற்கு விதிவிலக்கு ஆகும்.
தூய்மைமிகு நற்கருணையைப் பாதுகாக்கும் இடம்
314 ஒவ்வொரு கோவிலின் அமைப்புக்கும் அவ்விடத்து முறையான மரபுகளுக்கும் ஏற்ற வகையில் கோவிலின் ஒரு பகுதியில் திருப்பேழை ஒன்றில் தூய்மைமிகு நற்கருணை பாதுகாக்கப்படும். அது மேன்மைமிக்கதும் எடுப்பான தோற்றமுடையதும் தெளிவாகக் காணக்கூடியதும் தகுந்த இடத்தில் அணிசெய்யப்பட்டதும் இறைவேண்டல் செய்வதற்கு ஏற்றது மாக இருக்கும்.’ 15
கோவிலில் வழக்கமாக ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே இருக்கும். அது அசைக்க முடியாதவாறு அமைக்கப்பட்டிருக்கும். அது உறுதியான, உடைக்க முடியாத, ஒளி ஊடுருவாத பொருளால் ஆனதாக இருக்க வேண்டும். அது இறை நிந்தனை எனும் ஆபத்தைத் தவிர்க்கும் வண்ணம் மிகுந்த பாதுகாப்புடன் பூட்டி வைக்கப்படும்.126 அத்தோடு விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் நல்லது.127 அதைத் திருவழிபாட்டில் பயன்படுத்தும் முன் உரோமைத் திருச்சடங்கு நூலில்
315. தூய்மைமிகு நற்கருணை பாதுகாக்கப்பட்டிருக்கும் திருப்பேழை மிகப் வைக்கப்படுவது ஏற்றது அல்ல.128 பொருத்தமான ஓர் அடையாளம் என்ற வகையில் திருப்பலி நிறைவேற்றப்படும் பீடத்தில்
123 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Musican Sacram, எண் 23: A.A.S. 59 (1967) பக். 307.
124 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 10521067.
125 — திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticummysterium, 25.05.1967. எண் 54: A.Aப்ட் (1967) பக். 568; Inter 08ccumenici, 26.09.1964, எண் 95: A.A.S. 56 (1964) பக். 898.
126 காண். திருச்சடங்குத் திருப்பேராயம், Euclitaristicum hysterium, 25.05.1967, எண் 52: A.A.S. 59 (1967) பக். 9 Inter Occcumenici, 26.09.1964, எண் 95: A.A.S. 56 (1964) பக். 898, அருளடையாளங்களின் பேராயம், NIM umquam tempore, 28.05.1938, எண் 4: A.A.S. 30 (1938) பக். 199- 200; உரோமைத் திருச்சடங்கு இ’ De Sacra Communione et de cultu mysterii eucharistici extra Missam, 1973, எண். 10-11; திச 938S’
127 காண். உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 919-929, (1967) பக். 569.
128 காண், திருச்சடங்குத் திருப்பேராயும், Eucharisticum mysterium, 25.05.1967, எண் 55: AA’
==============↑ பக்கம் 80
ஆதலின் மறைமாவட்ட ஆயரின் முடிவுக்கு ஏற்ப நற்கருணைப் பேழையைப் பின்வரும் முறையில் வைக்கலாம்:
அ) திருப்பீட முற்றத்தில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் பீடத்தை விடுத்து, அதனைக் கொண்டாட்டங்கள் நடத்தப்படாத பழைய பீடம் உட்பட வேறொரு பொருத்தமான இடத்தில் நல்லதொரு வடிவமைத்து வைக்க வேண்டும் (காண். எண் 303).
ஆ) அல்லது நம்பிக்கையாளரின் தனி ஆராதனைக்கும் இறைவேண்டலுக்கும் ஏதுவான ஒரு சிற்றாலயத்தில் வைக்கலாம்.129 ஆனால் அது கோவிலின் வடிவமைப்பில் இணைந்தும் கிறிஸ்துவில் நம்பிக்கையாளர் தெளிவாகக் காணக்கூடியதாயும் இருக்க வேண்டும்.
316. தொன்மையான மரபுப்படி நற்கருணைப் பேழையின் அருகில் எண்ணெயினாலோ மெழுகினாலோ எரியும் சிறப்பு விளக்கு எப்போதும் சுடர்விட்டுக்கொண்டிருக்கும். அது கிறிஸ்துவின் உடனிருப்பைக் குறித்துக் காட்டி அதற்கு மதிப்பு அளிக்கின்றது.”
317. தூய்மைமிகு நற்கருணையைப் பாதுகாப்பது பற்றி விதிமுறைகளில் குறிக்கப்பட்டுள்ள பிறவற்றைச் சிறிதும் மறத்தலாகாது.131
திரு உருவங்கள்
318. புனித நகராம் எருசலேமில் கொண்டாடப்படும் விண்ணகத் திருவழிபாட்டை முன்சுவைப்பதாகவே மண்ணகத் திருவழிபாட்டில் திரு அவை பங்கு கொள்கின்றது. திரு அவை அந்நகரை நோக்கிப் பயணம் செய்கின்றது. அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார். புனிதர்களை வணக்கத்துடன் நினைவுகூர்வதால் அவர்களோடு பங்குகொள்ளவும் தோழமை கொள்ளவும் திரு அவை எதிர்நோக்குகின்றது.132
திரு அவையின் மிகத் தொன்மை வாய்ந்த மரபுப்படி ஆண்டவர், புனித கன்னி மரியா, புனிதர் ஆகியோரின் திரு உருவங்கள் நம்பிக்கையாளரின் வணக்கத்துக்காகக் கோவில்களில் வைக்கப்படும்.133 அங்கே நடைபெறும் நம்பிக்கையின் மறைநிகழ்வுகளுக்கு நம்பிக்கையாளரை இட்டுச் செல்லும் வண்ணம் அவை அமைக்கப்படும். ஆகவே அவை வரைமுறையின்றி எண்ணிக்கையில் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையாளரின் கவனம் திருநிகழ்ச்சிகளிலிருந்து சிதறிவிடா வண்ணம் அத்திரு உருவங்கள் சரியான ஒழுங்கு முறையில் அமைக்கப்படும்.134 வழக்கமாக ஒரே புனிதரின் திரு உருவம் ஒன்றுக்கு மேல் இருக்கக்கூடாது. பொதுவாக, திரு உருவங்களைக் கோவிலில் வைத்து அணி செய்வதில் திருக்கூட்டம் முழுவதின் இறைப்பற்றையும் திரு உருவங்களின் அழகு, அவற்றின் மாண்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
129 மேற்படி, எண் 53: A.A.S. 59 (1967) பக். 568; உரோமைத் திருச்சடங்கு நால், De Sacra Communione et de cult mysteri eucharistici extra Missan, 1973, எண் 9; திச 938$2; இரண்டாம் ஜான் பால் Dominicae Caenae, 24.02.1980, எண் 3: A.A.S. 72 (1980) பக். 117-119.
130 காண். திச 940; திருச்சடங்குத் திருப்பேராயம், Eucharisticum nysterium, 25.05.1967. எண் 57, A.A.S. 59 (1967) பக். 569; உரோமைத் திருச்சடங்கு நூல், De Sacra Communione et de cultu mysterii eucharistici extra Missam, 1973, எண் 11.
131 காண். அருளடையாளங்களின் பேராயம், Nulli umquam tempore, 28.05.1938: A.A.S. 30 (1938) பக். 198-207; திச 934-944.
132 காண். திருவழிபாடு, 8.
133 காண், உரோமை அயர் திருச்சடங்கு நூல், Ordo Dedicationis ecclesiae et altaris, 1977, cli, 4. எண் 10; உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 984-1031.
134 காண். திருவழிபாடு, 125.
==============↑ பக்கம் 81

இயல் 6
திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையானவை
திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையானவை
1. நற்கருணைக் கொண்டாட்டத்துக்கான அப்பமும் இரசமும்
319. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றித் திரு அவை ஆண்டவரின் திருவிருந்து, கொண்டாடுவதற்கு அப்பத்தையும் தண்ணீர் கலந்த திராட்சை இரசத்தையும் என்றால் பயன்படுத்தி வந்துள்ளது.
320. நற்கருணைக் கொண்டாட்டத்துக்குப் பயன் படுத்தப்படும் அப்பம் கோதுரை, மாவினால் அண்மையில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அது இலத்தீன் திரு அவையின் பழமை வாய்ந்த மரபுப்படி புளிப்பற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
321. அதனுடைய அடையாளத்தன்மையைக் காணும்படியாக, நற்கருணைம். கொண்டாட்டத்துக்குப் பயன்படும் பொருள் உண்மையாகவே உணவின் தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். நற்கருணை அப்பம் புளிப்பற்றதாகவும் மரபு வழிவந்த வடிவத்தில் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மக்களோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் திரு அப்பத்தைப் பல துண்டுகளாகப் பிட்டு அவற்றை நம்பிக்கையாளர் சிலருக்கேனும் பகிர்ந்து அளிக்கும் வகையில் அவ்வப்பம் தயாரிக்கப்பட வேண்டும். நற்கருணை உட்கொள்பவரின் எண்ணிக்கையின் பொருட்டும் வேறு சில அருள்பணித் தேவைகளுக்காகவும் சிறிய அப்பங்களைப் பயன்படுத்துவது விலக்கப்படவில்லை. அப்பம் பிடும் செயல் திருத்தூதர் காலத்தில் நற்கருணை என்றே அழைக்கப்பட்டது. இச்செயல் ஒரே அப்பத்தில் அனைவருக்கும் உள்ள ஒன்றிப்பின் அடையாளத்தையும் அதன் ஆற்றலையும் தனிச் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது. ஒரே அப்பம் சகோதரர் சகோதரிகளுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுவதால் அவர்களிடையே உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றது.
322. நற்கருணைக் கொண்டாட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் திராட்சை இரசம் இயற்கையான திராட்சைப் பழ இரசமாகவும் (காண். லூக் 22:18) கலப்படம் இல்லாததும் அதாவது வேற்றுப் பொருள்களின் கலவை இல்லாததுமாய் இருத்தல் வேண்டும்.
333. நற்கருணைக்கு எனப் பயன்படுத்தப்படும் அப்பமும் இரசமும் கெடாதவாறு மிகுந்த கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்; அதாவது, இரசம் புளிப்பேறக் கூடாது; அப்பம் கெட்டுவிடக் கூடாது அல்லது எளிதில் உடைக்க முடியாதபடி மிகவும் இறுகிவிடக் கூடாது.
334. அர்ச்சிப்புக்குப் பின்னரோ நற்கருணை உட்கொள்ளும்போதோ அருள்பணியாளர் இந்திண்ணத்தில் இரசம் ஊற்றப்படவில்லை, தண்ணீர் மட்டும் உள்ளது எனக் கண்டால், அவர் அத்தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டு, திருக்கிண்ணத்தில் இரசமும் சிறிது தண்ணீரும் ஊற்றி, திருக்கிண்ணத்தை அர்ச்சிப்பு செய்வதற்கு உரிய பகுதியைச் சொல்லி இரசத்தை அர்ச்சிப்பு செய்வார்; மீண்டும் அப்பத்தை அர்ச்சிக்கத் தேவை இல்லை.
II. கோவில் பொருள்கள், பொதுவாக
305. கோவில் கட்டுவது பற்றிக் குறிப்பிட்டது எல்லாக் கோவில் பொருள்களுக்கும் பொருந்தும்: அதாவது, திரு அவை அந்தந்த நிலப்பகுதியின் கலைகளுக்கு இடம் அளித்து, மக்களின் பண்பாட்டுக்கும் மரபுக்கும் ஏற்றவாறு தழுவியமைப்பதை ஆதரிக்கின்றது. ஆனால் இத்திருப்பொருள்களுக்கு உரிய பயன்பாட்டுக்கு அவை பொருத்தமாக இருக்க வேண்டும்’ 135
135 காண். திருவழிபாடு, 128.
==============↑ பக்கம் 82
மேலும் இக்காரியத்திலும் மெய்யான கலையுணர்வுடன் சீர்மிகு எளிமையும் இணைந்திருக்க வேண்டும்.
326. திருப்பொருள்களைச் செய்வதற்கான மூலப்பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது, மரபுப்படி உள்ளவையோடு, நம் காலத்தின் மன நிலைக்கு ஏற்ப மேன்மைமிக்க, நிலைத்திருக்கக்கூடிய வழிபாட்டுப் பயன்பாட்டுக்குப் பொருந்தக் கூடியவற்றையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதை அந்தந்த நிலப்பகுதியின் ஆயர் பேரவை முடிவு செய்யும் (காண். எண் 390).
III. திருக்கலங்கள்
327. திருப்பலிக் கொண்டாட்டத்துக்குத் தேவையானவற்றுள் திருக்கலங்கள் தனிச் சிறப்பு உடையவை; அவற்றுள் திருக்கிண்ணமும் அப்பத் தட்டும் தனிச்சிறப்பு வாய்ந்தவை; ஏனெனில் இவை இரசம், அப்பம் ஆகியவற்றை ஒப்புக்கொடுக்கவும் அர்ச்சிப்பு செய்யவும் உட்கொள்ளவும் பயன்படுகின்றன.
328. திருக்கலங்கள் உயர்தர உலோகத்தால் செய்யப்பட வேண்டும். அவை துரு பிடிக்கக்கூடிய உலோகத்தாலோ தங்கத்தைவிட தாழ்ந்த தரம் கொண்ட ஓர் உலோகத்தாலோ செய்யப்பட்டால் பொதுவாக, உட்புறம் தங்க முலாம் பூசப்படல் வேண்டும்.
329. ஆயர் பேரவையின் முடிவின்படியும் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலின்படியும் திருக்கலங்களைச் செய்ய அந்தந்த நிலப்பகுதியில் மிக உயர்ந்த தரமும் உறுதியும் வாய்ந்த பொருள்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக திருப்பணிக்கு உகந்த வைரம் பாய்ந்த அல்லது உறுதி மிகுந்த மரத்தால் செய்யப்படலாம். ஆனால் இவை புனித பயன்பாட்டுக்கு உகந்தவையாய் இருக்க வேண்டும். இவ்வகையில் எளிதில் உடையாத, அழியாத பொருள்களே விரும்பத்தக்கன. இது நற்கருணை வைக்க வேண்டிய திரு அப்பத் தட்டு, நற்கருணைச் சிமிழ், நற்கருணைக் கலம், கதிர்ப் பாத்திரம் மற்றும் இவை போன்ற பிற திருக்கலங்களுக்கும் பொருந்தும்.
330. ஆண்டவரின் திரு இரத்தத்தைக் கொண்டிருக்கிற திருக்கிண்ணம் போன்ற கலங்களின் குவளைப் பகுதி திரவத்தை உறிஞ்சிடாத பொருளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றின் அடிப்பகுதி வேறு உறுதியான, தரமான பொருள்களால் செய்யப்படலாம்.
331. அர்ச்சிப்பு செய்யப்படுவதற்காக திரு அப்பங்கள் வைக்கப்படும் திரு அப்பத் தட்டு, அருள்பணியாளருக்கும் திருத்தொண்டர், பிற பணியாளர்கள், நம்பிக்கையாளர் ஆகியோருக்கும் தேவையான திரு அப்பத்தை வசதியாக வைக்கும் அளவுக்குப் பெரியதாக இருக்கலாம்.
332. திருக்கலங்களின் உருவத்தை அந்தந்த நிலப்பகுதியின் பண்பாட்டுக்குப் பொருத்தமாக அமைக்கக் கலைஞர்கள் முயல்வார்களாக; ஆனால் திருக்கலங்கள் ஒவ்வொன்றும் அதனதனுக்கு உரிய வழிபாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றதாய் இருக்க வேண்டும். ஆனால் அன்றாடம் உபயோகிக்கப்படும் கலங்களிலிருந்து தெளிவாக வேறுபட்டிருக்க வேண்டும்.
333. திருக்கலங்கள் திருவழிபாட்டு நூல்களில் குறிப்பிட்டுள்ள சடங்குமுறைப்படி புனிதப்படுத்தப்படும்.”
334, திருப்பொருள் அறையில் தூய தொட்டி ஒன்று அமைக்கும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதில் திருக்கலங்களையும் துகில்களையும் தூய்மை செய்யப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஊற்றப்படும் (காண். எண் 280).
136 காண். உரோமை ஆயர் திருச்சம்.ங்கு நூல், Ordo Dedicationis ecclesiae et altaris, 1977; உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 1068-1084.
==============↑ பக்கம் 83
IV. திருவுடைகள்
335, கிறிஸ்துவின் உடலாகிய திரு அவையில் உறுப்பினர் அனைவரும் ஒரே பா. ஆற்றுவதில்லை. நற்கருணைக் கொண்டாட்டத்தில் நடைபெறும் பல்வேறு திருப்பணி திருவுடைகளின் வேறுபாட்டால் வெளிப்படையாக உணர்த்தப்படுகின்றன. என.ே திருவுடைகள் பணியாளர் ஒவ்வொருவருக்கும் உரிய பணியின் அடையாளமாய் இருக்க வேண்டும். மேலும் இவ்வுடைகள் திருநிகழ்ச்சியின் சிறப்பை உணர்த்தவும் பயன்பட வேண்டும். அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் ஆகியோர் அணியும் திருவுடைகளும் பொது நிலைப் பணியாளர்கள் அணியும் உடைகளும் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும்முன் உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்தப்படுவது பொருத்தம் ஆகும்.137
336. திருப்பட்டம் பெற்ற எல்லாப் பணியாளர்களுக்கும், நியமனம் பெற்ற நிலைப்பணியாளர்கள் அனைவருக்கும் பொதுவான திருவுடை ‘ஆல்பா’ எனப்படும் நீள் வெண்ணாடை ஆகும்; அது உடலோடு பொருந்தியிருக்குமாறு தைக்கப்பட்டிருந்தால் ஒழிய, இடைக்கச்சையால் இடுப்பைச் சுற்றிக் கட்டப்படும். இந்தப் பொது உடை கழுத்தைச் சுற்றி முழுவதும் மறைக்கவில்லை என்றால் அதை அணிவதற்குமுன் கழுத்துத் துகில் அணியப்படும். நீள் வெண்ணாடைக்குப் பதிலாக குறுகிய வெண்ணாடையைப் பயன்படுத்தலாகாது. திருப்பலி உடையோ திருத்தொண்டர் உடையோ அணியப்படும் சமயங்களிலும், ஒழுங்குகளின்படி திருப்பலி உடையையோ திருத்தொண்டர் உடையையோ அணியாமல் தோள்துகில் மட்டும் அணியும் சமயங்களிலும் குறுகிய வெண்ணாடையோ அங்கியோ நீள் வெண்ணாடைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட முடியாது.
337. வேறுவிதமாகக் குறிப்பிட்டிருந்தாலன்றி, திருப்பலியின்போதும் திருப்பலியோடு நேரடியாகத் தொடர்பு கொண்ட வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போதும் அருள்பணியாளருக்கு உரிய திருவுடை திருப்பலி உடை ஆகும். இதை அருள்பணியாளர் நீள் வெண்ணாடை, தோள் துகில் இவற்றின்மேல் அணிவார்.
338. திருத்தொண்டருக்கு உரியது திருத்தொண்டர் உடை ஆகும். அதை அவர் நீள் வெண்ணாடை, தோள்துகில் இவற்றின்மேல் அணிய வேண்டும். இருப்பினும் தேவையின் பொருட்டும் அல்லது குறைந்த ஆடம்பர விழாவின்போதும் திருத்தொண்டர் உடையை அணியாமல் விட்டுவிடலாம்.
339. பீடத்துணைவர், வாசகர், பிற பொது நிலைப் பணியாளர் நீள் வெண்ணாடை அணியலாம் அல்லது ஆயர் பேரவையின் முறையான ஒப்புதல் பெற்ற வேறு தகுதியான உடையையும் அணியலாம் (காண். எண் 390).
340. தோள் துகிலை அருள்பணியாளர் கழுத்தில் அணிந்து தமது நெஞ்சின் முன்புறம் தொங்கவிடுவார்; திருத்தொண்டரோ அதை இடப் புறத் தோள் மீது அணிந்து, முன் புறத்தில் குறுக்கே கொணர்ந்து, உடலின் வலப் புறத்தில் இழுத்துக் கட்டிக்கொள்வார்.
341. பவனிகளின்போதும் அந்தந்தச் சடங்குமுறையில் கண்டுள்ள விதிகளின்படி, மற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் அருள்பணியாளர் ‘காப்பா’ எனப்படும் திருப்போர்வையை அணிவார்.
342. அந்தந்த இடத்துத் தேவைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப, திருவுடைகள் வடிவமைப்பை ஆயர் பேரவைகள் முடிவு செய்து, திருத்தூதுப் பீடத்துக்குத் தெரிவிப்பார்கள்
136 உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, எண். 1070.
137 காண், திருவழிபாடு, 128
==============↑ பக்கம் 84
343. திருவுடைகள் செய்வதற்கு வழக்கமாகப் பயன்படும் பொருள்களைத் தவிர அந்தந்த இடத்தில் கிடைக்கும் இயற்கைத் துணி வகைகளையும் பயன்படுத்தலாம்; மேலும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சிறப்பையும் திருப்பணியாளரின் நிலையையும் உணர்த்தக்கூடிய செயற்கைத் துணி வகைகளையும் பயன்படுத்தலாம். ஆயர் பேரவை இதை முடிவு செய்யும்:
344 ஒவ்வொரு திருவுடையின் அழகும் மேன்மையும் அதை மிகைப்பட அணிசெய்வதில் அன்று, அதைச் செய்யப் பயன்படுத்தப்படும் பொருளிலும் அதன் வடிவமைப்பிலும் வெளிப்படுவது பொருத்தம் ஆகும். திருவுடைகளை அணிசெய்வதில் வழிபாட்டுக்கு ஏற்ற வடிவங்களும் உருவங்களும் சின்னங்களும் பயன்படுத்தப்பெற வேண்டும். அதற்குப் பொருந்தாதவற்றை விலக்க வேண்டும்.
345. திருவழிபாட்டில் பல்வேறு நிறங்கள் கொண்ட திருவுடைகள் பயன்படுத்தப் படுகின்றன; கொண்டாடப்படுகின்ற நம்பிக்கையின் மறைநிகழ்வுகளைத் தக்கவாறு உணர்த்துவதற்கும் கிறிஸ்தவ வாழ்க்கை திருவழிபாட்டு ஆண்டின் காலப்போக்குடன் இணைந்து முன்னேறிச் செல்கின்றது என்பதைச் சிறப்பாகவும் வெளியரங்கமாகவும் காட்டுவதற்கும் இந்த நிற வேறுபாடுகள் பயன்படுகின்றன. 346. திருவுடைகளின் நிறத்தைப் பொறுத்தமட்டில் மரபுவழிப் பயன்பாடு பின்பற்றப்பட வேண்டும். அதாவது:
அ) வெண்ணிறம்: பாஸ்கா காலத்திலும் ஆண்டவருடைய பிறப்புக் காலத் திருப்பலிகளிலும் திருப்புகழ்மாலைக் கொண்டாட்டங்களிலும் திருப்பாடுகளைச் சாராத ஆண்டவருடைய விழாக்களிலும் புனித கன்னி மரியா, வானதூதர், மறைச்சாட்சியர் அல்லாத புனிதர்கள் ஆகியோரின் விழாக்களிலும் புனிதர் அனைவர் பெருவிழா (நவ. 1), புனிதத் திருமுழுக்கு யோவான் விழா (ஜூன் 24), நற்செய்தியாளரான புனித யோவான் விழா (டிச. 27), புனித பேதுரு தலைமைப்பீட விழா (பெப். 22), புனித பவுல் மனந்திரும்பிய விழா (ஜன. 25) ஆகிய நாள்களிலும் வெண்ணிறம் பயன்படுத்தப்படும்.
ஆ) சிவப்பு நிறம்: ஆண்டவருடைய திருப்பாடுகளின் ஞாயிறு, புனித வெள்ளிக்கிழமை, பெந்தக்கோஸ்து ஞாயிறு, ஆண்டவருடைய பாடுகளின் கொண்டாட்டங்கள், திருத்தூதர்கள், நற்செய்தியாளர்கள், மறைச்சாட்சியரான புனிதர்கள் ஆகியோரின் விண்ணகப் பிறப்பு நாள்கள் ஆகியவற்றில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படும்.
இ) பச்சை நிறம்: ஆண்டின் பொதுக் காலத் திருப்பலிகளிலும் திருப்புகழ்மாலைக் கொண்டாட்டங்களிலும் பச்சை நிறம் பயன்படுத்தப்படும்.
ஈ) ஊதா நிறம்: திருவருகைக் காலத்திலும் தவக் காலத்திலும் ஊதா நிறம் பயன்படுத்தப்படும்; இறந்தோருக்கான திருப்பலிகளிலும் திருப்புகழ்மாலைக் கொண்டாட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
உ) கறுப்பு நிறம்: வழக்கத்தில் இருப்பின் இறந்தோருக்கான திருப்பலிகளில் கறுப்பு நிறம் பயன்படுத்தப்படலாம்.
ஊ) இளஞ்சிவப்பு நிறம்: வழக்கத்தில் இருப்பின் திருவருகைக் கால 3-ஆம் ஞாயிறு அன்றும் (“மகிழுங்கள் ஞாயிறு) தவக்கால 4-ஆம் ஞாயிறு அன்றும் (“அகமகிழ் ஞாயிறு) இளஞ்சிவப்பு நிறம் பயன்படுத்தப்படலாம்.
எ) மிகச் சிறப்பான கொண்டாட்டங்களின்போது திருவுடைகள் வழிபாட்டு நாளுக்கு உரிய நிறமாக இல்லையென்றாலும் சிறப்புமிகு அல்லது உயர்வகைத் திருவுடைகள் பயன்படுத்தப்படலாம்.
139 காண். மேற்படி
==============↑ பக்கம் 85
திருவழிபாட்டு நிறங்களைப் பொறுத்தவரையில் மக்களின் தேவைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பொருத்தமான மாற்றங்களை ஆயர் பேரவைகள் முடிவு ெ திருத்தூதுப் பீடத்துக்கு எடுத்துரைக்கலாம்.
347. திருச்சடங்குத் திருப்பலிகளில், சடங்குக்கு உரிய அல்லது வெள்ளை அல்லது சிறப்ப… திருப்பலி உடையைப் பயன்படுத்தலாம். பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகள்: அந்தந்த நாளுக்கு அல்லது காலத்துக்கு உரிய நிறமுள்ள திருப்பலி உடைகளை அணியலாம். ஆனால் பாவத்துயரை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களில் (எ.கா. உரோமை திருப்பலி நூல், எண். 31,33,38) ஊதா நிறம் பயன்படும். நேர்ச்சித் திருப்பலிகளுக்கு அந்தந்தத் திருப்பலிக்கு உரிய நிறம் அல்லது நாளுக்கோ காலத்துக்கோ உரிய நிறம் பயன்படும்.
V. கோவில் பயன்பாட்டுக்கான இதரப் பொருள்கள்
348. திருக்கலங்கள் செய்வதற்குக் குறிப்பிட்ட பொருள்களையும் திருவுடைகள் தயாரிப்பதற்குக் குறிப்பிட்ட துணி வகைகளையும் பயன்படுத்த வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.140 இவை தவிர, வழிபாட்டுக்குப் பயன்படும் பொருள்களும் கோவிலில் பயன்படும் மற்றப் பொருள்களும் மேன்மை பொருந்தியனவாகவும் அவற்றின் பயன்பாட்டின் நோக்கத்துக்கு ஏற்றவையாகவும் இருத்தல் வேண்டும்.
349. திருவழிபாட்டு நூல்கள் குறிப்பாக நற்செய்தி வாசக நூலும் திருப்பலி வாசக நூலும் இறைவார்த்தையை அறிவிக்கப் பயன்படுவதால் தனி வணக்கம் பெறுகின்றன. திருவழிபாட்டுச் செயலின் உயர் நிகழ்வுகளின் அறிகுறியாகவும் அடையாளமாகவும் இருப்பதால், அவை உண்மையான தகுதியும் மதிப்பும் அழகும் வாய்ந்தவையாம். ஆதலின் இவை பற்றிய தனிப்பட்ட கவனம் தேவை.
350. மேலும் பீடத்தோடும் திருப்பலிக் கொண்டாட்டத்தோடும் நேரடித் தொடர்பு கொண்டுள்ள பொருள்களைக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். எ.கா. பீடச் சிலுவை, பவனியில் பயன்படுத்தப்படும் சிலுவை.
351. குறைந்த முக்கியத்துவம் கொண்ட கலைப்பொருள்களைப் பொருத்தமான வகையில் தாய்மையாகவும் எளிமையாகவும் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்.
140 உரோமைத் திருச்சடங்கு நூல், De Benedictionibus, 1984, பகுதி III
==============↑ பக்கம் 86

இயல் 7
திருப்பலியையும் அதன் பகுதிகளையும் தேர்ந்துகொள்ளல்
திருப்பலியையும் அதன் பகுதிகளையும் தேர்ந்துகொள்ளல்
350. வாசகப் பகுதிகள், மன்றாட்டுகள், திருவழிபாட்டுப் பாடல்கள் ஆகியவை திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் பங்கேற்போரின் உளப்பாங்கு, திறமை ஆகியவற்றுக்கு ஏற்பவும் கூடுமானவரையில் பொருத்தமாகவும் அமைந்திடின் அருள்பணி சார்ந்த பயன் மிகவும் சிறப்பாக அமையும். பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் வழியாக இப்பயனைப் பெறலாம். இது கீழே விளக்கப்பட உள்ளது:
திருப்பலிக்குத் தயார் செய்யும்போது, அருள்பணியாளர் தமது விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் இறைமக்களின் பொதுவான ஆன்ம நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் வழிபாட்டுக் கொண்டாட்டத்தின் சில பணிகளை ஆற்றுகின்றவர்களையும் நம்பிக்கையாளர் அனைவரையும் அவரவருக்கான பணிகளைப் பற்றி அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திருப்பலியின் பகுதிகளை ஒருமனப்பட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
திருப்பலியின் பல பாகங்களைத் தேர்ந்தெடுக்க பல்வேறு வாய்ப்புகள் தரப்பட்டிருப்பதால், திருத்தொண்டர், வாசகர், திருப்பாடல் முதல்வர், பாடகர், விளக்கவுரையாளர், பாடகர் குழு ஆகியோர் அவரவர் பணிக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பலிப் பாடங்கள் எவையென கொண்டாட்டத்துக்கு முன்னதாக அறிந்திருக்க வேண்டும். முன் தயாரிப்பு இன்றி எதுவும் நடக்கக் கூடாது. ஏனெனில் சடங்கினை ஒருங்கமைத்து முறையாக நடத்துவது நம்பிக்கையாளர் திருப்பலியில் பங்கெடுப்பதற்கு அவர்கள் உள்ளத்தைத் தயாரிக்க உதவும்.
1. திருப்பலியைத் தேர்ந்துகொள்ளல்
353. பெருவிழாக்களில் அருள்பணியாளர் தாம் திருப்பலி நிறைவேற்றும் கோவிலின் ஆண்டுக் குறிப்பேட்டைப் பின்பற்ற வேண்டும்.
354. ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் விழாக்களிலும் நினைவு நாள்களிலும்:
அ) மக்களோடு திருப்பலி நடைபெற்றால், அருள்பணியாளர் தாம் திருப்பலி நிறைவேற்றும் கோவிலின் ஆண்டுக் குறிப்பேட்டைப் பின்பற்றுவார்;
ஆ) ஒரு பணியாளர் மட்டும் பங்கேற்கும் திருப்பலி நடைபெற்றால், அருள்பணியாளர் கோவிலின் ஆண்டுக் குறிப்பேட்டை அல்லது தமக்கு உரிய ஆண்டுக் குறிப்பேட்டைக் தேர்ந்து கொள்ளலாம்.
355. விருப்ப நினைவு நாள்களில்:
அ) டிசம்பர் 17-ஆம் நாளிலிருந்து 24-ஆம் நாள் முடிய வரும் திருவருகைக் கால வார நாள்களிலும் கிறிஸ்து பிறப்பு எண்கிழமையில் வரும் வாரநாள்களிலும் திருநீற்றுப் புதனும் புனித வார முதல் மூன்று நாள்களும் தவிர்த்து, ஏனைய தவக் கால வாரநாள்களிலும் அருள்பணியாளர் நிகழும் திருவழிபாட்டு நாளுக்கு உரிய திருப்பலியை நிறைவேற்றுவார்; இந்நாள்களில் ஆண்டின் பொதுக் குறிப்பேட்டில் நினைவு என்னும் குறிப்பு தரப்பட்டிருந்தால் அதன் திருக்குழும மன்றாட்டைப் பயன்படுத்தலாம்; ஆனால் திருநீற்றுப் புதனும் புனித வாரத்தின் வார நாள்களும் இதற்கு இடம் தரா. பாஸ்கா கால வாரநாள்களில் புனிதர்களின் நினைவு நாள்களை, நினைவுத் திருப்பலியை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டாடுவது முறை ஆகும்.
==============↑ பக்கம் 87
ஆ) டிசம்பர் 17-ஆம் நாளுக்கு முந்திய திருவருகைக் கால வாரநாள்களில. பிறப்புக் காலத்தில் ஜனவரி 2-ஆம் நாளுக்குப்பின் வரும் வாரநாள்களிலும் பால் வாரநாள்களிலும் அருள்பணியாளர் அந்தந்த வாரநாளின் திருப்பலியையோ புன திருப்பலியையோ நினைவு என்று குறிப்பிட்டுள்ள புனிதர் ஒருவரின் திருப்பலியை மறைச்சாட்சியரின் ஏட்டில் அந்த நாளுக்குக் குறிப்பிட்டுள்ள புனிதர்களுள் ஒருவரும் திருப்பலியையோ தேர்ந்து கொள்ளலாம்.
இ) ஆண்டின் பொதுக் கால வார நாள்களில், அருள்பணியாளர் குறிப்பிட்ட வாரநாள் திருப்பலியையோ, அந்த நாளில் வரக்கூடிய விருப்ப நினைவுக் திருப்பலியையோ, மறைச்சாட்சியரின் ஏட்டில் அந்த நாளுக்குக் குறிப்பிட்டுள்ள ஒரு புனிதரின் திருப்பலியையோ, பல்வேறு தேவைகளுக்கான திருப்பலியையோ, நேர்ச்சித் திருப்பலியையோ தேர்ந்துகொள்ளலாம்.
அருள்பணியாளர் மக்களோடு சேர்ந்து திருப்பலி நிறைவேற்றினால், அந்தந்த நாளுக்கென வாசக நூலில் குறிக்கப்பட்ட வாசகங்களை அடிக்கடியோ போதிய காரணமின்றியோ விட்டுவிடக் கூடாது. ஏனெனில் திரு அவை இறைவாக்குப் பந்தியில் நம்பிக்கையாளருக்கு வளமான விருந்தினை வழங்க விரும்புகின்றது.141
இதற்காகவே அருள்பணியாளர் இறந்தோருக்கான திருப்பலிகளை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு திருப்பலியும் வாழ்வோருக்காகவும் இறந்தோருக்காகவும் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது; நற்கருணை மன்றாட்டில் இறந்தோர் நினைவுகூரப்படுகின்றனர்.
புனித கன்னி மரியா அல்லது புனிதர்களின் விருப்ப நினைவுக்கொண்டாட்டத்தில் நம்பிக்கையாளர் பேரார்வம் கொண்டிருந்தால் அவர்களுடைய முறையான இறைப்பற்று நிறைவு செய்யப்படலாம்.
பொது ஆண்டின் குறிப்பேட்டில் கண்டுள்ள நினைவு நாள், மறைமாவட்ட அல்லது துறவுச் சபைக் குறிப்பேட்டில் கண்டுள்ள நினைவு நாள் ஆகியவற்றுள் ஒன்றைத் தேர்ந்து கொள்ள நேரும்பொழுது, இவை ஒரே தரமுள்ளனவாகவும் மரபுக்கு ஏற்ப இருந்தால் தனிப்பட்ட குறிப்பேட்டில் கண்டுள்ள நினைவுக்கு முன்னுரிமை தரப்படுவனவாகவும் இருக்க வேண்டும்.
II திருப்பலியின் பகுதிகளைத் தேர்ந்துகொள்ளல்
356. திருவழிபாட்டு ஆண்டுக் காலத் திருப்பலிக்கும் புனிதர்களின் திருப்பலிக்கும் ஏற்ற 2. வேறு பாடங்களைத் தேர்ந்துகொள்வதில் கீழ்வரும் விதிகள் பின்பற்றப்படும்:
வாசகங்கள்
357. தாயிற்றுக்கிழமைகளுக்கும் பெருவிழாக்களுக்கும் முறையே இறைவாக்கி ” கால்களிலிருந்தும், திருத்தூதர் திருமுகங்களிலிருந்தும், நற்செய்திகளிலிருந்தும் மூச்சி வாசகங்கள் தரப்பட்டுள்ளன; இறைவனின் வியத்தகு திட்டத்துக்கு ஏற்ப, மீட்புப் பணி தொடர்ந்து வருவது பற்றி இவை கிறிஸ்தவ மக்களுக்குக் கற்பிக்கின்ற இவ்வாசகங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாஸ்கா காலத்தில் ?? அவையின் மரபுக்கு ஏற்பப் பழைய ஏற்பாட்டு வாசகத்துக்குப் பதிலாகத் திருத்து?” பணிகள் நூலிலிருந்து வாசகம் எடுக்கப்படும்.
141 காண். திருவழிபாடு, 51.
==============↑ பக்கம் 88
விழா நாள்களில் இரு வாசகங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் வழுங்குகளின்படி பெருவிழாத் தரத்துக்கு விழா உயர்த்தப்படின், மூன்றாம் வாசகம் பொதுக் கால வாசக நூலிலிருந்து எடுக்கப்படும்.
புனிதர்களின் நினைவு நாள்களில், அந்நாள்களுக்கு உரிய வாசகங்கள் கொடுக்கப் பட்டிருந்தாலன்றி, வாரநாள்களுக்கு உரிய வாசகங்கள் வழக்கம் போல வாசிக்கப்படும். சில நினைவு நாள்களில் அவற்றுக்கு உரிய வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை அப்புனிதரின் ஆன்மீக வாழ்வின் அல்லது செயல்களின் தனிப்பட்ட பண்புகளை விளக்குபவையாக இருக்கும். மக்களின் ஆன் மீக நலனுக்குத் தேவைப்பட்டாலன்றி, இத்தகைய வாசகங்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டியது இல்லை.
358. வாரநாள்களுக்கான வாசக நூலில் ஆண்டு முழுவதிலும் உள்ள எல்லா வாரங்களின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாசகங்கள் தரப்பட்டுள்ளன. எனவே அந்தந்த நாள்களுக்கு எனக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பெருவிழா, விழா மற்றும் நினைவு நாள்களில் அவற்றுக்கு உரிய புதிய ஏற்பாட்டு வாசகங்களில் கொண்டாடப்படும் புனிதர் பற்றிய குறிப்பு இருப்பின் அவ்வாசகங்களையே பயன்படுத்த வேண்டும்.
பெருவிழா, விழா, அல்லது தனிப்பட்ட கொண்டாட்டத்தினால் ஒரு வாரத்துக்கு உரிய வாசகத் தொடர் விட்டுப்போனால், அருள்பணியாளர் வார நாள்கள் வாசகங்களின் கருத்தை மனதிற்கொண்டு, விட்டுப்போனவற்றைப் பிற வாசகங்களுடன் இணைத்துப் பயன்படுத்தலாம் அல்லது எவை பிறவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த வாசகங்கள் என்று தெரிவு செய்து கொள்ளலாம்.
தனிப்பட்ட குழுக்களுக்காக நடைபெறும் திருப்பலிகளில், அருள்பணியாளர் அந்தத் தனிக் கொண்டாட்டத்துக்கு மிகப் பொருத்தமான வாசகங்களைத் தேர்ந்து கொள்ளலாம்; ஆனால் இவ்வாசகங்கள் அனுமதி பெற்ற வாசக நூலிலிருந்து எடுக்கப்பட வேண்டும்.
359. மேலும் சில அருளடையாளங்களையும் அருள்வேண்டல் குறிகளையும் இணைத்துக் கொண்டாடப்படும் திருச்சடங்குத் திருப்பலிகளுக்காகவும் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திருப்பலிகளுக்காகவும் திருநூலிலிருந்து சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்ட வாசகங்கள் வாசக நூலில் தரப்பட்டுள்ளன.
ஆகவே நம்பிக்கையாளர் தாங்கள் பங்கெடுக்கும் மறைநிகழ்வை நிறைவாகப் புரிந்து கொள்ள வழி செய்யும் இறைவார்த்தையைப் பொருத்தமான வகையில் கேட்கும் பொருட்டு இத்தகைய வாசகங்கள் தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நம்பிக்கையாளர் இறைவார்த்தையின்மீது ஆழ்ந்த பற்றுக்கொள்ளப் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு, திருப்பலிக் கொண்டாட்டத்தில் வாசிக்கப்படும் வாசகங்கள், தரப்பட்டுள்ள வாய்ப்புகளையும் அருள்பணி நலனையும் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 360. சில வேளைகளில் ஒரே வாசகத்தின் நீண்ட, குறுகிய பாடங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யும்போது அருள்பணி நலனை மனதில் கொள்ள வேண்டும். மேலும் நீண்ட அல்லது குறுகிய வாசகத்தைப் பயனுள்ள வகையில் கேட்கும் நம்பிக்கையாளரின் ஆற்றலையும் மறையுரையில் விளக்கப் பெறும் இன்னும் முழுமையான வாசகத்துக்குச் செவிமடுக்கும் ஆற்றலையும் அருள்பணியாளர் கருத்தில் கொள்ள வேண்டும். 142
361. குறிக்கப்பட்ட இரு வாசகங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பின் அல்லது விருப்பத்துக்கு ஏற்ப வாசகங்களைத் தேர்ந்து கொள்ளும்போதும் பங்கேற்போரின் மேலான நலன்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எளிதானதொரு வாசகத்தையோ ஒரு குழுவுக்கென மிகவும் பொருத்தமான இன்னொன்றையோ எடுத்துக் கொள்ளலாம் அல்லது
142 உரோமைத் திருப்பலி நூல், திருப்பலி வாசக அமைப்புமுறை. 1981, Praenotanda, எண் 80.
143 காண். மேற்படி 81
==============↑ பக்கம் 89
குறிப்பிட்ட கொண்டாட்டத்துக்குப் பொருத்தமானதெனக் குறிக்கப்பட்ட வாசகம் வே.. விருப்ப வாசகமாக இருக்குமாயின் அதனை எடுத்துக் கொள்ளலாம் அல்லது விட்டி..’ இவ்வாறு வாசகங்களைத் தேர்ந்து கொள்ளும்போது மக்களின் அருள்பணி – உய்த்துணர்ந்து செயல்பட வேண்டும்.143
ஒரு குறிப்பிட்ட வாசகம் ஒரு சில நாள்களுக்குள் மீண்டும் வாசிக்கப்படும், எ. ஞாயிற்றுக்கிழமையிலும் அதைத் தொடர்ந்து வரும் வாரநாளிலும் ஒரு குறிப்பிட்ட வாசம் கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் ஒரு தனிப்பட்ட குழுவுக்குச் சில இடறல்கள் ஏற்படுத்தும் என்னும் அச்சம் ஏற்படும்போதும், இச்சூழல் ஏற்படலாம். எனினும் திருநூலின் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் சில பகுதிகளை எப்பொழுதும் விட்டுவிடாமல் இருக்கக் கவனம் செலுத்த வேண்டும்.
362. மேலே குறிப்பிட்டுள்ளபடி மிகப் பொருத்தமான பாடங்களைத் தேர்வு செய்யும் உரிமை ஆயர் பேரவைகளுக்கு உண்டு. குறிப்பிட்ட வாசகங்களை மாற்றியமைக்கும் உரிமையும் அவற்றுக்கு உண்டு. ஆனால் அப்பாடங்கள் முறையாக அனுமதிக்கப்பட்ட வாசக நூலிலிருந்து எடுக்கப்படும்.
மன்றாட்டுகள்
363. ஒவ்வொரு திருப்பலியிலும் வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலன்றி, அதற்கு உரிய மன்றாட்டுகள் பயன்படுத்தப்படும்.
புனிதர்களின் நினைவு நாள்களில் அவற்றுக்கு உரிய திருக்குழும மன்றாட்டு பயன்படுத்தப்படும். இல்லை எனில் புனிதர்களுக்கான பொருத்தமான பொதுத் திருப்பலிகளிலிருந்து அது எடுக்கப்படும். எனினும் காணிக்கைமீது மன்றாட்டும் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டும் புனிதர்களின் நினைவு நாள்களுக்கு உரியவையாய் இருந்தாலன்றி, பொதுத் திருப்பலிகளிலிருந்தோ நிகழும் திருவழிபாட்டுக் காலத்தின் வாரநாள்களிலிருந்தோ அவை எடுக்கப்படும்.
எனினும் ஆண்டின் பொதுக் காலத்தின் வாரநாள்களில் முந்திய ஞாயிற்றுக்கிழமையின் மன்றாட்டுகளை எடுத்துக்கொள்ளலாம்; அவற்றைத் தவிர பொதுக் காலத்தின் மற்றொரு ஞாயிற்றுக்கிழமையின் மன்றாட்டுகளையோ திருப்பலி நூலில் பல்வேறு தேவைகளுக்கெனக் கொடுக்கப்பட்டுள்ள மன்றாட்டுகளையோ பயன்படுத்தலாம். இத்திருப்பலிகளிலிருந்து திருக்குழும மன்றாட்டை மட்டும் பயன்படுத்த எப்பொழுதும் அனுமதி உண்டு.
இவ்வாறு மன்றாட்டுப் பாடங்கள் மிகுதியாகத் தரப்பட்டுள்ளன. இதனால் நம்பிக்கையாளரின் இறைவேண்டல் வாழ்வு மிகுதியாக ஊட்டம் பெறுகின்றது.
முக்கியத்துவம் மிகுந்த திருவழிபாட்டு ஆண்டுக் காலங்களில் அந்தந்தக் காலத்து வார் நாள்களுக்கு உரிய மன்றாட்டுகள் திருப்பலி நூலில் தரப்பட்டுள்ளன. இது மேற்கூறிய பயன்பாட்டுக்கு வழி செய்கின்றது.
நற்கருணை மன்றாட்டு
364. உரோமைத் திருப்பலி நூலில் காணப்படும் பல்வேறு தொடக்கவுரைகளின் நோக்கம் என்னவென்றால், நற்கருணை மன்றாட்டில் நன்றி செலுத்துவதற்கான பல்வேறு காரணங்களை எடுத்தியம்பலும் மீட்புத் திட்டத்தின் பல்வேறு கூறுகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தலுமே.
365. திருப்பலி அமைப்பு முறையில் உள்ள நற்கருணை மன்றாட்டுகள் தேவைக்கு ? பின்வரும் விதிகளின்படி தேர்ந்து கொள்ளப்படுகின்றன:
==============↑ பக்கம் 90
அ) நற்கருணை மன்றாட்டு-1 (உரோமை நற்கருணை மன்றாட்டு): இதை எப்போதும் பயன்படுத்தலாம்; மிகப் பொருத்தமாக, “உம்முடைய புனிதர் அனைவருடனும் வைகொண்டுள்ள நாங்கள்…’ எனும் மன்றாட்டையோ “ஆகவே ஆண்டவரே, உம் அளமியர்களாகிய நாங்களும் …” எனும் மன்றாட்டையோ மாறுதல்களுடன் சொல்ல வேண்டிய திருப்பலிகளிலும் இந்நற்கருணை மன்றாட்டில் நினைவுகூரப்படும் திருத்தூதர்கள், புனிதர்களின் கொண்டாட்டங்களிலும் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் இது பயன்படுத்தப்படும். ஆயினும் அருள்பணி நலனை முன்னிட்டு நற்கருணை மன்றாட்டு II-ஐ ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்ந்து கொள்ளலாம்.
ஆ) நற்கருணை மன்றாட்டு-2: இதற்கு உள்ள தனிக் கூறுகளின் காரணமாக, இது மிகப் பொருத்தமாக வாரநாள்களில் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும். இந்த மன்றாட்டுக்கு உரிய தனிப்பட்ட தொடக்கவுரை உண்டு ; என்றாலும் மற்றத் தொடக்கவுரைகளுடன், சிறப்பாக மீட்புத் திட்டத்தை எடுத்துரைக்கும் தொடக்கவுரைகள், எ.கா. பொதுத் தொடக்கவுரைகள் ஆகியவற்றுடன் பயன்படுத்தலாம். இறந்தோருக்கான திருப்பலியில், “மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் …” எனும் மன்றாட்டுக்கு முன்னர் தரப்பட்டுள்ள சிறப்பு மன்றாட்டு பயன்படுத்தப்படும்.
இ) நற்கருணை மன்றாட்டு-3: இதை எந்தத் தொடக்கவுரையுடனும் பயன்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் விழாக்களிலும் பயன்படுத்த இது மிகப் பொருத்தமானது. இதில் இறந்தோருக்கான மன்றாட்டை அதற்கு உரிய இடத்தில், அதாவது “கனிவுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக் கனிவுடன் உம்மோடு சேர்த்துக்கொள்ளும்” எனும் சொற்களுக்குப்பின் பயன்படுத்தலாம்.
ஈ) நற்கருணை மன்றாட்டு-4: இது மாற்ற முடியாத தொடக்கவுரையைக் கொண்டது; மீட்பின் முழு வரலாற்றுச் சுருக்கத்தைத் தருவது. திருப்பலிக்கென்று தனிப்பட்ட தொடக்கவுரை இல்லாதபோதும் ஆண்டின் பொதுக் கால ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் அமைப்பின் காரணத்தால் இதில் இறந்தோருக்கான சிறப்பு மன்றாட்டை இடையில் சேர்க்க முடியாது.
பாடல்கள்
366. திருப்பலி முறையில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்களுக்கு மாற்றாக – எ.கா. “உலகின் பாவங்களைப் போக்கும்…” – வேறு பாடல்களைப் பயன்படுத்த முடியாது.
367. வாசகங்களுக்கு இடையில் வரும் பாடல்களையும் வருகைப் பாடல், காணிக்கைப் பாடல், திருவிருந்துப் பாடல் ஆகியவற்றையும் தேர்ந்து கொள்வதில் அவற்றுக்கு உரிய இடத்தில் தரப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும் (காண். எண். 40-41, 47-48, 61-64, 74, 86-88).
==============↑ பக்கம் 91

இயல் 8 பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் மன்றாட்டுகளும்
இறந்தோருக்கான திருப்பலிகளும்
பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் மன்றாட்டுகளும்
இறந்தோருக்கான திருப்பலிகளும்
I. பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் மன்றாட்டுகளும்
368. அருளடையாளங்கள், அருள்வேண்டல் குறிகள் ஆகியவற்றின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலிருந்து கிடைக்கும் பயன் யாதெனில்: பாஸ்கா மறைநிகழ்விலிருந்து வழிந்தோடும் இறையருளால் தகுந்த தயாரிப்பு நிலையில் உள்ள இறைமக்களின் வாழ்வில் ஏறக்குறைய எல்லா நிகழ்ச்சிகளும் புனிதப்படுத்தப்படுகின்றன.144 நற்கருணையே அருளடை யாளங்களுக்கெல்லாம் தலையாய அருளடையாளமாய் இருக்கின்றது. எனவே கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு வேளைகளில், உலகம் அனைத்துக்காகவும் அல்லது பொதுத் திரு அவை, தலத் திரு அவை ஆகியவற்றின் தேவைகளுக்காகவும் வேண்டுதல் புரியப் பயன்படக்கூடிய திருப்பலிகள், மன்றாட்டுகள் ஆகியவற்றின் மாதிரிகளைத் திருப்பலி நூல் வழங்குகின்றது.
369. வாசகங்களையும் மன்றாட்டுகளையும் விருப்பம் போலத் தேர்ந்து கொள்வதற்கு மிகுந்த வாய்ப்பு இருப்பதால் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளை மிதமாக, அதாவது, தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம்.
370. பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகள் அனைத்திலும் வேறு விதமாக வெளிப்படையாகக் குறிக்கப்பட்டிருந்தாலன்றி, வாரநாள்களின் வாசகங்களும் இடையில் வரும் பாடல்களும், அன்றைய கொண்டாட்டத்துக்கு ஏற்றவையாயிருந்தால், அவை பயன்படுத்தப்படலாம்.
371. இத்தகைய திருப்பலிகளில் திருச்சடங்குத் திருப்பலிகள், பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகள் மற்றும் நேர்ச்சித் திருப்பலிகளும் அடங்கும்.
372. திருச்சடங்குத் திருப்பலிகள் சில அருளடையாளங்கள், அருள்வேண்டல் குறிகள் ஆகியவற்றின் கொண்டாட்டத்தைச் சார்ந்தவை. திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெருவிழாக்களிலும் பாஸ்கா எண்கிழமையில் வரும் நாள்களிலும் இறந்தோர் அனைவரின் நினைவு நாளிலும் திருநீற்றுப் புதன்கிழமையிலும் புனித வார நாள்களிலும் திருச்சடங்குத் திருப்பலிகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் திருச்சடங்கு நூல்களிலும் திருப்பலிகளிலும் தரப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
373. தேவைகள் எழுகின்றபோது அல்லது குறிப்பிட்ட காலங்களில், பல்வேறு தேவைகளுக்கான அல்லது பல்வேறு கருத்துகளுக்கான திருப்பலிகள் பயன்படுத்தப்படும். இவற்றிலிருந்து ஆயர் பேரவையின் ஒப்புதல் பெற்று ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு உரிய மன்றாட்டுகளுக்கான திருப்பலிகள் உரிய பொறுப்பாளரால் தேர்வு செய்யப்படும்.
374. பெருவிழாக்கள், திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் ஞாயிற்றுக்கிழமைகள், பாஸ்கா எண்கிழமை, இறந்தோர் அனைவரின் நினைவு நாள், திருநீற்றுப் புதன், புனித வார நாள்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, மற்றெல்லா நாள்களிலும் முக்கியமான தேவையை அல்லது மக்களின் அருள்பணி நலனை முன்னிட்டு இவற்றுக்கு” பயன்படுத்தலாம். பொருத்தமான திருப்பலியை மறைமாவட்ட ஆயரின் ஆணைப்படி அல்லது அனுமதிப்படி பயன்படுத்தலாம்.
==============↑ பக்கம் 92
375 ஆண்டவருடைய மறைநிகழ்வுகளின் நேர்ச்சித் திருப்பலிகள் அல்லது புனித கன்னி மரியா, வானதூதர், ஒரு புனிதர் அல்லது புனிதர் அனைவரும் ஆகியோரின் வணக்கத்துக்கான நேர்ச்சித் திருப்பலிகள், நம்பிக்கையாளரின் பக்திக்காகப் புனிதர்களின் விருப்ப நினைவு நாள்களில் குறுக்கிடினும் ஆண்டின் வாரநாள்களில் நிகழ்த்தப்படலாம். சியாவின் அமல உற்பவத் திருப்பலியைத் தவிர, ஆண்டவர் அல்லது புனித கன்னி மரியாவின் வாழ்க்கையின் மறைநிகழ்வுகளைக் குறிப்பவற்றை நேர்ச்சித் திருப்பலிகளாகக் கொண்டாட முடியாது. அவற்றின் கொண்டாட்டம் திருவழிபாட்டு ஆண்டில் இடம் பெறும்.
276. கட்டாய நினைவுகளிலும் டிசம்பர்-16 வரையுள்ள திருவருகைக் கால வாரநாள்கள், ஜனவரி 2-க்குப்பின் வரும் கிறிஸ்து பிறப்புக் காலம், பாஸ்கா எண்கிழமைக்குப்பின் வரும் பாஸ்கா காலம் ஆகியவற்றின் வாரநாள்களிலும் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளும் நேர்ச்சித் திருப்பலிகளும் அனுமதிக்கப்படுவதில்லை; ஆனால் உண்மையான தேவைக்கு அல்லது அருள்பணி நலனுக்கு அவசியமானால், மக்களோடுள்ள கொண்டாட்டத்தில், இத்தேவைக்கு அல்லது நலனுக்குப் பொருத்தமான திருப்பலிகளைப் பயன்படுத்தலாம்; அதைக் கோவில் அதிபர் அல்லது திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் முடிவு செய்வார்.
377. ஆண்டின் பொதுக் கால வாரநாள்களில் விருப்ப நினைவு குறிக்கப்பட்டிருந்தாலும் அல்லது வாரநாளுக்கு உரிய திருப்புகழ்மாலையை வேண்டினாலும், திருச்சடங்குத் திருப்பலிகளின்போது தவிர, அன்று எந்தத் திருப்பலியையும் நிகழ்த்தலாம்; பல்வேறு தேவைகளுக்கான எந்த மன்றாட்டையும் பயன்படுத்தலாம்.
378. சனிக்கிழமையில் புனித மரியாவின் நினைவைக் கொண்டாடச் சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகின்றது; ஏனெனில் திரு அவையின் திருவழிபாட்டில் மீட்பரின் அன்னைக்குப் புனிதர் அனைவருக்கும் மேலான முதன்மை வணக்கம் அளிக்கப்படுகின்றது.145
II. இறந்தோருக்கான திருப்பலிகள்
379. திரு அவை இறந்தோருக்காகக் கிறிஸ்துவின் பாஸ்காவாகிய நற்கருணைப் பலியை ஒப்புக்கொடுக்கின்றது. இதன் பயனாக, ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைக்கப்பெற்ற கிறிஸ்துவின் உறுப்பினர் அனைவரும் சிலருக்கு ஆன்ம உதவியை மன்றாடிப் பெறுகின்றனர்; வேறு சிலருக்கு நம்பிக்கையின் ஆறுதலை அளிக்கின்றனர்.
380. இறந்தோருக்கான திருப்பலிகளில் முதலிடம் பெறுவது அடக்கத் திருப்பலி ஆகும்; கடன் திருநாளாகக் கடைப்பிடிக்கப்படும் பெருவிழாக்களும் பெரிய வியாழனும் பாஸ்கா விழாவின் மூன்று நாள்களும், திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் ஞாயிற்றுக்கிழமைகளும் தவிர, மற்றெல்லா நாள்களிலும் இத்திருப்பலி இடம்பெறலாம். ஆனால் சட்டத்தின் மற்ற எல்லா ஒழுங்கு முறைகளையும் மதித்துச் செயல்பட வேண்டும்.146
381. இறந்த செய்தி கேட்டதும் கொண்டாடப்படும் திருப்பலி அல்லது அடக்க இறுதி நாள் திருப்பலி அல்லது இறந்த முதல் ஆண்டுத் திருப்பலி முதலியன கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் வரும் நாள்கள், திருநீற்றுப் புதன், புனித வாரநாள்கள் தவிர, மற்றெல்லா வார நாள்களிலும் கட்டாய நினைவு நாள்களிலும் நடைபெறலாம்.
விருப்ப நினைவுக்கொண்டாட்டமோ வாரநாள் திருப்புகழ்மாலையோ இடம்பெறும் ஆண்டின் பொதுக் கால வாரநாள்களில் இறந்தோருக்கான வேறு திருப்பலிகளை அல்லது இறந்தோருக்கான ‘அன்றாடத்’ திருப்பலிகளை நிறைவேற்றலாம். ஆனால் இறந்தோருக்காகவே அவை ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்.
145 காண். திருச்சபை, 54; ஆறாம் பால், Marialis cultus, 02.02.1974 எண் 9: A.A.S. 66 (1974) பக். 122-123.
146 காண். திச 1176-1185; உரோமைத் திருச்சடங்கு நூல், Ordo Essequiaruin, 1969.
==============↑ பக்கம் 93
382. வழக்கமாக, அடக்கத் திருப்பலியில் சுருக்கமான ஒரு மறையுரை இருக்க, இறந்தோரைப் பற்றிய எவ்வகைப் புகழுரையும் தவிர்க்கப்பட வேண்டும்.
383. இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கப்படுகின்ற நற்கருணைப் பலியில் பங்.ெ நற்கருணையை உட்கொள்ளவும் நம்பிக்கையாளரை, சிறப்பாக இறந்? குடும்பத்தினரைத் தூண்ட வேண்டும்.
384 அடக்கத் திருப்பலி நேரடியாக அடக்கச் சடங்கோடு தொடர்பு கொண்டிருந். திருப்பலியில் திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு முடிந்ததும் முடிவுச் சடங்குகள் விடப்படும் பிரியாவிடைச் சடங்கு நடைபெறும்; இச்சடங்கு இறந்தவர் உடல் அங்கு இருந்தால் மட்டும் நடைபெறலாம்.
385. இறந்தோருக்கான திருப்பலியின், முக்கியமாக அடக்கத் திருப்பலியின் மாறும் பகுதிகளை (எ.கா. மன்றாட்டுகள், வாசகங்கள், பொது மன்றாட்டுகள் ஆகியவற்றைக் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்துவதில் இறந்தவர், அவர்தம் குடும்பத்தினர், மற்றும் பங்கேற்போர் ஆகியோரின் அருள்பணி நலனைக் கருத்தில் கொள்வது அவசியம்.
மேலும் அடக்கச் சடங்குகளில் கலந்து கொள்வோர், நற்செய்தியைக் கேட்கும் கத்தோலிக்கர், கத்தோலிக்கரல்லாதோர், கத்தோலிக்கரில் ஒருபோதும் திருப்பலியில் பங்கேற்காதோர் அல்லது அரிதாகப் பங்கேற்போர், நம்பிக்கை இழந்தோர் முதலானோரைப் பற்றி அருள்நெறியாளர்கள் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் அருள்பணியாளர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்கும் திருப்பணியாளர்கள்.
==============↑ பக்கம் 94

இயல் 9
ஆயர்கள், ஆயர் பேரவைகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட
தழுவியமைத்தல்
ஆயர்கள், ஆயர் பேரவைகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட
தழுவியமைத்தல்
386. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ற வகையில் இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரோமைத் திருப்பலி நூலைப் புதுப்பிக்கும் பப்’ நம்பிக்கையாளர் அனைவரும் திருவழிபாட்டின் இயல்புக்கு உகந்த வகையில், நற்கருனை” கொண்டாட்டத்தில் முழுமையாகவும் உணர்ந்தும் செயல் முறையிலும் பங்குகொண்டு ஈடுபட வேண்டும் என்னும் மிகுந்த அக்கறையுடன் நடைபெறுகின்றது. இத்தகைய பங்கேற்பு நம்பிக்கையாளரின் தகுதிநிலையிலிருந்து எழும் உரிமையும் கடமையும் ஆகும்.”
இருப்பினும், இத்தகைய கொண்டாட்டம் திருவழிபாட்டின் விதிமுறைகளுக்கும் இயல்புக்கும் முழுமையாக ஒத்திருக்கும் வண்ணம் இந்தப் போதனையிலும் திருப்பல் அமைப்பு முறையிலும் மேலும் சில தழுவியமைத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை மறைமாவட்ட ஆயர் அல்லது ஆயர் பேரவைகளின் தீர்ப்புக்கு உட்பட்டவை.
387. மறைமாவட்ட ஆயர் தமது மந்தையின் தலைமைக் குருவாக இருப்பதால், அவரது கண்காணிப்பில் உள்ள நம்பிக்கையாளரின் கிறிஸ்தவ வாழ்வு ஒருவகையில் ஆயரிடமிருந்து வருகின்றது, அவரைச் சார்ந்தும் உள்ளது.148 அவர் தமது மறைமாவட்டத்தில் திருவழிபாட்டு வாழ்வை ஊக்குவித்து, ஒழுங்குபடுத்திக் கண்காணித்து வர வேண்டும். கூட்டுத்திருப்பலியின் ஒழுங்குமுறையை (காண். எண். 20 2, 374) நெறிப்படுத்துவதும் பீடத்தில் பணி புரியும் அருள்பணியாளருக்கு உதவி செய்பவருக்கான ஒழுங்குமுறைகள் (காண். எண். 107), இரு வடிவங்களில் தூய நற்கருணை வழங்குவது (காண். எண். 283), கோவில்களைக் கட்டிச் சீரமைப்பது (காண். எண் 291) ஆகியவற்றுக்கான விதிமுறைகளை ஏற்படுத்துவதும், இந்தப் படிப்பினையின்படி, மறைமாவட்ட ஆயரிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், நம்பிக்கையாளர் ஆகியோரிடம் திருவழிபாட்டு உணர்வை வளர்ப்பது அவரது தலையாய பொறுப்பு ஆகும்.
388. பெருமளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய பின்வரும் தழுவியமைத்தல்கள் ஆயர் பேரவையின் விதிமுறைப்படி முடிவு செய்யப்பட வேண்டும்.
389. ஒப்புதல் பெற்ற தாய்மொழிகளில் உரோமைத் திருப்பலி நூலைத் தயார் செய்து அதன் பதிப்புக்கு ஒப்புதல் அளிப்பது ஆயர் பேரவைகளின் அதிகாரத்துக்கு உட்பட்ட க. ஆகும். இதற்கு உரிய திருத்தூது ஆட்சிப் பீடத்திடமிருந்து ஒப்புதல் பெற்றுத் தங்கள் பொறுப்பில் உள்ள நிலப்பகுதிகளில் இதைப் பயன்படுத்தலாம்.149
இலத்தீன் மொழியிலோ ஒப்புதல் பெற்ற தாய்மொழிகளிலோ தயார் செய்யப்பட்ட உரோமைத் திருப்பலி நூல் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்.
390. இந்தப் பொதுப் படிப்பினையிலும் திருப்பலி அமைப்புமுறையிலும் குறிக்கப்பட்டுள்ள தழுவியமைத்தல்களைப் பற்றித் தீர்மானிப்பது ஆயர் பேரவைகளின் கடமை ஆகும். இதற்கு உரிய திருத்தூது ஆட்சிப் பீடத்திடமிருந்து ஒப்புதல் பெற்று, அவை உரோமைத் திருப்பலி நூலிலேயே சேர்க்கப்படும். அவையாவன:
147 காண். திருவழிபாடு, 14.
148 காண். மேற்படி, 41.
149 காண். திச 838$3.
==============↑ பக்கம் 95
– நம்பிக்கையாளரின் சைகைகளும் உடலின் நிலைகளும் (காண். மேலே எண் 43);
– பீடத்துக்கும் நற்செய்தி வாசக நூலுக்கும் உரிய வணக்கச் சைகை (காண். எண் 273);
– வருகைப் பாடல்கள், காணிக்கைப் பாடல்கள், திருவிருந்துப் பாடல்கள் (காண். மேலே எண். 48, 74, 87);
– தனிப்பட்ட சூழ்நிலைகளுக்காகத் திருநூலிலிருந்து எடுக்கப்படும் வாசகங்கள் (காண். மேலே எண் 36 2)
– அமைதி அடையாளத்தை வெளிப்படுத்தும் முறை (காண். மேலே எண் 82);
– தூய நற்கருணையை வாங்கும் முறை (காண். மேலே எண். 160, 283);
– பீடத்துக்கும் கோவில் பொருள்களுக்கும் குறிப்பாக, திருக்கலங்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள், வழிபாட்டுத் திருவுடைகளுக்கான பொருள்கள், வடிவமைப்பு, நிறம் ஆகியவை (காண். எண். 301,326, 329, 339, 342-346).
ஆயர் பேரவைகள் பயன்படக்கூடியவை எனக் கருதும் விதிமுறைகளை அல்லது அருள்பணி அறிவுரைகளைத் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதல் பெற்று உரோமைத் திருப்பலி நூலில் பொருத்தமான இடத்தில் சேர்க்கலாம்.
391. ஆயர் பேரவைகள் தனிப்பட்ட கவனம் செலுத்தி, திருப்பலிக் கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் விவிலியப் பகுதிகளை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருநூலிலிருந்து தான் வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன; மறையுரையில் அவை விளக்கப்படுகின்றன; திருப்பாடல்கள் பாடப்படுகின்றன. மன்றாட்டுகளும் இறைவேண்டல்களும் திருவழிபாட்டுப் பாடல்களும் விவிலியத்திலிருந்துதான் உள்ளுணர்வும் தூண்டுதலும் பெறுகின்றன. விவிலியத்திலிருந்து திருவழிபாட்டுச் செயல்களும் அடையாளங்களும் தம் பொருளைப் பெறுகின்றன.150
அவற்றின் மொழிநடை நம்பிக்கையாளர் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும். அது பொது அறிக்கையிடலுக்கு ஏற்றதாகவும் இருத்தல் வேண்டும். அதே சமயம் விவிலிய நூல்களில் காணப்படும் வெவ்வேறு வகைகளில் பேசும் சிறப்புப் பண்புகளைக் கையாளுதல் பொருத்தம் ஆகும்.
392. ஆயர் பேரவைகள் பிற பாடங்களை மொழிபெயர்க்கும்போது அக்கறையுடன் ஆய்ந்து செய்தல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு மொழியின் தனித்தன்மையை மதித்துச் செயல்படினும், இலத்தீன் மூல பாடத்தின் பொருளை முழுமையாகவும் மாறாமலும் தர வேண்டும். இப்பணியைச் செய்யும்போது திருப்பலியில் பயன்படுத்தப்படும் பல்வேறு இலக்கிய வகைகளான வழிபாட்டுத் தலைவரின் மன்றாட்டுகள், முன்மொழிகள், ஆர்ப்பரிப்புகள், பதிலுரைகள், மன்றாட்டு மாலைகள் இன்னும் பிறவற்றையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
பாடங்களை மொழிபெயர்ப்பதன் முதல் நோக்கம் தியானம் செய்வதற்காக அன்று; மாறாக, நடைபெறும் கொண்டாட்டத்தின்போது அவற்றை அறிக்கையிடவோ பாடவோ வேண்டும் என்பதற்காக எனும் நோக்கினை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நிலப்பகுதியைச் சார்ந்த நம்பிக்கையாளருக்கு ஏற்ப மொழிநடை பயன்படுத்தப்பட வேண்டும். அதே சமயத்தில் அது மேன்மையும் இலக்கிய நயமும் கொண்டிருக்க வேண்டும் சில சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் விவிலியம், கிறிஸ்தவ சமயம் ஆகியவற்ற’ “” பின்னணியில் பொருள் கூறுவதற்கு மறைக்கல்விப் பாடமும் தேவைப்படும்.
150 காண். திருவழிபாடு, 24.
==============↑ பக்கம் 96
இயலும்போதெல்லாம் ஒரே மொழி பேசும் நிலப்பகுதிகளில் திருவழிபாட்டுப் பாடங்களிலும் குறிப்பாக விவிலியப் பாடங்களிலும் திருப்பலி அமைப்புமுறையிலும் ஒர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துதல் உண்மையாகவே நன்மை பயக்கும்.
393. திருப்பலிக் கொண்டாட்டத்தில் பாடுதல் திருவழிபாட்டுக்குத் தேவையானதும் அதை மழுமைப்படுத்தும் பகுதியாகவும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.” இதனைக் கருத்தில் கொண்டு, திருப்பலி அமைப்புமுறையில் மக்களின் பதிலுரைகளுக்கும் ஆர்ப்பரிப்புகளுக்கும் திருவழிபாட்டு ஆண்டுக் காலத்தில் வரும் தனிப்பட்ட சடங்குகளுக்கும் உரிய பாடல் பகுதிகளுக்கான பொருத்தமான இசைக்கு ஒப்புதல் அளிப்பது ஆயர் பேரவைகளின் கடமை ஆகும்.
இசை வடிவங்கள், பண்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றில் எவை ? பயன்பாட்டுக்குத் தகுதி வாய்ந்தவை அல்லது தகுதி பெறக் கூடியவை என்றறிந்து அவற்றைத் திருவழிபாட்டில் ஏற்றுக்கொள்வது பற்றித் தீர்மானிப்பது ஆயர் பேரவைகளின் பொறுப்பு ஆ9″
394. ஒவ்வொரு மறைமாவட்டமும் தனக்கெனத் திருவழிபாட்டுக் குறிப்பேட்டையும் தனக்கு உரிய திருப்பலிகளையும் தயாரிக்க வேண்டும். ஆயர் பேரவை தேசிய அளவில் தனக்கு உரிய திருவழிபாட்டுக் குறிப்பேட்டையோ அல்லது வேறு ஆயர் பேரவைகளோடு இணைந்து பரந்த ஆட்சிப் பகுதிகளுக்கு உகந்த திருவழிபாட்டுக் குறிப்பேட்டையோ ஏற்பாடு செய்ய வேண்டும். இவை திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதல் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.153
இதைச் செயல்படுத்தும்போது கூடுமானவரையில் ஆண்டவரின் நாளை முதன்மை விழாவாகப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும். ஆதலின் பிற கொண்டாட்டங்கள் மிகவும் முக்கியமானவையாய் இருந்தாலன்றி, ஆண்டவரின் நாளில் முன்னிடம் பெறா.154 அதே போன்று இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கட்டளை ஆவணத்தால் சீரமைக்கப்பட்ட திருவழிபாட்டு ஆண்டு, இரண்டாம் தரக் கூறுகளால் மங்கிவிடாதிருக்கக் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் திருவழிபாட்டுக் குறிப்பேட்டைத் தயார்செய்யும்போது “மன்றாட்டு” நாள்களையும் திருவழிபாட்டு நான்கு காலங்களையும் குறித்து (காண். எண் 373) அவற்றைக் கொண்டாடுவதற்கான அமைப்புகள், பாடங்களையும் குறிப்பிட வேண்டும். 155 வேறு சில தனிப்பட்ட வரையறைகளையும் மனதில் கொள்ள வேண்டும்.
திருப்பலி நூல் வெளியிடப்படும்போது, நாடு முழுவதற்கோ ஒர் ஆட்சிப் பகுதிக்கோ உரிய கொண்டாட்டங்களைப் பொதுவான திருவழிபாட்டுக் குறிப்பேட்டில் சரியான இடத்தில் சேர்ப்பது பொருத்தம் ஆகும். ஒரு நிலப்பகுதிக்கோ மறைமாவட்டத்துக்கோ உரியவை தனிப்பட்ட பிற்சேர்க்கையில் இடம்பெற வேண்டும்.
395 இறுதியாக, புனித கொண்டாட்டம் பல்வேறு மக்களின் பண்பாட்டுக்கும் மரபுகளுக்கும் பொருந்து மாறு நம்பிக்கையாளரின் பங்கேற்புக்கும் அவர்களின் ஆன்மீக நலனுக்கும் பல்வேறு விதமான ஆழ்ந்த தழுவியமைத்தல்கள் தேவைப்படின், ஆயர் பேரவைகள் திருவழிபாட்டுக் கொள்கைத் திரட்டின் 40-ஆம் பிரிவுக் கூற்றின்படி திருத்தூது ஆட்சிப் படத்துக்கு அவற்றை முன் மொழிந்து, அதன் ஒப்புதலோடு அவற்றை நடைமுறைப்படுத்தலாம்.
151 காண். மேற்படி, 3683. 15 2 காண். மேற்படி, 112.
காண். Normae Universales de Anno liturgico et de calendario, எண். 48-51, பக். 99; திருவழிபாட்டுக்
ஈயம், Calendaria particularia, 24.06.1970, எண், 4, 8: A.A.S. 62 (1970) பக். 652-653.
153 காண். N திருப்பேராயம், கே
54 காண். திருவழிபாடு, 106.
ண். Normae Universales de Anno liturgico et de calendario, எண் 46, பக். 98; திருவழிபாட்டுச் யம், Calendaria particularia, 24.06.1970, எண் 38: A.A.S. 62 (1970) பக். 660.
155 காண், Norw திருப்பேராயம், Calent
==============↑ பக்கம் 97
சிறப்பாக, அண்மையில் நற்செய்தி அறிவிக்கப்பட்ட மக்களிடையே நடைமுறைப்படுத்தலாம்.156 “உரோமைத் திருவழிபாடும் பண்பாட்டுமய மாக பற்றிய போதனையில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு விதிகளைக் கவன. கடைப்பிடிக்க வேண்டும்.157
இதைச் செயல்படுத்தும்போது பின்வரும் வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டி முதன்முதல் திருத்தூது ஆட்சிப் பீடத்துக்குமுன் வைக்கப்படும் முதற்கட்டப் பரிந்துரை விரிவானதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்து தேவையான அனுமதி பெற்றபின் தழுவியமைத்தலின் தனித்தனிக் குறிப்புகளையும் வரிசைப்படுத்தி நடைமுறைப்படுத்தக் தொடங்கலாம்.
திருத்தூது ஆட்சிப் பீடத்திலிருந்து முறையான ஒப்புதல் பெற்றபின், இப்பரிந்துரைகள் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கால அளவில் பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பரிசோதனைச் செயல்முறைக் காலம் முடிந்தபின், தேவைப்படின் ஆயர்களின் பேரவை தழுவியமைத்தல்களைத் தொடர்ந்து செய்வது பற்றி முடிவு செய்யும். இது குறித்து முழுமையான வடிவமைப்பு அறிக்கையைத் திருத்தூது ஆட்சிப் பீடத்துக்கு அனுப்பி அதனுடைய தீர்ப்பைக் கோரும்.158
396. சிறப்பாக, புதிய தழுவியமைத்தல்களை, முழுமையாகச் செயல்படுத்தும் முன் அருள்பணியாளர்களும் நம்பிக்கையாளரும் அறிவார்ந்த, முறையான வகையில் இவை ஒவ்வொன்றையும் பற்றி ஒழுங்கு முறையுடன் நன்கு அறிந்துகொள்ள மிகுந்த அக்கறையுடன் வழிவகை செய்யப்பட வேண்டும். இதனால் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டாட்டத்தின் உள்ளுணர்வுக்கு ஏற்ப அருள்பணி விதிமுறைகளை முழுமையாகச் செயல்படுத்த முடியும்.
397. மேலும் ஒவ்வொரு தலத் திரு அவையும் நம்பிக்கைப் படிப்பினையாலும் அருளடையாளங்களாலும் மட்டுமன்றி, முறிவுபடாத திருத்தூது மரபினால் உலகளாவிய வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடுகளாலும் அனைத்துலகத் திரு அவையோடு இசைந்திருக்க வேண்டும் என்றுணர்த்தும் கோட்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். திரு அவையின் இறைவேண்டலின் அடிப்படை விதி நம்பிக்கையின் அடிப்படை விதிக்கு ஒத்திருப்பதால், தவறுகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமன்று, நம்பிக்கை முழுமையாக ஒப்படைக்கப்படுவதற்காகவும் இவற்றைப் பாதுகாத்து வர வேண்டும். 159
திருவழிபாட்டின் கருவூலம், கத்தோலிக்கத் திரு அவையின் மரபுச் சொத்து இவற்றின் குறிப்பிடத்தக்கதும் மிக மேன்மையானது மான பகுதியாய் உரோமைத் திருச்சடங்குமுறை அமைந்திருக்கின்றது. அதன் செல்வங்கள் அனைத்துலகத் திரு அவைக்குப் பயன் அளிப்பவை. எனவே அவற்றின் இழப்பு, திரு அவைக்குப் பெரிதும் தீங்கிழைக்கும்.
காலங்காலமாக உரோமைத் திருச்சடங்குமுறை உரோமை நகரில் தோன்றிய திருவழிபாட்டு வழக்கங்களைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் வேறு சில ஆழ்ந்த, உள்ளார்ந்த, ஒத்திசைவான பயன்பாடுகளை யும் தன்னில் உள்ளடக்கியுள்ளது.
156 திருவழிபாடு, 37-40. 54, 62-69: A.A.S. 87 (1995) பக். 30830 11
157 காண். திருவழிபாட்டு, அருளடையாளங்களின் பேராயம், Varietates legitimae, 25.01.18
==============↑ பக்கம் 98
அவை யாவும் பல்வேறு மக்களின் மரபுகள், பண்பாடு ஆகியவற்றிலிருந்தும் கீழை, மேலை நாட்டுப் பல்வேறு தலத் திரு அவைகளிலிருந்தும் பெறப்பட்டவை ஆகும். இந்த வகையில் உரோமைத் திருச்சடங்குமுறை ஒரு நிலப்பகுதியைக் கடந்த பண்பைப் பெற்றுள்ளது. இச்சடங்கின் தனித்தன்மையும் ஒருமைப்பாட்டை உணர்த்தும் தன்மையும் தலைமை ஆயர் அதிகாரப் பூர்வமாக வெளியிட்ட திருவழிபாட்டு நூல்களின் மாதிரிப் பதிப்புகளில் காணக்கிடக்கின்றன. ஆயர் பேரவைகள் திருத்தூது ஆட்சிப் பீடத்தின் ஒப்புதலுடன் தங்களுடைய ஆட்சிப்பகுதிகளுக்கென ஒப்புதல் அளித்து வெளியிடும் இப்பதிப்புக்கு ஒத்திசைவான திருவழிபாட்டு நூல்களிலும் அவற்றைக் காணலாம்.”
398. திருவழிபாட்டைச் சீரமைக்கும்போது, உண்மையாகவும் திண்ண மாகவும் திரு அவையின் நலனுக்குத் தேவைப்பட்டாலொழிய புதிய மாற்றங்களைப் புகுத்தக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் அமைப்புகளிலிருந்து புதிய அமைப்புகள் ஒரு விதத்தில் உள்ளார்ந்த தொடர்புடைய முறையில் தோன்றி வளர வேண்டும்” என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் நிறுவப்பட்ட விதிமுறை உரோமைத் திருச்சடங்கைப் பண்பாட்டு மயமாக்கும் முயற்சிகளுக்கும் பொருந்தும்.162 மேலும் உண்மையான திருவழிபாட்டு மரபு அவசரமான, மற்றும் கவனக் குறைவான செயலால் தூய்மை கெடாமலிருக்கப் பண்பாட்டுமயமாக்கலுக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது.
இறுதியாக, பண்பாட்டுமயமாக்கலைத் தொடர்வதன் நோக்கம் எவ்வகையிலும் புதிய வழிபாட்டு முறைக் குழுமங்களை உருவாக்குவது அன்று, மாறாக ஒரு குறிப்பிட்ட பண்பாட்டைச் சார்ந்த தேவைகளை நிறைவு செய்வதற்காகவே. திருப்பலி நூலிலோ மற்றத் திருவழிபாட்டு நூல்களிலோ புகுத்தப்படும் தழுவியமைத்தல்கள் உரோமைச் சடங்கின் தனிப் பண்பைச் சிதைக்கும் வகையில் அமையக் கூடாது.163
399. ஆதலின் உரோமைத் திருப்பலி நூல் வெவ்வேறு மொழிகளிலும் வேறுபட்ட சில பண்பாட்டு மரபுகளிலும் பயன்படுத்தப்பட்டாலும் 164 அது எதிர்காலத்தில் உரோமை வழிபாட்டு முறையின் முழுமை, ஒற்றுமை ஆகியவற்றின் கருவியாகவும் மிகத் தெளிவான அடையாளமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். 165
160 காண். இரண்டாம் ஜான் பால், Vicesimus quintus annus, 04.12.1988, எண் 16: A.A.S. 81 (1989) பக். 912; திருவழிபாட்டு, அருளடையாளங்களின் பேராயம், Varietates legitimae, 25.01.1994, எண். 2, 36: A.A.S. 87 (1995) பக். 288, 302.
161 காண். திருவழிபாடு, 23.
162 காண். திருவழிபாட்டு, அருளடையாளங்களின் பேராயம், Varietates legitimae, 25.01.1994, எண் 46: A.A.S. 87 (1995) பக். 306. 13 காண். மேற்படி, 36: A.A.S. 87 (1995) பக். 302.
* காண். மேற்படி, 54: A.A.S. 87 (1995) பக். 308-309,
==============↑ பக்கம் 99
